வியாழன், 4 டிசம்பர், 2014

அணையாது காப்போம் ...!

அன்னை மண் சிந்திய கண்ணீர் ..
அணையாது காக்கப்படும் தீபம் ....

அண்ணனவன் ஆளும் காலம் ..
அனைவரும் இணைவோம் பலமா ..

ஆளான ஆலமரங்கள் ..
ஆழியில் அகப்பட்ட துரும்பு போல் ..

ஆழமா உள் இழுக்ப்படும் மூச்சு ..
ஆணிதரமா முகத்தில் அறைந்தது ..

இலை என்று நினைத்தவர் எல்லாம் ..
இல்லை இது இமயம் என்று வியக்க ..

இன்னொருவன் வருவான் எமக்கு ..
இனத்தின் இருளை போக்க ..

ஈ ஆக பறந்து போகாது ..
ஈட்டி போல பாய்வோம் நாம் ..

ஈனர் செயல் அறுத்து வீழ்த்த ..
ஈன்றவள் பெரு மகிழ்வு கொள்ள ..

உலகம் ஒருநாள் புரியும் எம்மை ..
உண்மை அறிந்து தலைகள் குனியும் ..

உன்னத இலட்சியம் வெல்லும் காலம் ..
உணர்வுடன் நாம் மாவீரம் போற்றுவோம் .

வாழ்தலின் சோகம் ...!

நாள்கள் நெருங்கிறது ..
நினைவெல்லாம் நாட்டை நோக்கி ..
சிறகுகள் இருந்தும் பறக்க முடியா ..
பறவைகள் எல்லாம் கூட்டில் ..

அமைதியா வேடிக்கை பார்க்கிறது ..
தன் எஞ்சிய குஞ்சுகளை காப்பதா ...
இல்லை இழந்த குஞ்சுக்கு ஒளி ஏற்றவா ..
சிறகுடைந்த குஞ்சுக்கு உணவு தேடவா ..

என்ன செய்வேன் சிறு கூட்டில் நான் ...
உணவு தேடி போன என்னவன் வரும்வரை ..
கொஞ்சம் கீச்சிட்டாலும் பக்கத்தில் உள்ளவர் ...
கூண்டோடு பிடிங்கி எறிவர் அல்லவா ...

எனக்கு ஏது நிரந்தர கூடு இவ்மண்ணில் ..
பாலையில் ...வீரையில் ..பனையில் என்று ...
மாறி மாறி தங்கிய களைப்பு இன்னும் போகவில்லை ..
மீண்டும் ஒரு கூடு பின்னும் எண்ண இல்லை ..

இருக்கும் கூண்டில் இருப்பவரை வளர்த்து விட்டால் ..
தனிமரத்தில் நான் மட்டும் உறங்கி கொள்வேன் ...
இங்குதான் பட்டமரமும் ...எரிந்த மரமும் அதிகம் ...
என் மரணமும் தனிமையில் இருக்கட்டும் ...

எவரும் தேடார் என்னவென்று அறியார் ...
புதிர்களுடன் புதினமா போவேன் நான் ..
இருபவர்கள் நினைவுடன் வாழட்டும் ...
ஒருநாள் என் துணை வந்து உரக்க பாடும் ...

என் மரணகீதம் அனைவருக்கும் கேட்க்கும் .

காதலால் மட்டும் ..!

பேருந்து தரிப்பிடம் மெலிய குளிர் இரண்டு ஜோடிகள் அவள் இருக்கையில் இருதபடி வெறித்து பார்க்கிறாள் வேறு திசையில் ,அவன் நின்றுகொண்டு மறுதிசையில் ஒரு சிகரெட்டை பற்றி ஆழமா இழுத்து புகையை குளிரின் புகாருடன் சேர்த்து வெளியேறுகிறான் ..
சட்டென்று திரும்பியவன் அவளை நோக்க அவளே கண்டுக்காதவளா மறுக்க எழுந்து, தன பையில் இருந்து உருவி ஒரு சிகரெட்டை பற்றிக்கொண்டு பேருந்தை எதிர்பார்க்கிறாள் ..
வந்து நிக்கிறது பேருந்து அவள் கையில் இருந்த சிகரெட்டை காலில் போட்டு மிதித்து விட்டு ஏறுவதுக்கு தயாராக ,அவனோ அங்கயே நிக்கிறான் திரும்பி பார்த்தவள் தானும் நின்றுவிடுகிறாள் ..
திரும்பி வந்து அவளின் காதோரம் எதோ சொன்னவன் அவளின் கைகளை இறுக்கி பிடித்து, மறுகையால் இடையை வளைந்தபடி கொஞ்சலா அவளிடம் பேசும்போது அவளே கண்டுக்காமல் விலக நினைக்கிறாள் ..
இரண்டு முறை அவனை அவன் கைகளை தட்டி விட்டு போக எத்தனிக்கிறாள் ,என்ன நினைத்தானோ கோவமா விலக்கி விட்டு எதிர்திசையில் திரும்பி வேகமா ஒரு சிகரெட்டை எடுத்து தீயை மூட்டி தன் கோவத்தை தணிக்க நினைத்திருப்பான் போலும் ...
ஒரு நாலடி நடந்து போனவள் வேகமா திரும்பி வந்து அவனின் பின்னாடி கைகளை கோர்த்து தன்னுடன் சேர்த்து இறுக்கி கொண்டாள் ஓ ,அவர்கள் காதலர்கள் போலும் பின்னர் இருவரும் பேச முனைகையில் வார்த்தைகள் இல்லை என்று இல்லை ஏனெனில் அவனின் உதட்டை அவள் கடித்தபடி இருந்தால் எப்படி பேசுவான் அவன் ..
காதலுக்கும் காதலர்களுக்கும் மட்டுமே தெரிந்த வித்தை என்பேன் சின்ன சின்ன செல்லக்கோவம் .

ஓடிப்போதல்.

ஊர்களில் பெரும்பாலும் பேசப்படும் சொல் இந்த ஓடிப்போதல்
எங்க அப்பத்தா அடிக்கடி சொல்லுவா யாராவது பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போது அவன் அவளோட எல்லோ ஓடி போனவள் என்று இன்னாரின் பெடியன் அவற்ற பேத்தியோட எல்லோ ஓடிப்போனவன் என்று
சொல்லும் போது அறியாத வயதில் விபரம் தெரியாத நாம் என்ன இது ஓடிப்போறது என்று குழம்பி போய், என்ன கிழவி ஓடுறான் ஓடுறாள் என்று சொல்லுற என்ன அது என்று கேட்டால் „ உனக்கு இப்ப இது முக்கியம் போடா போ போய் வாய்ப்பாடு எடுத்து பாடமாக்கு“ என்று கிழவி கலைக்கும் ..
பிறகு கொஞ்ச காலம் போக எங்க வீட்டுக்கு பக்கத்தில ஒரு கலியாணம் நடந்தது.
ஊரே ஒரே பரபரப்பு. இந்தா அவனின் மாமன் வாறான் ..மூத்த அண்ணன் வாறான். சரி அடிபாடு தொடங்க போகுது என்று எல்லோரும் ஆளையால் மாறி மாறி கதையும் ஓடி ஓடி விடுப்பு பார்ப்பதுமா சனம் சமையல் ..வீட்டு வேலை எல்லாம் விட்டுட்டு இதே வேலையா திரிந்தார்கள்.
அட அப்படி என்னதான் நடக்குது என்று நானும் களத்தில இறங்கினன் .
விஷயம் இதுதான் .
இருவரும் கலியாணம் கட்டி ஓடிப்போயிட்டினமாம் என்று கதை காதில் விழுகுது.
ஓ, என்ரை நீண்டநாள் தேடல் எல்லோ இந்த ஓடிப்போதல் எப்படி என்று எப்படி முழுவிபரம் அறிவது என்று அடுத்த பிரச்சினை.
சரி முதல் கூட்டி கொண்டு போன அண்ணன் வீட்டுக்கு போய் விடுப்பு பார்ப்பம் என்று அங்க போனேன். திண்ணையில இருந்து ஆச்சி ஒருஆள் குரல் எடுத்து அழுகுது . „ஐயோ ஒன்றும் தெரியாத என்ர பெடிய கூட்டிட்டு போயிட்டாள், படுபாவி நல்லாவே இருக்க மாட்டாள்“ என்று கிழவி தான் சாபம் போடுது ..
ஆனா „கிழவி சும்மா இரணை எதுக்கு தீட்டி தீர்க்கிற „என்று பக்கத்தில இருந்து ஐயா ஒராள் சொல்லுறார் ..
அதுக்கு கிழவி „பாரடி மோளே தன்னுடைய சொந்தம் பந்தம் என்று அப்படி பேசுறான், இவன் இவனும் சேர்த்துதான் கூட்டி விட்டு இருக்கிறான் போல ..முதல் தந்தி அனுப்பு கொழும்பில உள்ள மூத்தவனுக்கு…… வரட்டும் அவன் வந்தால் தான் எல்லாம் சரிவரும் எல்லோரையும் வெட்டி போடுவான் ..“
„ஐயோ என்ற ஒரேஒரு குஞ்சு பொத்தி பொத்தி வளர்த்தேன் என்ன மாயம் மந்திரம் செய்து கொண்டு போனாளோ, ஆத்தையும் மகளுமா சேர்த்து வசியம் வைத்து இருப்பாளுகள் ..அடிக்கடி அவள் இங்கின கோயிலுக்கு வரும்போதே எனக்கு தெரியும் என்னவோ நடக்க போகுது என்று.. நான் தான் கொஞ்சம் அலட்சியமா இருந்திட்டன் போல“ என்று தலையில் அடித்து அழுதா அந்த வீட்டுக்கார அம்மா
..என்னடா இது கொடுமை கலியாணம் தானே நடந்தது எதுக்கு இப்படி ஒப்பாரி என்று எனக்கு ஒரே குழப்பம் ..
இன்னொரு அக்கா வேகமா வந்தா. „அவன் பந்து விளையாடி போட்டு தம்பியாரோட அங்க போய் இருக்கிறான் அப்பத்தான் அவளுகள் எதோ தேத்தண்ணியில் எதோ போட்டு கொடுத்து இருக்கிராளுகள் ஆச்சி“ அவ்வளவுதான் சும்மா இருந்த கிழவி „எனக்கு தெரியும் எனக்கு தெரியும் அவன் லேசில எடுபட மாட்டான் என்னவோ செய்துதான் கொண்டு போயிட்டாளுகள்“ என்று மீண்டும் தொடங்கிட்டுது.
அட இப்படி மாறி மாறி அழுதண்டு இருக்குதுக நாம இதுல நிண்டு ஒரு பிரயோசனமும் இல்லை என்னும் ஒரு முடிவுடன், கிளம்பி அந்த கலியாணம் கட்டின அக்கா வீட்டுக்கு போனேன்.
பக்கத்தில் தான் ஒரே வட்டாரம் ஒரு கிலோமீட்டர் தூரம் தான் . அங்க போய் சேர்த்தா ஒரு நாலுபேர் கூடி இருந்து „வரட்டும் வரட்டும் யாரு வருவீனம் என்று பார்ப்பம்.. டேய் அந்த அலவாங்கை எடுத்து தாவாரத்தில் வை ,கோடாலி பிடியை களட்டி பிறம்பா வை ,சிலவேளை மேற்கில இருக்கிற மாமன் வருவார் அவர் கொஞ்சம் சண்டித்தன பார்ட்டி ஆ.. ஊ என்றால் போட்டு பிடிச்சு அனுப்புவம் ...
இப்படி பொண்ணு வீட்டில ஒரே வன்முறை கதையா இருக்கு
சரி நான் சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறான் பாருங்கோ. .நமக்கு சின்னனில் இருந்தே சண்டை படம் பார்ப்பது என்றால் ரொம்ப பிடிக்கும் இங்க வேற அதுதான் நடக்க போகுது என்று உள்ளுக்குள்ள குதூகலிப்பு .
அட இந்த மாப்பிளை பொண்ணு எங்க என்று தேடிபார்த்தேன். இந்த ஓடிப்போதல் விஷயம் என்ன என்று கேட்பம் என்று ஆக்களை காணவில்லை.
சிறிய குடில் வீடு முன்னுக்கு திண்ணையுடன் சேர்த்து ஒரு வரவேற்ப்பு இடம் உள்ள ஒரு அறை. அது நாலுபக்கமும் கிடுகு கொண்டு அமைக்கபட்ட தட்டி ,போறவன் வாறவன் எல்லாம் அந்த தட்டியை பிரிச்சு உள்ளார எட்டி பார்க்கிறான். புது மாப்பிளை பொண்ணு அங்கதான் இருக்கினமாம் என்று ,சரி நானும் ஓடிப்போய் ஒரு இடைவெளியை பிடிச்சு எட்டி பார்த்தேன் .
இருவரும் இருக்கினம் அந்த அண்ணை அழுதுகிட்டு இருக்கிறார். பாவம் அப்பாவிதான் என்று, இப்ப விளங்குது அந்த கிழவி அழுதது போல ஒன்னும் தெரியாத ஆள் போல்தான் இருக்கிறார். அந்த அக்கா எதோ நாடியை பிடிச்சு எதோ சொல்ல தலை ஆட்டுறார் அவர் .. எனக்கு பின்னால வந்து அப்பத்தா ஒண்ணு போட்டா „எங்க நிக்கிற நான் இந்த உலகம் எல்லாம் தேடிக்கொண்டு வாறன் இங்க வந்து வாய் பார்த்துக்கொண்டு நிக்கிற ஓடுடா வீட்ட என்று கிழவி தடி முறிக்குது எட்டி பூவரசில ..
அடசீ சண்டை எல்லாம் நடக்க போகுது என்று நான் இருக்க கிழவி குழப்பி போட்டுது என்று ஒரு எட்டில எட்டி கடப்பல பாய்ந்து போவம் என்று ஓட பழைய ஆமைக்கார் ஒன்று வந்து நிக்குது படலையில ,இந்தா பெரியவன் வந்திட்டான் என்று எல்லோரும் படலைக்கு ஓடி வர நானும் ஆக்களோட ஆக்களா கலந்து உள்ளோ போனேன்.
நம்ம அப்பத்தாவும் அங்கின நிண்டுட்டா . அந்த கலியாணம் கட்டின அக்கா வந்து காலில விழுந்து அண்ணே சேர்த்து வையுங்க என்று காலை பிடிச்சு அழுகுது. அந்த அண்ணை அப்படியே ஒரு பார்வை பார்த்திட்டு ,சரி அழாத அதுதான் அண்ணன் வந்திட்டன் எல்லோ எழும்பு என்று ஒரு அதட்டு அதட்டி கூட்டி போனார் .
பிறகு என்ன கொஞ்சநேரம் மந்திர ஆலோசனை ..சரி நான் மட்டும் போறன் அங்க போய் கதைச்சுபோட்டு வாறன் என்ன சொல்லினம் என்று கேட்டுட்டு அடுத்த முடிவை எடுப்பம் என்று சொல்ல ,இல்லை இல்லை தனிய போகவேணாம் அவன் மாமன் ஆராவது வந்து நிண்டால் பிரச்சினை அடிதடியா போயிடும் என்று பொண்ணின் அம்மா மறிக்க, எங்க அப்பத்தா „அடி போடி அதுகள் நல்ல குடும்பம் அப்படி ஒன்றும் செய்யாதுகள் நீ நடவடா மகனே நானும் வாறன்“ என்று சொன்னா .
பிறகு என்ன எங்க அப்பத்தாக்கு கொஞ்ச பயம் இருக்கு ஊரில .அவாக்கு ஐந்து ஆண்பிள்ளை மனுசிக்கு ஒன்று என்றால் அங்க ஒருவன் மிஞ்ச முடியாது.
அதால இந்த சின்ன லொட்டு லோடுக்கு பஞ்சாயத்து எல்லாம் அப்பத்தா செய்வா . சரி கிழவி கூட்டிட்டு போனா நானும் மசுந்தி மசுந்து பின்னாடி போனேன். அங்க படலையை திறந்து போனது தான் காணும்.
எல்லோரும் அந்தா வாறான் மாப்பிளையை கொண்டுபோய் வீட்டில வைச்சுட்டு என்ன மூஞ்சியை கொண்டு வாறன் என்று அங்க உள்ள கிழவி கோஷம் போடுது ..
உடனம் எங்க அப்பத்தா „சரி சரி கொஞ்சம் சும்மா இரு சின்னன் சிறுசுகள் எதோ காதல் பண்ணி ஓடிபோட்டுதுகள் அதுக்கு இப்ப என்ன கள்ளன் ...காடன்கூடவா போனதுகள் இல்லையே ஒரு இனம் சனம் பின்ன எதுக்கு சும்மா கர.. கர என்று கொண்டு இருக்கிற ,இனி ஆகுற வேலையை பார்க்காமல் பழைய கதைகளை கதைச்சுக்கொண்டு… என்னடா நீ என்ன சொல்லுற.. இந்தா பொண்ணின் அண்ணன் வந்து நிக்கிறான் பேசுறதை பேசி ஒரு முடிவுக்கு வாங்கோ..
கொஞ்சம் நேரம் மவுனம். பிறகு பொடியனின் தாய் கதையை தொடங்கினா அவன் ஒரு மகன் நான் பெரிசா கலியாணம் பண்ணி பார்க்க ஆசைப்பட்டனான் மற்றும்படி ஒன்றும் இல்லை நீங்க செய்வதை செய்தா சரி தம்பி ..
அப்பத்தா குறுக்கிட்டு,
„என்ன செய்யுறது அதையும் சொல்லு காசா ..நகையா வீடு காணியா எல்லாம் பேசி முடியுங்க பிறகு ஆளை ஆள் ஏமாற்றி போட்டினம் என்று ஊருக்க பேசிட்டு திரியாமல் „ இல்லை கிழவி அவனுக்கு எங்க சொத்து இருக்கு எங்களுக்கு ஒன்னும் வேணாம் பொண்ணின் அண்ணன் சொன்னார் „ சரி நாங்களே கலியாண செலவு எல்லாம் செய்கிறம் மற்றும்படி அவளுக்கு கொடுக்க வேண்டிய எல்லாம் கொடுத்து அனுப்புவம் ,வேற எதவது எதிர்பார்த்தா சொல்லுங்க செய்கிறம்“ என்றார் .
அடுத்த கிழமை நல்ல நாள் வந்து கை நனைச்சுட்டு போறம் பிறகு கலியாண நாள் வைப்பன் ...
அட பாவிகள் அடிபாடி சண்டை என்று எல்லாம் பெரிய பில்டாப்பு விட்டுட்டு இப்படி சும்மா பேச்சில முடிச்சு போயிட்டு என்னும் ஆதங்கம் நமக்கு எல்லாம் இந்த அப்பத்தா கிழவி சும்மா இருக்காமல் நாட்டாமை பண்ணிட்டு என்று மனதுக்குள் பேசிக்கொண்டு ஒருமாதிரி இந்த ஓடிப்போதல் என்பதுக்கு விளக்கம் பிடிச்சன் என்னும் சந்தோசம் மட்டும் எட்டி பார்க்குது ...
இதுக்குத்தான் ஊருக்க இரண்டு மூணு கிழவிகள் இருக்க வேணும் .
இப்படியான பிரச்சினைகளை சுமூகமா தீர்த்து வைக்க அனுபவம் வாழ்க்கைக்கு முக்கியம் ..
என்ன இருவர் விருப்பபட்டு வீட்டின் அனுமதி இல்லாமல் கலியாணம் கட்டினா அதுக்கு பெயர்தான். ஓடிப்போய் கட்டுவது என்று ஒரு பெரிய கண்டுபிடிப்புடன் வளர்த்த பின் நானும் ஓடிப்போனது வேறு கதை பாருங்கோ .

ஞாயிறு, 9 நவம்பர், 2014

சொல்லிடுவன் ..!! (முகடு)

கொஞ்சம் மங்களான பொழுது சூரியன் அப்பொழுதுதான் குளக்கரையின் முடிவில் மீனுடன் பேசிக்கொண்டு இருந்தான் தலையில் கொஞ்ச விறகு கட்டைகளை சுமந்தபடி மணியக்கா வேகமா குளக்கட்டின் விளிம்பில் நடந்தபடி இருந்தார் .... மேச்சலுக்கு போன லட்சுமி வீடு வரமுன் போகவேணும் என்னும் வேகம் மட்டும் மணியக்கா கண்களில் குடிகொண்டுள்ளது தான் போக கொஞ்சம் சுணங்கினாலும் களனி தண்ணியை தட்டி ஊற்றி முற்றம் எல்லாம் சேறா ஆக்கி போடுவாள் என்று சேலை தலைப்பை இழுத்து செருகிக்கொண்டு நடந்தாள் மணி ...

அந்த அந்திசாயும் பொழுதுதான் கண்ணனுக்கு பிடிச்ச பொழுது குளக்கரை ஆலமரம் எப்பொழுதும் தனியா வந்து இருத்து ரசிப்பது அவனுக்கு ரொம்ப பிடிக்கும் தனிமையில் இருக்கும் பொழுதுகளில் அவனின் சிந்தனை எல்லாம் எதிர்காலம் எப்படி அமையும் என்பதே ..ஆனால் அவன் அருமையா கவிதை எழுதுவான் அவன் தனது பாட கொப்பிகளில் கடைசி பக்கம் கிறிக்கி இருக்கும் கவித்தைக்கு அவனுடன் படிக்கும் பெண் தோழிகள் அடிமை எனலாம் ...

மணியக்காவின் வேகமான நடை கொஞ்சம் மெதுவா ஆகி தனது கண்களை குளக்கரை ஆலமரம் நோக்கி விட்டார் யாரு அது இந்த செக்கள் பொழுதில் இதில் இருப்பது என்று யோசிச்சபடி கண்ணனின் சைக்கிளை விறகு சுள்ளிகளின் முடிவுகள் தட்டியபடி ஒரு ஒலியை எழுப்ப கண்ணன் பாய்த்து சென்று சைக்கிளை ஒரு கையால் பிடித்து சரி பருவாயில்லை போங்கோ அக்கா என்கிறான் ..

மணியக்கா சிறு மூளை பொறி தட்டுது இவன் இந்தநேரம் இங்கின இருக்கிறான் அவருக்கு தெரியாது அவன் தினம் இந்தநேரம் இங்கு இருப்பவன் என்று கண்ணன் யோசிச்சான் சரி முடிச்சுது சும்மாவா சொல்லிடுவா இப்ப நேர்ல வேற கண்டிடா சொல்லமால் விடுவாவா ....இல்லை அவா அப்படியான ஆள் இல்லை என்றவாறு தன் மனத்தை தேற்றிக்கொண்டு குளத்தின் வடக்கு அலைகரை நோக்கி தன் பார்வையை திருப்பினான் ...

மணியக்கா போவது திரும்பி ஒருக்கா பார்ப்பது என்று ஆழ்த சிந்தனையில் இடதுகரையால் இறங்கிகொண்டு இருந்தார் ...இந்தநேரம் பார்த்து மங்கையும் ஊரில இல்லை இவன் கண்ணன் எப்ப ஊருக்கு வந்தது என்றுகூட மணிக்கு தெரியாது எல்லாமே குழப்பம் மணிக்கு ஏனெனில் கண்ணனின் அம்மா மேட்டுக்குடி கொஞ்சம் ஜாதி திமிர் அதிகம் கண்ணன் இங்கின நின்றால் எவளையாவது விரும்பி தொலைப்பான் என்று அவர் அவனை பட்டணம் அனுப்பி இருந்தார் .....
கண்ணன் எதிர் பார்த்தது போல அவள் தான் வந்துகொண்டு இருத்தாள் கட்டில் இருந்து எழும்பிய கண்ணன் தேவி நில்லு கொஞ்சம் பேசணும் என்று வழிமறிக்க அவளே தன் இரட்டை பின்னலில் ஒன்றை எடுத்து முன்னாடி விட்டபடி போனாள் ...தேவி சொல்லிடுவன் என்று அன்று நீ சொல்லிட்டு போனது பொய்யா ஏன் இப்படி என்னை கஸ்படுத்திர சொல்லு அல்லது சொல்லிடு உன் முடிவை என்று சினிமா கதாநாயகன் கணக்கா வசனம் பேசி முன்னாடி போனான் கண்ணன் ....

விறகை தலையில் இருந்து சரித்து தரைக்கு போட்டாள் மணி அப்படியே சேலை தலைப்பை எடுத்து முகத்தை துடைத்தபடி அங்கும் இங்கும் சுற்றி ஒரு பார்வை வைத்தால் லட்சுமியை காணம் எங்க போட்டாள் இன்னும் வீடு வராமல் காலையில் பால் வேற கொடுக்க வேணும் வாத்தியார் வீட்டுக்கு என்று முணுமுணுப்பு செய்தபடி வேலி ஓரம் கண்களை விட்டாள் மணி ..
இன்னும் நீ முடிவு சொல்வதா இல்லை தேவி நான் திரும்பி போகவேணும் அதுக்குள்ளே சொல்லிடு என்று அவளின் துப்பட்டாவில் கைகளை மெதுவா உணர விட்டான் அவள் பட்டென துப்பட்டாவை இழுத்து தோள்களில் போட்டபடி உங்களுக்கும் எங்களுக்கும் ஆகாது தெரியும் எல்லே பிறகு எதுக்கு திரும்ப திரும்ப வந்து நின்று கேட்கிறியள் சொல்லுங்க என்று கூறி முடிக்க ...
மணியக்கா குளக்கட்டில் ஏறவும் நேரம் சரியா இருந்தது அட பாவி பயல் அப்பன் கண்டால் கொண்டு போடுவான் எல்லே எதுக்கு இந்த தினவெடுத்த வேலை என்று எண்ணிக்கொண்டு அவர்களை கடக்க கண்ணன் சொன்னான் மணியக்கா இந்த பிள்ளையை ஒரு முடிவு கேட்டு சொல்லுங்க நான் கண்ணாலம் கட்டி பட்டணம் போறதா இருக்கு இவா வந்தா நான் நாளைக்கு கூட்டி கொண்டு பட்டணம் போயிடுவன் என்ன ஏது என்று கேட்டு சொல்லுங்க அக்கா ....
எண்டா அப்பு இந்த உயிர் என் உடம்பில உயிர் இருக்கிறது உனக்கு பிடிப்பு இல்லையா நான் லட்சிமியை தேடிவந்தா இங்க மூதேவி குறுக்க நிக்கு என்று பட்டும் படாமல் சொல்லிட்டு அவர்களை கடந்தார் மணியக்கா ...


பார்த்திங்கள் தானே சொல்லிடு என்று கேட்டிங்கள் இதுக்கு என்ன சொல்லப்போறியல் என்று விடுகதை போட்டால் தேவி ..எனக்கு தெரியும் அவா இப்ப வீட்டுக்கு போய் சொல்லத்தான் போறா அதுதான் நானே முன்னம் சொல்லிட்டன் என்று கண்ணன் அவளின் கண்களை உற்று பார்த்தான் அவளின் கண்ணில் மெதுவா காதல் எட்டி பார்த்தது இருவர் கண்ணிலும் சூரியன் கீழ் இமைகளில் இறங்கிக்கொண்டு இருந்தார் ..
எப்படியும் அவள் காதலை சொல்லிடுவாள் .

ஒரு இரவு யானையுடன் ...!

வாழ்வின் மரணத்துக்கு பக்கதில் இருந்து திரும்புதல் என்பது இப்பொழுது சுகமான மீட்டலா இருந்தாலும் அவ்வேளைக்ளும் அந்த தருணங்களும் படபடப்பானவை ஒவ்வெரு நொடியும் பொழுதும் பக் பக் என வாங்கும் மூச்சை வேகமா விடவும் முடியாமல் அமைதி காப்பது என்பது அதை விட கொடிது ..

அவ்வாறு அனுபவித்த ஒரு சம்பவத்துக்கு உங்களை கூட்டி போகலாம் வாருங்கள் ..

பயிற்ச்சிகள் முடித்தா வேளை மூன்று அணிகள் பிரித்து இரண்டு இரவுகள் காட்டில் மறைந்து வாழ்வெனும் ஒரு அணி அவர்களை தேடி மிகுதி இரண்டு அணியும் செல்ல வேணும் கண்டு பிடித்தால் பிடித்து வந்து தண்டனை கொடுக்கலாம் எப்படியும் என்று சொல்லி ஏழு ஏழு பேர்களா பிரித்து குலுக்கள் முறையும் தெரிவு நடக்கு முதல் அணியே எங்கள் அணி தலைமறைவு ஆகணும் இரண்டு இரவு இன்று பின்னேரம் நீங்கள் போகலாம் உங்களுக்கான உலர் உணவு ...ஒரு சோறு பை தயார் எடுத்துட்டு கிளம்புங்க என்று மாஸ்டர் மார்ஷல் சொல்லிட்டு சொன்னார் இங்கிருத்து நீங்கள் ஆறு கிலோமீட்டர் சுற்றுக்குள் நிக்க வேணும் சரியா என்று ஓகே அனைவரும் தங்களின் குடிலுக்கு வந்து அனைத்து பொருள்களும் எடுத்து வைத்துகொண்டு கிளம்பு தயார் ஆனோம் ...

எங்களில் ஒருவன் இருந்தான் நிரந்தர இடமா ஸ்கந்தபுரம் மணியம் குளம்  என்னும் இடத்தில் பிறந்தவன் சிறு வயது முதல் வேட்டை காடு என்று திரிபவன் அவனுக்கு கொம்பாஸ் இல்லாமல் எங்க போக வேணுமோ அங்க சும்மா நடந்து போவான் அது எந்த ஈறல் காடா இருந்தாலும் சரி அவனுக்கு கை வந்த கலை தான் நடந்தால் காடு விலத்தி கொடுக்கும் என்று சொல்லுவான் இசையாளன் எப்பொழுதும் எங்கள் அணியில் இருப்பதால் கொஞ்சம் நம்பிக்கை அதிகம் எமக்கு ..

சரி சாயங்காலம் ஒரு ஐந்து மணிக்கு பின் நாம் மாஸ்டருக்கு என்ன பகையில் போகுறோம் என்று தனிமையில் சொல்லி விட்டு கிளம்பி போனோம் பனிச்சம் குளம் மேற்கா இப்படியே நேர போனா தேராம்கண்டால் காடு வரும் அதுக்கு இடையில் நாம் எங்காவது தங்கிட்டு திரும்புவம் என இசையாளன் முன்னே சொல்கிறான் இரவு பொழுது மங்க தொடங்க காடு தன் இருளை வாங்கியது கைகள் எட்டும் துரத்தில் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டு சில் வண்டுகளின் ரீங்காரம் கேட்டபடி நாம் கால்கள் படும் இடங்களில் இருந்து ஓடும் உயிர்கள் சாகாமல் சருகுகள் குலையாமல் நடக்க வேணும் காரணம் நாம் போகும் தடம் எங்களை பின்தொடர உதவும் என்பதால் ....

அப்படியே போய் ஒரு சிறிய நீர் தேக்கம் கிட்டவா போயிட்டம் கடும் இருட்டில் இவ்வளவு நேரம் நடந்தால் எத்தினை கிலோமிட்டர் என்று ஒரு கணக்கில் இங்கின ஒரு இடத்தில் தங்குவம் என்னும் முடிவில் ஒரு சூரை பத்தை பக்கத்தில நிக்கிறம் நல்ல இடம் அப்படியே தடவி கீழ இருங்கோ என்னும் கட்டளைக்கு இருந்தம் இப்ப பொழுதை போக்குவம் எப்படியும் நாளைக்குதான் காலை அவங்கள தேடி கிளம்புவாங்கள் அதுக்குள்ளே நாங்க ஒளியும் இடம் தேடி பிடிக்கலாம் என்று சொல்லியபடி ஆளை ஆள் பக்கத்தில் இருந்து பழைய புதுக்கதை என்று தூக்கம் இல்லாத இரவு விடிந்தது முதல் நாள் .........


ஓகே தம்பிகள் உங்களை தேடி இரண்டு அணியும் கிளம்பிட்டு பிடிபட்டால் பச்சை மிளகாய் தீத்துவாங்கள் கவனம் என்று தொடர்பில் சொன்னார் மாஸ்டர் இருந்த இடத்தில் இருந்து இன்னும் கொஞ்சம் நடந்து அங்கும் ஒரு சூரை பத்தையுடன் கூடிய பெரிய பாலை மரம் அருகில் ஒரு முதிரை ஓகே நல்ல இடம் என்று கொண்டுவந்த படுக்கை யூரியா பையை விரித்து போட்டு ஆளை ஆள் உள்ளே நுழைந்து பக்கம் பக்கமா கிடந்து உலர் உணவை சாப்பிட ஒருவன் அதுக்குள் கிடந்த பேரிச்சம் பழம் சாப்பிட்டு கொட்டையை ஏறிச்சு போட்டான் பக்கத்தில் இருந்து எங்க விழுகுது என்று பார்த்து கொண்டு இருந்து விட்டு இருநாடான் கேட்டான் மச்சி நாளைக்கு ஐந்து பேரிச்சம்பழம் போட்டது எங்க ஐந்து கொட்டையும் என்று வாத்தி கேட்டா எப்படி கொடுப்ப என்று தடார் என்று எழும்பி ஓம் மச்சான் மறந்து போனேன் எங்கடா விழுந்தது என்று உள்ள சருகு குப்பை எல்லாம் ஒரு அலசு அலசி களைத்து போனான் அமரன் சரி விடு எனக்கு உன் பையில் இருக்கும் லட்டை கொடு நான் உனக்கு ஏறிச்ச கொட்டையை தாரன் என்று பேரம் பேசி வாங்கினான் நாடான் ஒரே சிரிப்பு ஒரு அதுக்கு பிறகு அவனுக்கு பெயர் பழம் ஆனது ....

சரி சத்தம் வேணாம் இனி எல்லோரும் ஒவ்வெரு பக்கமா பாருங்கோ அவதானம் ஆளுக்கு ஒரு திசையை பிடித்து அவதானியுங்கோ ...எங்காவது அவங்கள் வரும் சருகு சத்தம் கதை கேட்குதா உன்னிப்பா பாருங்கோ இன்று இரவும் சமாளிச்சா போதும் என்னும் நினைப்பில் மெதுவா இருள தொடங்கிட்டு ஓகே மச்சான் அவங்கள் இனி பிடிக்க மாட்டங்கள் என்று சொல்ல அமரன் சொன்னான் சிலவேளை எங்காவது பக்கத்தில வந்து கிடந்திட்டு இரவுதான் அடி விழுகுதோ தெரியவில்லை எதுக்கும் ஒருக்கா ஒரு சுற்று சுற்றி வந்து பிறகு படுப்பம் ஓகே என்று சந்தேகத்தை தீர்த்து போட்டு உறங்கு நிலைக்கு தயார் ஆனோம் ....

முதல் நாளும் பகிடி பம்பல் என்று கதையுடன் போனதால் எல்லோரும் வேகமா உறங்க தொடங்க ஒருவனை சென்றி விட்டு மிகுதி ஆறும் நித்திரை போக ஒரு சாமம் கடந்து இரண்டு மூணு மணி இருக்கும் படார் என்று ஒரு மரம் முறியும் சத்தம் மிக அருகில் சென்றிக்கு இருந்தவன் டேய் எழும்புங்கடா என்று கத்திய கணத்தில் எல்லோரும் கும் இருட்டில் என்ன என்று ஆளை ஆள் முழிக்க எங்களுக்கு மிக அருகில் யானை ...

பெரு மூச்சு ஆளை தூக்கும் அளவு கேட்குது முடிச்சுது கதை கூட்டமா வேற வந்திருக்கு எது எங்க காலை வைக்கும் என்று தெரியாது இருட்டில் எது எங்க நிக்கு என்று வேற தெரியாது இசையாளன் சொன்னான் பயப்பிட வேணாம் ரைபிள் வாசனைக்கு கிட்டவா வராது அது பத்தடி தள்ளித்தான் நிக்கு வெடி வைக்க வேணாம் இடம் தெரியும் கத்தி கித்தி சத்தம் போட்டியல் அது எங்காவது கலைத்து ஓட எங்களுக்கு மேலாலும் ஓடும் நாங்க நிக்கும் இடத்துக்கு கிட்ட எங்கையோ ஒரு மொட்டை இருக்கு அது தண்ணிக்கு வந்திருக்கும் சும்மா இருங்கடா என்று சமதானம் சொன்னான்.... அட பாவி காடு தெரியும் காடு தெரியும் என்று யானை கிட்டவா கூட்டி வந்த இரடி உனக்கு விடிய உயிர் இருந்தா என்று சிறைவாணன் சவால் விட இசையாளன் சொன்னான் புலிகளின் குரல் செய்திகள் யானை மிதித்து லெப் சிறைவாணன் சாவு டேய் சிரிக்க முடில வயிறு கலக்குது உனக்கு பகிடி கேட்குது என்று இரண்டு பேச்சு விழுந்துது இசையாளனுக்கு மச்சான் கட்டான் கொண்டுவந்து விட்டன் பாரு சும்மா இரு பாலையை கட்டி பிடி என்றான் அமரன் ..........

மூச்சும் சத்தமும் யானை எங்களை விட்டு போற பிளேன் இல்லை போல அதுக்கு விரும்பிய மரம் அல்லது அறுகம்புல் கண்டுட்டு போல நிலவு தாழ தான் போகும் சும்மா இருங்கடா என்று இசையாளன் பேசுவது எவனும் கேட்பதா இல்லை யானை திரும்பும் சத்தம் கால்கள் கீழே கிடக்கும் தடிகள் சுள்ளிகளில் பட்டு அவை நெருங்கும் சத்தம் எல்லாம் ஒரு எ ஆர் ரகுமானை கண்ணுக்குள் கொண்டுவரும் மாட்டினா உங்க எலும்பும்  இப்படித்தான் நொறுங்கும் மச்சி அப்படியே பின்னாடி போவம் வேணாம் காத்து வழம்  எங்கட வாடை யானைக்கு இன்னும் பிடிக்க வில்லை இப்படி இருங்கோ சிலவேளை எங்களில் வாடை பிடித்தால் அது மிரள தொடங்கும் சும்மா இதிலையே இருங்கோ ......அட இவன் எங்களை வைத்து யானை ஆராய்ச்சி பண்ணுறம் போல எல்லாத்துக்கும் கதை சொல்லுறான் பாரு டேய் மம்மில் பிள்ளையார் என்று ஒரு பிள்ளையார் இருக்கிறார் அவரை கும்பிடு யானை உனக்கு கிட்டவா வராது அது சரி இவ்வளவு நேரம் நீ அவரையா கும்பிட்டு கொண்டு எங்களுக்கு கதை சொன்னனி என்று சிறைவாணன் சொல்லிட்டு சொன்னான் அந்தாள் ஆமி வந்தவுடன் இடம் பெயர்த்து போயிட்டார் அதுக்கும் நீ மணியம் குளம் வைரவரை கும்பிடும் என்று ...

இழவு வேட்கி வேலை செய்யுது எடுக்கவா வேணாமா வாத்தி தொடர்பில வேணாம் சுணங்கி எடுப்பம் சென்ரி இருக்கா என்று பார்க்க தான் ஆள் எடுக்குது பிறகு எல்லோரும் நித்திரை என்று நாளைக்கு பத்து ரவுண்டு ஓட விடும் அதுக்கு யானை மிரிச்சாலும் பருவாயில்லை போடா என்று விட்டு தொடர்பை எடுத்தான்... சொல்லுங்கோ பெடியள் ஓகேயா என்ன செய்யுறாங்கள் சாப்பிட்டவங்களா கொண்டுபோன தண்ணி காணுமா எல்லோருக்கும் என்று கேட்டுட்டு கவனம் பாம்பு ...பூரான் சரிடா தம்பியல் நாளைக்கு சந்திப்பம் என்று அணைத்தார் தொடர்பை... மச்சி வாத்தி வேற இந்த நேரம் அன்பா கதைக்குது என்ன சிக்கல் நல்லதா தெரியவில்லை எனக்கு ....போடா அவரு பயிற்ச்சி செய்யும் மட்டும்தான் ஆள் இறுக்கம் மற்றும்படி சுப்பர் ஆள் என்று அமரன் ம்ம் சாகிற நேரம் வாத்திக்கு சான்றுதல் கொடுக்கிறான் இவன் என்று ஆளை ஆள் கடி ........

ஒரு பொழுதா இரண்டு மணித்தியாலம் யானையும் நாங்களும் ரவுண்டு கட்டி கொஞ்சம் கொஞ்சமா ஓய்வுக்கு வந்தம் சத்தம் குறைய தொடங்கிட்டு அப்படியே இந்த யானை தென்னியம்குளம் ஊடா போகும் இது அதுகிண்ட வழமையான பாதை எடா என்று தன் காட்டு அனுபவத்தை வைத்து சொன்னான் இசையாளன் ...அந்த மணித்தியாலம் ஒரு நொடியும் கடந்த நேரம் என்பது மிக மிக கொடுமை எனலாம் இருட்டில் அடுத்த காலடி எங்க மேல கூட இருக்கும் என்று கழிந்த நொடி பொழுதுகள் இன்றும் நினைக்கும் பொழுதுகளில் ஒரு முறை கலங்கடித்து செல்லும் ...

இசையாளன் சொன்னான் நானும் எங்க அப்பாவும் ஒரு முறை தனியன் யானையிடம் மாட்டி தப்பி வந்தனாங்கள் இது கூட்டமா வரும் யானை ஆக்களுக்கு ஒன்னும் பண்ணது ...அது சரி நாங்க உன்னிடா மாட்டினது போல என்று சொல்லுற என்று பழையபடி சிரிப்புக்கு வந்தான் சிறைவாணன் .

விஷேட வேவு புலிகள் ...!

இருளுக்குள்ளும் நிழலை தேடியவர்கள் ...
கண்ணி வெடிகள் விதைத்த வயலில் பாதை தேடியவர்கள் ..
 
சன்னங்கள போகும் உயரம் அளத்தவர்கள் ...
கந்தக பொதி சுமந்து வந்தோருக்கு பாதை காட்டியவர்கள் ..
 
ஓடும் பாதையில் இருக்கும் தடைகள் அறிந்தவர்கள் ...
கம்பி வேலியின் எண்ணிக்கை தெரிந்தவர்கள் ...
 
பலமான  இடத்தில் பலவீனம் தேடியவர்கள் ..
தலைவன் சொல்லும் பாதையை எடுப்பவர்கள் ..
 
வெடி விழுந்தாலும் கதறி அழாதவர் ...
தோழனுக்கு சைகையால் ஓடிடு என்று சொன்னவர்கள் ...
 
குண்டை  கழட்டி தன்னுடன் அணைத்தவர் ...
எதிரி நெருக்கி திருப்ப எமனாகி போனவர்கள் ..
 
தங்களின் பணியை தரவுடன் தந்தவர்கள் ...
தலைவன் சொல்லுக்கு தலைசாய்த்து நின்றவர்கள் ..
 
தாக்கும் இறுதி கணம் வரை ரகசியம் காத்தவர் ...
வெற்றி களிப்பிலும் இணையாது விழி முடியவர் ...
 
உறங்காத கண்மணிகள் இவர்கள் உறங்காது இருப்பார்கள் ..
தேசம் மீட்க்கும் நாள்வரை இலக்கை தேடுவர் .
 

வியாழன், 30 அக்டோபர், 2014

என் கவலை ..!

கையில் நெருப்பிருக்கு என்னிடம் ..
பற்றவைக்க தான் திரி இல்லை ..

ஆடைக்கடை முன் நின்று பார்த்தால் ..
ஆடை யாரு கொடுப்பார் இலவசம் ..

ஆயிரம் கேள்வி எழும் மனதில் ..
ஏதாவது ஒரு கேள்விக்கு பதில் வேணும் ..

என்னை துறந்து பார்க்க விரும்பி ..
அதுக்கான படிப்பை ஏன் நான் படிக்கவில்லை ..

வீழ்த்தவர் எல்லோரும் அரக்கராம் பூவியில் ..
அதுவும் தமிழாரம் வரலாற்றில் எப்ப மாறும் ..

ஆரியன் கொன்றது தமிழனை என்றால் ..
முருகன் வதைத்தது யாரை என்னும் கேள்வி ..

தமிழ் மொழியா அல்லது தனி இனமா ..
யாரு பிரித்தார் ஏற்ற தாழ்வை ..

ஆண்டாண்டு காலம் கடைபிடித்த எல்லாம் ..
நவீன யுகத்தில் மட்டும் எப்படி பிழையானது ..

என் பாட்டன் சிந்திக்கவே இல்லையா ..
எனக்கு மட்டும் எப்படி வந்தது சிந்தனை திறன் ..

கோயிலை வீட்டை கட்டிய அரசுகள் ....
ஏன்  இனத்தை மொழியை கட்டமைக்கவில்லை ..

மூணுநாள் முதல் வீட்டில் ஆடு வேண்டி கட்டினால் ...
சிறு பராயத்தில் எனக்கு தெரியும் தீபாவளி நெருங்குது என்று ..

சுற்றம் எல்லாம் பங்கு கொடுத்து கூடி இருந்த காலம் எங்கே ..
இப்ப மட்டும் பங்குகளா பிரிந்து போனோம் எதுக்காக இங்கே ..

விரதம் பிடித்தால் ஊரில் பெருமை இருக்கு ..
வெளிநாட்டில் மட்டும் ஏன் முடியாமல் போனது ..

கலாச்சார வளர்ச்சி என்று எம்மை நாமே அழித்தோம் ...
இதை நாமே மொழி இன வளர்ச்சி என்றோம் கூசாமல் ..

தேசியமும் தேசமும் சினிமாவை எதிர்ப்பதில் நிக்கு ..
இன்னும் சில காலம் நாம் எங்க நிப்பமோ பராபரமே ..

அழித்து விடு என்று வேல் கொடுக்க தாய் இருக்கா ..
ஆனால் வேல் வாங்க தான் மகன் இல்லை .

கவிதை வருகிறது ...!

மழையை என்றால் குடையும் கூடவே ..
வானம் என்றால் முகிலும் கூடவே ...

மரம் என்றால் காற்றும் கூடவே ..
நிலா என்றால் நட்சத்திரம் கூடவே ..

ஒன்றை விட்டு இன்னொன்று தேடலில் ..
என்னை விட்டு உன்னை தேடலில் ..

உன் கண் கண்டபின் காதல் தேடலில் ..
இருவரும் சேர்கையில் காமம் தேடலில் ..

எல்லோரும் போல் உன்னை ரசிக்க ..
எல்லோரும் போல் உனக்கு பொய் சொல்ல ..

எல்லோரும் போல் உன்னை வர்ணிக்க ...
எல்லோரும் போல் நான் புலவன் இல்லை ..

என்னுள் மறைந்து இருந்து பார்க்கும் ..
என்னுள் என்னை தேடும் காதல் ..

உன்னில் மட்டும் வராமால் போகுமோ ..
எம்மை நாம் ஆக்கும் காலம் வரும் ..

அதுவரை நம் காதல் கவிதையில் ..
வாழட்டும் ரசனையில் இருக்கட்டும் ..

எம் குடில் நாம் அமைக்கும் வரை ..
என் இதய குடிலில் நீ உறங்கு ..
காதலே .

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

மீளா நட்புலகு வன்னி ..!

வன்னி மண்ணும் நட்புக்களும் என்பது எழுத்துக்களில் சொல்லவோ கண்முன் கொண்டுவரவோ முடியாத ஒரு அடன்பன்கொடி உறவுனலாம் ..
 
வழமையா வேலை வெட்டி இல்லாமல் சுற்றி திரியும் எமக்கு சாயங்காலம் ஆகிட்டாசைக்கிளை தூக்கிட்டு போறது  சந்தைக்கு பக்கமா ஒரு வீதி இருக்கு அதில் எல்லோரும் கூடி நிப்பது வழமை பம்மல் ...பகிடி ..சேட்டைகள் என்று போகும் அந்த இனிய சாயங்கால பொழுது ..
 
சந்தையில் வேலை முடிந்து நிக்கும் பெடியளும் அதில வந்துநின்று ஒரு குட்டி மகாநாடு நடக்கும் ஒரு ஓரமா போகும் போது கடைக்கண் பார்வை பார்த்து போகும் பெண்பிள்ளைகளும் என்ன இன்னும் நம்மாளை காணவில்லை என்று உள்மனதில் ஏங்கும் தோழனும் தூரத்தில் ஆளைக்கண்டால் கண்களால் ஆள் வருது என்று சொல்லும் பாலாய நட்பும் என்று அந்த பொழுதுகள் இனிமையானவை ..(காவல்துறை வந்தா ஆளுக்கு ஒரு பக்கம் போறது வேறுகதை ;) )
 
அப்படி ஒருநாள் நிக்கும்போது வழமையா அங்கு இறைச்சி கடையில்  வேலைசெய்யும் ஐயாவும் எங்களுடன் வந்து நின்று கதைப்பார் அப்படி ஒருநாள் கதைத்துக்கொண்டு நிக்கும்போது அவரின் உயர்தரம் படிக்கும் மூத்த மகள் அந்த வீதியால் வந்தால் வழமையா அந்த பிள்ளை வேறு வீதியால் போறது அப்பா நிப்பார் என்று அன்று வேறு ஒரு பிள்ளையுடன் வந்தார் ...
 
தூரத்தில் கண்ட தோழர்களுக்கு அவர் மகள் என்று தெரியாது எட்ட வரும்போதே எங்கடா இருக்கிறாள் இவள் ஒருநாளும் காணவில்லை நல்ல அழகான பிள்ளை என்று நக்கலை போட அவள் ஒருபார்வை பார்த்திட்டு போனால் பகிடி என்னென்றால் பக்கத்தில் நின்ற ஐயா தன் தாடையை பெருமையா தடவியபடி சொன்னார் பாருங்க ''அப்பன் அழகா இருந்தா மகளும் அழகாத்தான் இருப்பால் பெடியள்'' என்று ..
 
 
அவள் பார்த்தது அப்பருக்கு பெடியளோட என்ன அலுவல் என்றுதான்.... ஐயா அப்படி சொன்னதும் ஒருவர் முகத்திலும் ஈஆடவிலை என்ன செய்வது என்று ஒரு வியப்பு ..திகைப்பு வந்திட்டு ஆனால் அவர் சொன்னார் பெடியள் என்றால் அப்படித்தான் இதில் என்ன இருக்கு அப்படி பார்த்தா நான் உங்களுடன் நின்றதுதான் பிழை என்று சொல்லி எம்மை எல்லாம் ஒரு சகய நிலைக்கு கொண்டுவந்தார் ...
 
பிறகு ஒருநாள் தீபாவளி என்று அனைவரையும் வீட்டுக்கு அழைத்து எல்லோருக்கும் சாப்பாடு போட்டு தன் குடும்பத்தில் ஒருவராக எம்மை எல்லாம் ஆக்கி விடார் அன்றில் இருந்தது நாம் அவளின் அண்ணன் ஆகிபோனோம் அவள் எமக்கு தங்கையாகி போனால் எங்கு கண்டாலும் போனாலும் டேய் அண்ணன்களா வீட்டுக்கு போங்கடா என்று எம்மை சண்டைக்கு இழுப்பவளா இருந்தால் ...
 
 
வன்னியின் பெருமையும் ..உறவும் ..நட்பும் சாதி மதங்களை கடந்தது மனிதமா இருப்பதுக்கு எல்லோரும் எல்லோரையும் அரவணைத்து கூடி வாழ்த்ததே காரணம் எனலாம் ..
 
vanni-600x377.jpg

உங்களிட்ட சொல்லாமல் விடுறதே ..!

நேற்று ஒரு சம்பவம் வேலை இடத்தில் நடந்தது எல்லோரும் சாப்பிட அமர்த்து இருக்கும்போது கண்டவர் ..காணாதவர் என்று வர அனைவருக்கும் மாறி மாறி வணக்கம் சொல்லிட்டு உணவை சூடாக்கி சாப்பிட தொடங்கும் நேரம் பார்த்து பக்கத்தில் இருந்த ஆளின் தொலைபேசி ..பார்த்த முதல்நாளா என்னும் பாடலுடன் ஒலியை எழுப்ப அனைவரும் சத்தம் வந்த திசையை நோக்கி பார்க்க சட்டென போனை எடுத்து  ஐந்து நிமிடம் கழித்து எடுக்கிறேன் வையும் என்று பதில் சொல்லி இணைப்பை துண்டித்தார் அவர் ...


அந்த போன் வந்த நேரம் தொட்டு அருகில் இருந்தவருக்கு முகம் மாறிட்டு சாப்பிடாமல் அவரை பார்ப்பதும் பின் சாப்பாட்டை பிசைவதுமா இருந்தார் அவரின் செயலை பார்க்கும்போது ஆள் செம கடுப்பா இருக்கு என்று மட்டும் விளங்குது ..சரி என்னதான் பிரச்சினை என்று கேட்டார் அந்த போனை எடுத்து பேசியவர் உடனம் கடுகடுத்த தொனியில் நீ என்று தொடங்கினார் நீ செய்வது ஒன்றும் நல்லா தெரியவில்லை யாரு இப்ப போன் அடித்தவள் ..எப்படி பழக்கம் ..இது என்ன புது பழக்கம் ..நீ கலியாணம் கட்டின ஆள் என்று அவளுக்கு தெரியாதா என்று சராமாரியா கேள்விகள் அவரை நோக்கி எழுப்ப போன் எடுத்தவர் சொன்னார் இங்க நோமல் நீங்க என் டென்ஷன் ஆகுரியல் வேலை பாருங்க அது என்னுடைய பிரச்சினை என்று ஒரு நக்கலா பதில் சொன்னார் ....

இவருக்கு கடும் கோவம் வந்திட்டு உடனம் எழும்பி போனவர் கொஞ்ச நேரம் செல்ல வந்து உண்ட போனை தா என்று வாங்கினார் அவரும் கொடுத்துட்டு இருந்தார் ..பிறகு பார்த்தா அவரின் வந்த போன் நம்பரை எடுத்து இவர் அழைப்பை ஏற்படுத்தினார்

எதிர் முனையில் ...

ஹலோ

இவர் ...வணக்கம் நீங்க யாரு 

போன் எடுத்தது நீங்க நீங்க சொல்லுங்க யாரு என்று ..

இவர் ..நீர் ஏன் மற்றவர் குடி கெடுக்க நிக்கிறீர் அந்த பிள்ளை பாவம் இவன் கலியாணம் கட்டி பிள்ளை வேற இருக்கு உனக்கு என்ன கதை வேண்டி இருக்கு அவன் கூட ..

ஹலோ ..மரியாதை யாரு யாரோட கதைத்தது இப்ப உங்களுக்கு என்னதான் பிரச்சினை ..

இஞ்ச பாரு பிள்ளை அது எல்லாம் அதர்மம் கடவுளுக்கு ஏற்காது இப்படி செய்யுறது தப்பு அதுக்கு எல்லாம் பேஸ்புக் தான் காரணம் என்று நினைக்கிறன் ...

அண்ணனே நீங்க யாரு ..யாரோட கதைக்கணும் உங்களுக்கு என்னதான் பிரச்சினை ..

அவனை நீ விட்டுடு அவன் குடும்பம் இருக்கு பிள்ளைகள் எல்லாம் சின்ன சின்ன ஆக்கள் உனக்கு தேவை என்றால் ..........................எங்காவது போறது .................நீ எந்த ஊர் ..யாற்ற மகள் ..என்று செமையா சண்டை போகுது ...

ஹலோ.. அப்படி எல்லாம் விடமுடியாது நான் அவரு கூடத்தான் வாழுவன் நீங்க என்ன பண்ண முடியுமோ பண்ணுங்க இங்க போன் எடுத்து வெருட்டுற வேலை எல்லாம் வேணாம் வையுங்க போனை என்று அதட்டலா கதைத்துபோட்டு போனை வைத்தார் அந்த பெண் ...

இந்தாள் அங்க போகுது இங்க போகுது சீ ..சீ .என்ன மனுஷர் இப்படி எல்லாம் வாழுறதே இதுக்கு தூங்கி சாகலாம் அல்லது ஓடுற மெற்றோ வழிய விழுந்து தொலைக்கலாம் ..

சரி என்னதான் பிரச்சினை என்று கேட்பம் என்று தனியா ஆளை அழைத்து ஏன் அண்ணே இவ்வளவு கோவம் என்னாச்சு ..

நீ இப்படி செய்யுறது எனக்கு பிடிக்கவில்லை நான் உன்னை அப்படி ஒரு நல்ல பிள்ளை என்று நினைக்க நீ ஏன் இப்படி குடும்பத்துக்கு ஏற்காத வேலை செய்யுற ..

இது என்ன இழவு நான் எங்க பிழை செய்தேன் ஆண்டவா என்னாச்சு உங்களுக்கு ..

இப்ப சாப்பிடும் பொது உனக்கு போன் அடிச்சது யாரு ..

மனுஷி ஏன் ..

இல்லை அவள் இல்லை உண்மையை சொல்லு ...

இது என்ன கொடுமை மனுஷிதான் வேணும் என்றால் வந்த நம்பருக்கு திருப்பி அடியுங்கோ இந்தாங்கோ என்று போனைக் கொடுக்க அந்த நம்பருக்கு இணைப்பு போனது ..மனுஷன் போன் பண்ணுறார் என்று நினைத்து ஓம் சொல்லுங்க என்று தொடங்கினால் அவள் இல்லை பிள்ளை நான் நவம் அண்ணை சும்மா எடுத்தனான் கனநாள் காணவில்லை அதுதான் சுகம் கேட்பம் என்று ..எப்படி இருக்கிற பிள்ளைகள் எல்லாம் சுகமே என்று கேள்விகேட்டு மழுப்பிட்டு தந்தார் நானும் ஓகே என்று சிரிச்சுட்டு போனை வாங்கி வைத்தேன் ...

இப்படியே பின்னுக்கு போனா குழப்பம் இங்கதான் தொடங்குது என் போன்  அழைத்த பொழுது என் மனைவியின் நம்பரை நான் லவ்வர் என்று அதில் குறிப்பிட்டு வைத்துள்ளேன் நாம் காதல் கலியாணம் என்பதால் என்னமோ அந்த பெயரில் இப்ப ஒரு நாலு வருடம் மேலாக இருக்கு அழைப்பு வரும்போது அந்த பெயர் திரையில் தெரிய எனக்கு பக்கத்தில இருந்தவர் எங்க குடும்ப நண்பர் நவம் அண்ணை அதை கவனித்து விட்டார் இவனுக்கு யாரு லவ்வர் ....எடுத்த போனை ஏன் கதைக்காமல் கட் பண்ணி பிறகு எடுக்கிறன் என்று வைத்தான் ..நான் பக்கத்தில இருப்பதாலோ என்று அவர் பலமாதிரி யோச்சிச்சு குழப்பி போனார் ..

அதனால் என் போனை வாங்கி வந்த நம்பர் எடுத்து தன் போனில் இருந்து அழைத்தார் இவர் என் மனுஷிக்கு தான் போனை போடுறார் என்று எனக்கு லையிட்டா விளங்க நான் வீட்டு போனுக்கு அடித்து ஆளை குழப்படி என்று நம்மளுக்கு சொல்ல அவளும் எகிறி கதைக்க இவர் நல்லா குழம்பி போனார் ..

சரி பாவம் மனுஷன் குழம்புது என்று நான் உண்மையை சொன்னேன் இப்ப அவர் எப்படி வீட்டுக்கு வாறது அந்த பிள்ளையை கண்டபடி பேசிப்போட்டன் சே ..முகத்தில் முழிக்க முடியாமல் பண்ணிட்ட நீ உன்ர விளையாட்டுக்கு நானே கிடைச்சேன் என்று பேசிட்டு போறார் ..

ஆகா நல்லது கெட்டது தெரியாமல் களத்தில் இறங்கினது அவரின் பிழை பாருங்கோ ...அவரின் நல்ல மனசை எண்ணி நான் பெருமைப்படுறன் எங்காவது கதைச்சுட்டு போறான் என்று இருக்காமல் நேரடியா கேட்டார் அதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சு போன விஷயம் ...

அவர் மேல் இருந்த மதிப்பும் ..நட்பும் இன்னும் இருமடங்கா கூடியது எனக்கு .

பலம் ..!

அமர்த்து இருக்கிறார் நடுவில்.. 
ஆலாவட்டங்கள் ..சாமரங்கள் ..
கன்னியர்கள் கூட்டமாக விசியபடி ..
நீதியை காக்கும் சபையாம் அது ..
அன்றில் இருந்து இன்றுவரை உலகில் ..
ஓலம் இட்டார் எல்லாம் ஒடுவரும் இடம் ..
ஒப்பனைகள் கலையாமல் பார்த்தபடி ..
தளங்கள் பல போட்டு தலையாட்டி பொம்மைகள் ...
இன்னும் ஒரே பாட்டுக்கு ஆடுகிறது ..
இசையும் மாற்றம் இல்லை அவர்கள் ..
இயல்பும் மாறவில்லை குணங்கள் எப்படியோ ..
கூடியிருத்து பேசுகிற நேரம் மட்டும் ..
அவர்களுக்கு உலகம் வெளிப்பா தெரியும் ..
அப்பொழுது கூட ஒருபகுதி ஒளிப்பாக ..
அங்குதான் கனியம் இருக்கும் வளம் இருக்கும் ..
தங்களுக்குள் கைகுலுக்கி பங்கு பிரிப்பர் ..
வெளியில் வந்து போட்டோக்கு போஸ் கொடுத்து ..
பொங்கி எழுந்து உரையாற்றி கண்ணில் ..
சினம் காட்டி மீறல் என்பர் குற்றம் என்பர் ..
துரித செயல் என்பர் நடவடிக்கை வேகம் என்பர் ..
பாவம் ஏழைகள் எல்லாவற்றுக்கும் ஏமாந்து ..
பெருசா வருது பெரியவர்கள் பேசுவர் ..
நம்பிக்கை இருக்கு என்போர் நாவை அடக்குவர் ..
சுண்ணாம்பும் இல்லா இடத்தில் ...
சுகந்திரம் எதுக்கு என்று சபை முடிவு எடுக்கும் ..
நடுவில் அமர்த்து இருக்கும் அவருக்கு ..
இப்பொழுது மேலே மின்விசிறியும் ..
பக்கத்தில் ஏசியும் வேலைசெய்யும் ..
காட்சிகள் மாறி இருக்கும் ஆனால் அவர்கள் ..
உலக பார்வை மாறாது அப்படியே இருக்கும் ..
டாவின்ஸி கோட்ப்பாடு எங்களுக்கு .
படிக்கலாம் செயல்தான் கடினம் ..
சிறுபான்மை இனத்துக்கு .

சங்கம் ..!

சங்கம் வளர்த்து தமிழ் வளர்த்த குடி ...
சங்கள் தொடங்கி வயிறு வளர்க்கிறது ..
மாதம் மாதம் கூடுகிறார் சேர்கிறார் ..
டீயும் ..வடையும் ..ரோலும் கட்டியபடி ..

ஒரு குடும்பம் அதில் நாலுபேர் நாங்களே ..
எல்லாம்  மாமன் மச்சான் சித்தப்பன் ..
நீ இன்று தலைவர் நான் நாளைய தலைவர் ..
எங்களுக்குள் எடுக்கும் தீர்மானம் இது ..

கணக்கும் இல்லை வழக்கும் இல்லை ..
கேள்விகேட்க பத்து ரூபா கொடுக்கணும் ..
பதில் சொல்ல செக் கொடுக்கணும் போல ..
சிட்டைகள் வந்து விழுகுது சிரமதான வேலையாம் ..
சீரழிந்து கிடக்கும் உறவு பாணுக்கு காசில்லாமல் ஊரில் ..

சீட்டு காசும் வட்டிகாசும் வெள்ளையா ஆகுது சங்கத்தில் ..
சின்னவீடு எல்லாம் பெரியவீடு ஆகுது லோனில் ..
சின்னக்கடை சூப்பர் மார்கெட் ஆனது ஊரான் காசில் ..
இதை கேட்கவும் காசுகட்டனும் சங்கத்தில் ..
என்னடா இது ஊருக்கு வந்த சோதனை ...

தெனிந்திய நடிகை வந்து ஆடினால் மேடையில் ...
கூடவே பாட்டுக்காரன் வேறையாம் செலவு யாரு ..
அதுவும் சங்கம்தான் அங்க சங்கரர் பிள்ளை பாலுக்கு அழுகுது ..
லட்சம் கொடுத்து நடிகை கூப்பிட்டோம் ...
சூப்பரான சிங்கர்களை அழைத்தோம் உங்களுக்கா ..

இல்லை அதிலும் இருக்கு உள் கூத்து ..
வாறதோ இரண்டு பேர் அவர்களுடன் வாறதோ ..
இருபது பேர் பின்னியில் வியாபாரம் கோடியில் ..
இதுக்கு சங்கம் ஒரு கை பிடியில் ..
நடிகனை கூப்பிடும் செலவில் ஊரில ..
நாகம்மைக்கு ஒரு கொட்டில் போட்டு கொடுக்கலாம் ..

திட்டம் எல்லாம் சேது சமுத்திரம் போல ..
அங்கிருத்து வெட்டினா எனக்கு இலாபம் ..
இங்கிருத்து வெட்டினா உனக்கு நட்டம் ..
எங்கிருத்து வெட்டுவே என்று பேசியபடி ..
இருக்கு எங்கிருந்தோ வந்தவன் கப்பல் விடுவான் ..

ஒரு கார் எடுத்து நாலாவது கியர் போட..
இடம் காணாது ஊர் முடிந்திடும் எல்லையில் ..
இதில என்னது உன்னது என்கிறார் கொள்ளையில் ..
இது எல்லாம் பார்த்தபடி இருக்கிறேன் படலையில் ..
தண்ணி வவுஷர் எப்பவரும் என்று வெய்யிலில் ..

சங்கம் எல்லாம் சங்கமம் ஆனது சந்தியில் ...
சங்கதிகள் பேசியபடி சங்கூதுபவன் இவன்தான் ..
சட்டத்தை கையிலெடு சடப் மவுத் என்று பூட்டு ....
சாட்சியும் இல்லை சண்டையும் இல்லை நாம் ..
சங்கம் வளர்த்து வயிறு வளர்ப்போம் வாரீர் .