புதன், 12 அக்டோபர், 2016

விரல் நீட்டுவதை நிறுந்துங்க மேதைகளே.

இலங்கைதீவில் தமிழர்களுக்கான உரிமை சம அந்தஸ் என்பது எல்லாம் இலங்கை சுகந்திரம் அடைவதற்கு முன்னமே பேசத்தொடங்கி போராட தொடங்கி நடந்து வருகிறது என்பது வரலாறு,இது இலங்கை சுகந்திரம் பெற்றபின்னும் சிங்கள பெரும்பான்மை சமூகம் தங்களின் நலனும் நலன் சார்த்தும் எடுத்த முடிவுகளும்,அதற்காக உருவாகிய யாப்பு முறையுமே தொடர்த்து சிறுபான்மை இனங்கள் தங்கள் உரிமைக்கு போராடும் நிலையில் கொண்டு செல்கிறது.

ஆக அதற்கான ஓர் தீர்வினை எட்டி வரும் காலமும் வரும் தலைமுறையும் ஒரு சுபீட்சமான வாழ்விற்கு செல்வதற்கு அடிப்படையில் உள்ள இன முரணின் தோற்றம் களையப்பட்டு நிவர்த்தி செய்யவேண்டிய தேவை தமிழர்களை விட சிங்களவர்களுக்கு தான் அதிகம் இருக்கிறது,எந்நேரமும் ஒரு பதட்டமும் உசார் நிலையம் எவரையும் நம்பாத போக்குடன் சிங்களம் எவ்வளவு காலத்துக்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்துட முடியும்,அதன் போக்கை மாற்றும் அல்லது இன்னொரு ஆயுத போருக்கு வழியமைக்க கூடாது என்னும் நிலையில் தான் ஒருகாலமும் சேராது இருந்த இரண்டு பெரும் தேசிய கட்சிகள் உள்பகை,உள் முரண் பாராது மன ரோஷம் எல்லாம் விட்டு ஒன்று சேர்த்து ஆட்சி செய்யும் நிலையும்,அதனூடாக அதிக பெரும்பான்மை பெற்று தாம் நினைத்த,யாப்பு திருத்தம் சட்ட மூலங்களை பாராளுமன்றில் வெற்றி பெற வைக்க முடியும் என்னும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் இந்த ஆட்சி மாற்றமும் அரசின் இன பிரச்சினைக்கான தீர்வின் ஒரு முன் ஏற்பாடும் ஆக இருக்கிறது.

இவைகள் எல்லாம் கால இழுத்தடிப்பாக இருந்தாலும் கூட வரும்கால இலங்கையின் நலன் கருதி இவ்வாறான முடிவுகளை எடுக்க வேண்டிய தேவை சிங்கள தலைமைகளுக்கு கட்டாயம் என்னும் நிலை இருக்கிறது,அல்லது போனால் உலக வல்லரசுகளின் அதிகார போக்கில் சிக்கிசீரழிந்து இரு இனங்களும் நிம்மதி அற்று வாழும் ஒரு நிலையே உருவாகும்,ஆதலால் தான் ஒற்றை ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டுவந்து சமஸ்டி பற்றி பேசும் அது பற்றி சிங்கள மக்களுக்கு விளக்கும் வேலைகளை மெதுவாக செய்ய தொடங்கி இருக்கிறது சிங்களம் அதன் தலைமைகளும்.

ஆனால் தமிழர்கள் மட்டும் இன்னும் ஆயிரம் வருடங்கள் போனாலும் தங்களுக்குள் இருக்கும் உள் பகை,பழிவாங்கல்,சாதிய பேச்சு என காட்டுவாசிகள் போல உலாவருவது காண முடிகிறது,இங்கு உள்ள பிரச்சினை யாதெனில் நான் மட்டுமே பேசவேண்டும் என்பதும்,நான் மட்டுமே வழிநடத்த வேண்டும் என்பதும்,நான் மட்டுமே தலைவனாக இருக்கு தகுதியுள்ளவன் என்பதும்,நான் மட்டுமே அறிவாளி என்பதும்,நான் மட்டுமே படித்த மேதாவி என்பதுமாக தமிழர்களிடம் காலம் காலம் கடத்தப்படும் ஜீனில் இருந்து தொடர்கிறது இந்த போக்கு.

என்றைக்கும் நாம் எவரையும் குறிப்பாக தமிழ் தலைமைகள் எவரையும் முன்மாதிரியாக கொண்டும்,தலைவர்களை வழிகாட்டியாக கொண்டும் ஒரு லட்சியம் ,கொள்கையில் நின்று போராடியது இல்லை இது தமிழர்களில் உள்ள ஒரு சிறப்பு அம்சம் ஆகும்,நான் ஏன் அவருக்கு கீழே நிக்கவேண்டும் என்பதும் என்னைவிட அவர் என்னத்தை பெரியதாக சாதித்தார் என்பதும் தான் இங்குள்ள உளவில் பிரச்சினை எனலாம்.

இன்றும் கூட புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் குற்றவாளிகள் ஆக்கி,பிரபாகரன் வாழ்வே தகுதியற்றவர் என நிறுவி தங்களை அந்த இடத்தில கொண்டுவந்து நிறுத்த பலர் படாத பாடு படுவதை காணலாம்,இதை அவர்கள் கச்சிதமாக செய்து முடித்தாலும் கூட இலங்கை பிரச்சினை தீர்த்து விடுமா என்னும் கேள்வியை அவர்களிடமே விட்டு விடலாம்,எல்லோரும் பிரபாகரனை விமர்சனம் செய்வதும்,சுய ஆய்வுக்கு அவரை உள்படுத்த வேண்டும் என கங்கணம் கட்டி நிக்கும் இந்த அறிவாளிகள் தங்களை ,தாங்கள் சுற்றி நிக்கும் கூட்டுக்களை,தங்களை தூக்கி வைத்திருக்கும் கைகளை முதலில் சுயஆய்வுக்கு உள்படுத்த மறுப்பதுதான் விந்தை.

நீங்கள் தமிழ் தேசியத்தை எந்தப்பக்கம் குறுக்க வெட்டினாலும் அங்கு புலிகளும், அதன் தலைமையும் கண்டிப்பாக வந்தே போகும் ஏனெனில் உங்களை விட அவர்களே தமிழர் நலனுக்கு தங்களை தியாகம் செய்து போராடியவர்கள் என்பதை நீங்கள் மறந்தாலும்,வரலாற்றை திரித்தாலும் கூட தவிர்க்கப்பட முடியாத உண்மை என்பதால்.
ஒரு இனத்தின் நலனை ஒரு அமைப்பின் நலனாக இருப்பாக பேசுவதை நிறுத்தி,மக்கள் நலன் சார்த்து பயணிக்க வேண்டிய தேவையை உணருங்கள்.


மரணத்தை பேசி.

மணியோசையில் எழுந்த பொழுதும்
குயிலிசையில் மயங்கிய பொழுதும்
சில்வண்டின் ரீங்காரத்தில் உறங்கிய பொழுதும்
சருகுகள் ஊடே எலிகளை கலைக்கும் சாரையும்
உயிர் காக்க அவை எழுப்பும் அபாய ஒலியும்
இன்னும் மண்டையின் ஓர் ஓரத்தில் நினைவில்

கட்டிலும் மெத்தையும் தலையணையும்
ஏற்காத உடல் எப்பவும் வெறும் தரை தேடி
முதுகில் புற்று புட்டி முட்ட நெளிந்து கிடந்து
உறக்கம் தொலைத்த அந்த கணப்பொழுதுகள்
ஏனோ தெரியவில்லை படு சுகமாய் இருந்ததே
உறக்கத்தில் அவன் இறந்தான் என்பது கூட
இப்பொழுதும் கனவாக தான் உள்ளது


நாகம் கடந்திருக்கும் இல்லை இது புடையன்
வெள்ளை பூரான் போட்டு இருக்கும் ..இல்லை
அடையாளம் நட்டுவக்காலி தான் ..இல்லை
ஆள் நீலம் பெரவில்லை விஷமா இருக்காது
பேசி ஒரு முடிவுக்கு வரமுன்னம் வேட்டொலி
விடை இல்லாமலே புதைக்கப்பட்டான் அவன்.