வியாழன், 22 அக்டோபர், 2015

வேர் இருக்கு .

கிளைகளை வெட்டி விட்டேன் 
பக்கத்துவீட்டுக்காரன் ஒரே சத்தம் 
காணியை கடத்து கொப்பு வருவதாக 
மீண்டும் மீண்டும் துளிர்த்து 
அத்திசையே  போகிறது  
கொஞ்சம்  யோசிச்சேன் 
மரம் இருந்தால் தானே 
மாதம் மாதம் வெட்டும் வேலை 
நச்சரிப்பு தாங்கும் எண்ணம் இல்லை 
இனி 
ஆதலால் மரத்தை அறுத்து விட்டேன் 
அட  ஆறுதலா அமரும் இடம் 
எந்த போக்கத பயல் வெட்டியது 
பக்கத்துக்கு  வீட்டு  கிழவி இது 
ஒம்மென ஆச்சி என்றால் பேத்தி 
எதிரில் வந்த வேலிக்காரன் 
ஏன் மரத்தை வெட்டினியல் என்றான் 
இருக்கும் போது என்னை 
நீ 
இருக்க விட்டியா இப்ப சோகம் 
வேர்  இருக்கு மீண்டும் துளிர்க்கும் 
கிளை என் பக்கம் வரட்டும் 
பிள்ளைக்கு ஊச்சல் கட்டனும் 
இது அவன் 
சேர்த்து இருத்து கதை  பேசலாம்
இனி  
இது நான் .

புதன், 14 அக்டோபர், 2015

காட்சிகள் பேசும் தருணம் .2






காட்சிகள் பேசும் தருணம் .






வித்தியா வாடாத பூ .

எல்லாம் மறந்தாயிட்டு 
என்றில்லை மறைந்து வாழ்கிறேன் 
சிரித்தபடி கடந்து போகலாம் 
வலி இருப்பது உள்ளே அல்லவா 
இன்ப திளைப்பில் கூட 
ஒன்றிட முடியாத ரணம்
சொல்கொண்டு வருவாள்
சிலவேளை
அரசியல் கொண்டு வருவாள்
பலவேளை
எதிர்காலம் பற்றி அதிகம் பேசுவாள்
முடிவு எடுக்க பேசலாம் ஆனால்
முடிவை எடுத்து விட்டு வந்தால்
தன் முடிவில் முடியும் வரை
பேசுவாள்
விடியோவில் ஆள் தெரியவில்லை
ஆளா முக்கியம் குரல் கேட்குது தானே
பதில் வரட்டும் என்பாள்
எங்க வளைச்சு பந்தை போட்டாலும்
எல்லைகோடுகள் தாண்டி போகும்
நீ ஒருத்தி மட்டும் போது
என்னுள் இருந்த இறுமாப்பு
கதைக்க விடாமல் கதைப்பாய்
இன்று தவிக்க விட்டு போனாய்
நாளை பொழுதுகள் ஒவ்வென்றும்
சர்ப்பம் வாய் தவளைபோல் நாம்
உன் கேள்விகளுக்கு தான் என்னிடம்
விடையில்லை
உன் தீர்ப்பில் மட்டும் என்னிடம் விடையிருக்கு
காலச்சக்கரம் சுழண்டு வரட்டும்
காத்திருப்போம் வன்மத்துடன் மகளே .

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

ஒரு தலைமையை உருவாக்க வேணும் .

விடுதலைப்புலிகள் என்னும் அமைப்பு ,அதன் தலைவர் பிரபாகரன் வழிநடத்தல் இல்லாமல் போன பின் ,அந்த அமைப்பு அல்லது நாம் தான் புலி என சொல்பவர்கள் பின்னாடி போவதற்கு மக்கள் தயாராக இல்லை என்பதை, இந்த ஈழ தேசியவாதிகள் ,நாம் தான் அடுத்த புலிகள் என சொல்பவர்கள் புரிந்து கொள்ளவேணும் .....

நீங்கள் இனி ஈழ தேசியத்துக்கு உண்மையானவர்களாக ,நேர்மையுடன் உழைக்கலாமே தவிர நாம் சொல்வதை, நாம் காட்டும் பாதையில் தான் இனி ஈழ தமிழர் நடக்க வேணும் என நீங்கள் போடும் கணக்கு தவறு ....

அந்த நேர்மையும் ,உறுதியும் ,கொள்கை பற்றும் பிரபாகரன் என்னும் ஒரு மனிதனுக்கே இருந்தது ,இனி நீங்கள் அவரை உதாரணமாக கொண்டு நடக்க முனையவேண்டும் அதை விட்டு நாம் தான் ஈழ மீட்ப்பர்கள் எங்கள் பின்னாடி வாருங்கள் ,நாம் சொல்வதை கேளுங்கள் ,நாம் எதிர்ப்பவனை எல்லாம் எதிர்த்து நில்லுங்கள் என கட்டளை இடுவதை நிறுத்தினால் நல்லது ...

முன்னாள் போராளிகளாக இருந்தாலும் சரி ,தளபதிகளாக இருந்தாலும் சரி இனி நீங்கள் மக்களில் ஒருவர் ,ஆகவே மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்ய முனைய வேணும் அதை விட்டு, இப்படி செய் அப்படி செய் என புலம்பெயர்த்து இருந்துகொண்டு நாட்டில் உள்ளவனை மேய்க்கா எத்தனிப்பது பிழையான சிந்தனை .....

அரசியல் போராட்ட வழிகளில் இன்னும் ஒரு பத்து வருடத்தில் ,இதே ஐநா எமக்கு சாதகமா மாறலாம் அதுக்காக இன்னும் உழைக்க வேண்டிய தேவை இருக்கு ,அதை விட்டு அவன் பிழை, இவன் பிழை, அவனை ஆதரி , இவனை ஆதரி ,நாம் சொல்வதை கேள் என்று, அதி உச்ச தேசியவதிகளாக காட்ட நினைப்பவர்கள் நிறுத்த வேண்டிய காலம் இது ....

ஒன்றில் இணைத்து கூட்டு வேலை செய்யுங்கள்,அல்லது ஒதுங்கி ஓரமா இருங்கள் குட்டையை குழப்பி விட்டு வேடிக்கை பார்க்காமல் ,அங்கு துடிப்பது தமிழர் என்னும் மீன்கள் தான் என்பது உங்களுக்கு நன்கு தெரியும் ...
யார் குற்றியாவது அரிசி ஆகட்டும் .

வலி மிகு தருணம் .

மீட்டுக்கொண்டே இருக்கிறேன்
இசையை அல்லா நினைவை
பழையவை தான் ஆனாலும்
அவை விட்டு போன வடுக்கள்
சாகாவரம் பெற்றவை .....

இசை அறிந்து பாடல் சொல்வோம்
ஒரு வயது காலம்
இரைச்சல் வைத்து விமானம் எதுவென
சரியாக சொன்ன காலம் அது
சன்னங்களின் சத்தம் கேட்டு என்ன
வகை ஆயுதம் என கணித பொழுதுகள் ...

இன்று கிண்ணத்தில் விழும் துளி சத்தம்
வெளியில் அடைமழை என சொல்லும்
எண்ணிய எண்ணத்தில் இரத்தம்
இன்னும் உடலில் இருக்குதாம்
சிறு துண்டு குண்டு ...

தாங்கி தாங்கி வலிகளை சுமந்து
தாங்காது என அறிந்தும் வலிமை பெற்று
தங்களுக்கு வாழும் காலம் வந்த போது
தங்களுக்கு வாழ்வில்லாமல் போனதே
இன்னும் துயர் சுமந்து .