சனி, 24 செப்டம்பர், 2016

ஒரு நினைவு வந்தது.

இந்த படத்தை எதேற்சியாக பார்த்த போது ஒரு நினைவு வந்தது....
                                      தொண்ணூறுகளுக்கு முன் தீபாவளி,வருடம்,பொங்கல் என்றால் மட்டும் புது துணிகள் எடுப்பதும், தைப்பதும் என ஒரே ஆரவாரமாக இருக்கும் ஊரும்,குடும்பங்களும் உறவுகளும் ....

துணி எடுத்து ஜீன்ஸ் தைப்பதற்கு சேட் தைப்பதற்கு என்றால் யாழ்ப்பாணம் வரணும் ஊரில இருந்து,ஆஹா பஸ்சில போகபோறம் என்பது கூட ஒரு பெரும் சந்தோஷம் அம்மா கடை சந்தியில் இருந்து,இலங்கை போக்குவரத்து சபை (சிடீப்பி) பஸ்ஸில ஏறினாள் வேலணை ஊடாக வந்து மண்குப்பான் குணம் அண்ணையின் கடையில் நின்று வடை சாப்பிட்டு, மண்டைதீவு என யாழ் பஸ் தரிப்பிடத்தை அடையும்...

அப்பொழுதுகள் கூட பஸ் கரையில் கண்ணாடிப்பக்கம் இருந்து ஓடும் மின்கம்பம் எத்தனை,மரம் எத்தனை என எண்ணிக்கொண்டு வரும் போது,வேலணை புங்குடுதீவு பாலத்தில் பயணிக்கும் தருணம் இனிமை,வளைத்து வளைத்து கோலம் போட்ட களங்கண்டி ,மரக்குற்றிகளில் சிலையாக குந்தியிருந்து தூண்டில் போடும் மீனவர்,கடல் காற்று கொண்டுவரும் பாசி மணம்,களங்கண்டி தடிகள் மேலாக எறும்பு ஊருவது போல அமர்த்து இருக்கும் நீர் காகம் ,மீனை நேரம்பார்த்து குறியாக பிடிக்கும் பறவைகளின் வட்டமிடல் என அப்படியே ஒரு இயற்கை அழகை இப்பொழுது சிலாகித்து உணர முடிகிறது ,அன்நேரங்கள் அவைகள் எல்லாம் வெறும் விடுப்பும் வேடிக்கையும் மட்டுமே.

யாழில் வந்து இறங்கினால் நேரக்க செல்வது இந்த பாரிஸ் ரெக்ஸ் கடைக்கு தான்,அங்க போனால் மாமா நிப்பார் ,துணிகளை எடுத்து கத்தரிக்கோலால் இந்த முனையில் இருந்து வெட்டி கொழுவி ஒரு இழுவையில் அடுத்த பக்கம் நேராக போகும், சின்ன வயது என்பதால் பக்கத்தில் நின்று பார்ப்பது எப்படி வெட்டுறார்கள் இப்படி என கைக்குக்குள் எதாவது இருக்குமோ ,அவர்கள் போனவுடன் உடைத்து தரும் யானை சோடாவும் அப்ப அமிர்தம் , வாடா என கூட்டி போய் ஜிம்மா பள்ளிவாசல் லேனுக்குள் இருக்கும் முஸ்லீம் தையல் கடையொன்றில் அளவெடுத்து தைக்க கொடுத்து விட்டு வரும் போது,மலாயன் கடையில் வடையும் சம்பலும் கட்டிக்கொண்டு வந்து அம்மா பின்னேரம் உடுப்பையும்,பொருள்களும் வாங்கி வருவா நீங்க போங்க வீட்ட என கூட்டிக்கொண்டு வந்து.
அண்ணே இவங்களை அம்மா கடை சந்தியில் இறக்கி விடுங்க என ரைவரிடம் சொல்லி ஏற்றிவிட்டு டிக்கெட் எடுத்து தந்திட்டு போவார் மாமா.

அதிலும் யாழ்ப்பாணம் வந்தால் மட்டுமே இயக்க அண்ணைமாரை ஆயுதத்துடன் அதிகமாக பார்க்கலாம்,அவர்கள் பிக்கப் வாகனங்களில் போவதும்,சைக்கிளில் போவதுமாக இயக்க பெடியள் போயினம் என ஒருவித உணர்வு தோன்றி மறையும்,ஏனெனில் அவ்வேளைகள் அவர்கள் எங்கள் கண்களுக்கு ஹிரோக்கள்.

இந்த சந்தோஷங்கள் எல்லாம் தொண்ணூறுகளுக்கு பின்னர் இல்லாமல் போனதும்,உறவுகள் குடும்பங்கள் சிதறுண்டு பந்த பாசங்கள் அற்றுப்போனதுமாக போரும் அது கொடுத்த வாழ்வும் ,இன்று ஆளாளுக்கு ஒரு பக்கங்களில் ,ஒரு நாட்டில் இருந்து கொண்டு பேஸ்புக்கில் சுகம் விசாரிக்கும் நிலையில் வந்து நிக்கிறது கூட்டாக ஒட்டி இருந்து உறவாடிய உறவுகள் நிலை.


வலிகள் மேல் வன்ம நாக்கால் நக்காதீர்.

                    

எழுதக்கூடாது என பலமுறை எழுதி அழிந்து விட்டு நிம்மதி அற்று உறங்க போயிருக்கிறேன்,காரணம் வேறு ஒன்றும் இல்லை எங்க பல்லை குற்றி நாங்களே ....கூடாது என்பதால்...

ஆனாலும் இன்று அதன் கதையின் வேகமும்,அவர்களின் செயலும், அதன்னூடே எழும் கேலிகள், கிண்டல்கள் ,பேச்சும்,உங்கள் தினவெடுத்த தினாவெட்டுக்களை என் எழுத்து கோல் முனை கொண்டு முறிப்பது அன்றி வேறு ஒன்றும் வழியில்லை எனக்கு....

வித்தியாவின் மரணம் நிகழத்த பின் எழுந்த மனிதாபிமான அலையை ,அதன் உணர்வு பூர்வமான போராட்டங்களை ,அக்குடும்பத்துக்கு உறுதுணையாக நின்ற அனைத்து மக்களும்,நிறுவனங்களும் அமைப்புக்களும்,சமூக ஆவலர்களுக்கும் ,நாம் என்று கடமையுடனே இருக்கிறோம் இருப்போம்....
அதன் இடைவெளில் வித்தியா குடும்பத்துக்கு உதவுறம் என வெளிநாட்டு வாழ் புங்குடுதீவு உறவுகள்,ஒன்றியங்கள் ,சங்கங்கள் வெளிப்படையில் இட்ட அறிக்கைகள் பேச்சுக்கள் பெரும்பாலும் அனைவரும் காதுகள் ஊடாக பாதுகாக்கபட்டது என்பதையும் அனைவரும் அறிவார்கள்....

இவ்வாறன செயல்பாட்டின் அடிப்படையில் கனடா "புங்குடுதீவு பழையமாணவர் சங்கம்"ஒரு தொகை நிதியை சேகரித்து இருக்கிறது அது போல் லண்டனில் ஒரு சில தனிநபர்கள் வித்தியாவின் உறவுகள் என சொல்லி நிதி சேகரித்து உள்ளார்கள்,மற்றது சுவிஸில் உள்ள உறவுகளும் சொந்தம் என சொல்லி நிதி சேகரித்து உள்ளார்கள்,ஆனால் இவர்கள் சேகரித்த நிதி வித்தியா குடும்பத்துக்கு கொடுக்கபடவில்லை,இப்ப பிரச்சினை இவர்கள் எமக்கு தரவில்லை என்பது இல்லை இவர்கள் வாங்கிய காசு வித்தியா பெயரை சொல்லி வாங்கியது தான் எமக்கான நெருடல், பிரச்சினை, வேதனை......

வெளிநாட்டில் இருந்து வித்தியா குடும்பத்துக்கு புங்குடுதீவு அமைப்புகளால் கொடுப்பட்ட எனில், அது பிரான்ஸ் புங்குடுதீவு ஒன்றியம் மட்டுமே ஆகும்...http://www.pungudutivu.fr/2015/08/b... தொடுப்பை அழுத்தி தொகையை பார்க்கலாம்,மிகுதி எல்லாம் தாம் கொடுத்தாக சொல்லப்பட்ட செய்திகள் ஆகும்அவர்கள் கொடுத்து இருந்தால் ஆதரங்களுடன் வெளியிடலாம் ஒரு பிரச்சினையும் இல்லை ...

ஆனால் இன்று கண்ணகை அம்மன் கோயில் திருவிழாக்கு கூடி இருக்கும், பெரும்பாலும் வித்தியாவை கொலை செய்த கொலையாளிகளின் அண்ணன் ,தம்பி, மாமன், மச்சான், உறவுகள், என அனைவரும் இன்று அங்குதான் நிக்குறார்கள்,அவர்கள் வித்தியா குடும்பத்துக்கு ஐன்பது அறுபது லட்சம் பணம் வந்ததாகவும் ,அதை வைப்பில் இட்டு வாழ்வதாகவும் (இரண்டு தவணைக்கு சட்டத்தரணி வரவில்லை அது வேறுகதை) அந்த கொலையில் தங்கட உறவுகளுக்கு எந்த தொடர்பும் இல்லையெனவும் ஒரு தோற்றத்தை புங்குடுதீவில் உருவாக்கி வருகிறார்கள்...

நீங்கள் கொளுத்தும்பாவம், உங்கள் பாவ புண்ணிய கற்பூரம் கண்ணகி உங்கள் குலத்தை ஒருநாள் கொளுத்துவாள் என்னும் நம்பிக்கை எமக்கிருக்கு,பால் சட்டி ,தீ சட்டி எடுத்து உங்கள் யோக்கியங்களை நீங்கள் மூடி மறைந்ததால், ஒருநாள் அது உமியில் இட்ட நெருப்பாக உள்ளால் எரிந்து சாம்பல் ஆக்கும் என்னும் திடம் எம்மிடம் இருக்கிறது...

நா கூசாது நீங்கள் பேச்சும் பேச்சை நிறுத்துங்கள்,திருவிழா முடிந்து போகும் போது வேறு ஒரு வித்தியாவை நீங்கள் சிதைக்காமல் போனாலே பெருநிம்மதி அடைவோம்,ஏனெனில் உங்கள் குணங்கள் வெறி குணம் ஆனது கூழுக்கும்,மீனுக்கும் தானே ஊருக்கு திருவிழா செய்ய போறனீங்கள் கடவுள் பக்தியிலா இல்லையே,ஆக நீங்கள் உதவி செய்வது பற்றி இல்லாது, இப்படி எல்லாம் செய்தோம் என பொய்களை அவிழ்த்து விட்டு நல்லவர்கள் போல எப்படி உங்களால் ஊருக்கு உலாவ முடிகிறது,படங்களை பேஸ்புக்கில் போட்டு ஊருக்கு உதவுறம் என போஸ் கொடுத்து பொன்னாடை போர்த்தி சிரித்தபடி நிக்க முடிகிறது,நல்லவர்களே பதில் தரலாம்.

“எரியும் சிதை நெருப்பை அணைக்கலாம் நீறு பூத்த நெருப்பு அணையாது”

#குறிப்பு...::இவை தொடருமாக இருந்தால் தனித்தனியாக பெயர்கள் போட்டு எழுத பெரிய நேரம் எடுக்காது,வித்தியா வீட்டுக்கு வந்த பலர் நாங்க காசுகொடுத்தம் இன்னாரிடம் தந்தவையா என கேட்பதால் அதுக்கு ஒரு முடிவு எடுக்கவே எழுத நேர்த்தது,அந்த பணம் பற்றி நீங்கள் பொதுவெளி அறிக்கை விடுவது உகந்தது.

போராளீஸ் ஓர் பார்வை.

இந்த சொல்லை எழுதி எழுதியே ஒரு புதிய சொல்லாக வந்துவிட்டது ஆகவே இதை தவிருங்கள்,இந்த போராளீஸ் என்னும் சொல்லை நீங்கள் எதற்கு பாவிக்கிறீங்க என எனக்கு தெரியவில்லை என்பதாக ஒருவர் கவலை தெரிவித்தார்.

போராளீஸ் என்னும் பதம் கையாளக்காரணம் போராளிகள் என்பவர்கள் புனிதமானவர்கள் ஒரு இலட்சிய பாதையில் தங்களை கொடுத்து அதற்காக உழைத்தவர்கள்,சரியான தலைவன்,நேர்த்தியான வழிகாட்டல்,ஒழுக்கம்,கட்டுப்பாடு,பெரியோரை மதிக்கும் குணம்,பெண்களுக்கு கொடுக்கும் உன்னத சகோதரத்துவம் அழமான நேசிப்பு,என போராளிகள் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்...

இவ்வாறு ஒரு பார்வையில் கெட்டுவெட்டி நேர் மரமாக ஒருவரால் அழகாக வளர்க்கப்படும் போராளிகள்,தங்கள் பாதையில் இருந்தும் ,சுய ஒழுக்கத்தில் இருந்தும் என்றும் மாறவோ மாற்றவோ முடியாத ஒருவராக இந்த சமூகத்தில் உயர்த்து நிப்பார்கள்.இவர் தான் இவனின் தலைவன் என வேறு ஒரு நபர் பிரித்து அறியும் அளவுக்கு அவர்கள் குண இயல்புகள் இருக்கும்,ஏனெனில் அவர்கள் தேர்த்து எடுத்த பாதை அதை வழிகாட்டி போன தலைவன் அப்பழுக்கில்லா ஒரு மனிதனாக இருப்பார்.

ஆனால் இணைய வெளியில் போராளீஸ் என பாவிக்க காரணம்.

இந்த சமூகத்தின் விடுதலை போராட்டத்துக்கு எந்தவிதமான உதவிகளை கூட செய்திராத,ஒரு போஸ்டர் தன்னும் ஒட்டாத ஒருவர் தன்னை தானே விடுதலை விரும்பியாகவும்,தான் கட்டுப்பாட்டில் தான் இலக்கே இருக்கிறது என்பதாகவும்,தான் மட்டுமே அந்த தலைவனை போற்றி பாடவல்ல புலவனாகவும்,தனக்கே இந்த மண்மீதும்,மக்கள் மீதும் அதீத அக்கறை உள்ளவனாகவும்,பேச்சு,எழுத்து வரை தரக்குறைவான வார்த்தைகள்,வசைவுகளை அள்ளி தெளித்து மற்றவர்களை தூற்றும் அதிகாரம் தனக்கே இருப்பதாகவும் உலாவ வரும் ஒருவரை போராளீஸ் எனலாம்......

அது போக போராட்டம் தொடங்கி ஒரு தோட்டா வெளியேறிய உடன் வெளிநாடு வந்தவனும்,ஆயுத போர் முடிந்து அனைத்தும் சாம்பல் மேடு ஆகியபின் வெளிநாடு வந்தவன்,போராட்டம் நடந்த பொழுது அவர்கள் கட்டுப்பாட்டில் கூட வாழாது எதிரியின் கட்டுப்பாட்டில் வாழ்த்து சகல இன்பங்களை அனுபவித்து விட்டு வெளிநாடு வந்தவனும்,இன்று தன்னை போராளி என சீனை போட்டு தேசியம் பேசி அவர்களின் தியாகத்தில் குளிர்காய்ந்துகொண்டு உண்டியல் குலுக்குவதும்,பணம் சேர்ப்பதும் என முழுக்க தன் சுயநல போக்கில் வாழ்பவன் போராளீஸ் எனலாம்...

மொத்தத்தில் இவர்கள் தேசியம் விடுதலை என பேசி பேசி தங்கள் பைகளை நிரப்புவதை, யாராவது ஒருவன் தடுத்து நிறுத்தி,அதுக்கு எதிராக பேச தொடங்கும் போது அவனை துரோகி எனவும்,செம்பு எனவும்,அவன் ஆள் ,இவன் ஆள் எனவும்,கூட்டம் சேர்த்து கூப்பாடு போட்டு உரத்து கத்தி சபையை குழப்பி தங்கள் இருப்பை தக்கவைக்க போராடும் இவர்களை போராளீஸ் எனலாம்.

தொடரும்.....