திங்கள், 28 மார்ச், 2016

ஈழ சினிமா எனது பார்வையில் ..அஞ்சரன்

ஒரு விஷயம் மட்டும் விளங்கவில்லை சினிமா என்பதுகூட ஒரு கலை இலக்கியத்தின் காட்சி வடிவம் தானே ஆக,நாம் சொல்லவரும் செய்திகள் மக்கள் மத்தியில் எவ்வாறு போய் சேர்க்கிறது அதை எப்படி சேர்ப்பது என்பது ஒரு கதை சொல்லியின் அதாவது (இயக்குனர்) கற்பனையில் விரியும் கனவை கமராவில் கொண்டுவந்து கொடுப்பன் ஒளிப்பதிவாளன் இது ஒரு கூட்டு இலக்கிய புனைவு போல தான் சினிமா,பாலுமகேந்திராவின் சினிமாவின் வெற்றி அவரே இயக்குனர் ஆகவும் ஒளிப்பதிவாளனாகவும் இருந்தது,பாரதிராஜா கிராமத்தை விட்டு வெளியில் வராமல் படம் எடுத்து அப்படி வெளியில் வந்து அவர் எடுத்த "கண்களால் கைது செய்" படம் தோல்வி படமாகியது; எனவே வியாபார சினிமா என்பது பொழுது போக்கை அடிப்படையில் கொண்டுருந்தாலும் அதில் ஒரு மூலையில் மனதை விட்டு அகலாத ஒரு காட்சி இருக்கணும் அதுதான் அந்த சினிமாவின் உயிர் கதையாக பேசப்படும்...........

ஆனால் எமக்கு இருக்கும் ஒரு அடிப்படை பிரச்சினை கற்றறிய முன்னமே நாம் எம்மை ஈரானிய படங்களுக்கும் உலக தர படங்களுக்கும் ஒப்பிட்டு பேசுவதும் ,அதன் தரங்களுடன் நாம் என போட்டி போட முடியாது என்னும் பெரும் கேள்வியை தூக்கி சுமப்பதும் தான்........

எம்மில் புதிதாக வரும் படைப்பாளிகள் ஒரு சிறுகதை எழுதி அது ஓர் பெயர், அல்லது அடையாளம் கொடுத்தாலே போதும் பெரும் இலக்கிய எழுத்தாளர்களை கூட அவர் எழுதுவது இலக்கியம் இல்லை, புனைவு இல்லை, எழுத்து வட்டமாக இருக்கிறது என்னும் அதீத விமர்சனம் செய்யும் போக்கே இருக்கிறது அவைகள் ஆரோகியமான கூட்டு செயல்பாடுகளுக்கு எப்பொழுதும் வழியமைத்து கொடுக்காது,சினிமா என்பது ஒரு பெரும் கூட்டு செயல்பாடு அது எல்லோரின் உழைப்பும் வெற்றி என்னும் இலக்குடன் இருக்க வேணும் அப்பொழுதுதான் அது முழுமை பெரும் வெற்றி அடையும்.....

முதலில் நாவலாக இருந்தாலும் சினிமாவாக இருந்தாலும் எடுத்தவுடன் பெரும் பெயர்களுடன் பொருத்தி பார்க்காது, (எடுத்தால் ஈரானியப்படம் போல எழுதினால் பிரஞ்சு எழுத்தாளன் போல)என இல்லாமல் ஈழ சினிமா தனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும் அதற்கு உண்மையில் ஓரளவாவது கற்றறிந்து கொண்டு அந்த அத்துறையில் இளையவர்கள் வரவேண்டும் ,ஆனால் நாம் கண்கூட பார்க்கும் சினிமா அவ்வாறு இல்லை கமரா உள்ளவன் எல்லாம் படம் எடுக்கலாம் என்னும் நிலையும் ,கதையாடா முக்கியம் பெயர் வரணும் என்பதற்கு இந்திய சினிமாவை கொப்பி பண்ணி "லொள்ளு சபா" தரத்தில் படம் எடுப்பதும் தானே நிகழ்வாக இருக்கிறது.....

ஆக ஈழ சினிமா ஆரோக்கியமான பாதையில் பார்த்து பார்த்து செதுக்கும் சிலையாக வடிவம் பெறுமாயின் கண்டிப்பாக அதை மேன்படுத்த தயாரிக்க பலர் முன்வருவார்கள் பொருளாதார உதவிகள் புரிவார்கள் என்பது எமதெண்ணம்....

அதை விடுத்து பேஸ்புக் ,யூடிப் இருக்கிறது ப்ரியா, எதையும் சும்மா ஏற்றி விடலாம் என நினைத்து சினிமா எடுத்தால் அது கண்டிப்பாக காணாமல் போகும்,உதாரணம் அண்மையில் ஒருவர் எடுத்த படம் பல விமர்சனம் எழுந்தும் கூட அவர் சொன்ன பதில், அப்ப நீ வந்து நல்லபடம் எடு ,அல்லது மூடிட்டு படு, என்பதாகவே இருந்தது ,இவ்வாறான இயக்குனர்கள் பிழைகளை சரி செய்யாது மேல போவார்கள் என நினைப்பதும் ,சரி பெடியனிடம் விஷயம் இருக்கு என பணத்தை கொடுத்தவர்கள் இனியும் இவ்வாறன செயலுக்கு பணம் உதவி செய்வார்களா என்பதை அவர்களின் படைப்பு தான் முடிவு எடுக்கிறது...

ஆக வியாபார சினிமா பற்றி யோசிக்கமுன் ஈழ சினிமா படைப்பாளிகள் முதலில் தரமான ஒரு உரையாடல் சினிமா கட்டமைப்பை உருவாக வேண்டும் அதனூடாக பல தரமான ஈழ சினிமாவை கொடுக்க முடியும்.

முடியாது என எதுவும் இல்லை முயன்றால்.