சனி, 7 டிசம்பர், 2013

அப்படி பெரிய...... :)

நம்ம ஊருல இரண்டு பேர் இருப்பாங்க எப்பவும் அவங்களால் ஒரே சிரிப்பு தான்... மற்றவனை ஏமாற்றுவது இவங்களின் வேலையா இருக்கும்.. ஒருநாள் பனையை பார்த்து இருவரும் மிக கவனமா அவதானமா பேசிக்கொண்டு இருந்தாங்கள்.. அக்கம் பக்கம் உள்ளவனுக்கு எல்லாம் குழப்பம் என்ன இப்படி கதைக்குறாங்க என.. பக்கத்தில் போய் பார்த்தா ஒன்னும் இல்லை.. அப்பொழுது முதல் ஆள் கேட்டான் எப்படி ஐந்து காலால் நடக்குது என்று.. மற்றவன் கேட்டான் ஓம் ஒரு காலை தூக்கிட்டு ஊருது பாரு எறும்புக்கு எவ்வளவு துணிவு என.. சுற்றி நின்டவனுக்கு அனைவருக்கும் கடுப்பாகும்.. பேசிட்டு போயிடுவாங்க அப்படி அவங்களின் அலப்பரை கொஞ்சம் இல்லை .


ஒரு முறை இருவரும் சைக்கிளில் தூரம் பயணம் போயிட்டு இருந்தாங்க.. அப்பொழுது காட்டு பாதையில் போனவர்களுக்கு ஊர் எல்லை வந்ததும் சாப்பிடும் எண்ணம் வர ஒரு நிகழ்வு நடந்த வீட்டுக்கு போயிட்டாங்க.. அங்க முதல் பந்தியில் இருந்து சாப்பிட்டு கொண்டு இருக்க சாப்பாடு பரிமாறியவர் இவர்கள் இருவரையும் கேட்டார் நீங்க யாரு தம்பி என.. அப்பொழுது முதல் ஆள் சொன்னான் நாங்க பெண்ணு வீட்டுகாரர் என்று.. திடுக்கிட்டு கேட்டார் சாப்பாடு போட்ட ஆள் நீங்களா ஓகே வடிவா சாப்பிடுங்க வேற என்ன வேணும் என கேட்டு கேட்டு நல்ல உபசரிப்பு நடந்துது.. அப்பொழுது முதல் ஆள் சொன்னான் பார்த்தியா இதுதான் அரசியல் எப்படி கவனிப்பு போகும்போது சாப்பாடு கட்டிட்டு போகவேணும் என்று திட்டம் வேற போட்டாச்சு.. இப்படி பேசிய படி சாப்பிட்டு முடிந்து கைகளை கழுவி கொண்டு இருக்க அவர்களை நாலுபேர் சுற்றி வளைத்து எருமை மாடு பிடிக்கும் கயிறால் கட்ட முற்பட . பயந்து போன இருவரும் குழப்பத்துடன் என்ன நடக்கு எங்களுக்கு மரியாதை இல்லாட்டி என்னாகும் எண்டு தெரியுமே இப்ப நிப்பாட்டுவன் கலியாணத்தை என உரக்க கூறி கலவரம் பண்ண வீட்டுக்காரன் சொன்னான் டேய் முட்டாள் இது சாமத்திய வீடு நிங்க களவு எடுக்க வந்ததும் இல்லாமல் எங்களை மொக்கன் ஆக்க பார்த்தா விடுவமா என.. அதன் பிறகு விழித்த இருவரும் உண்மையை சொல்ல மன்னித்து அனுப்பி விட்டார்கள் அவர்கள்..


பின்னர் அதில் ஒருவன் தென்பகுதிக்கு போயிட்டான்.. ஒரு எட்டு மாதம் இருக்கும் போனவன் வந்தான்.. கண்டி ரோட்டால் வந்தவன் ஒரு சைக்கிள் கடையில் கதைத்து கொண்டு இருந்தான்.. அப்பொழுது கடைக்காரன் கேட்டார் என்ன தம்பி சிங்களம் கதைப்பியா என அதுக்கு அவன் ஓம் அண்ணே சிங்களம் தறோ என்று சொல்லி தன் பெருமைகள் பேசிட்டு இருந்தான் . அப்பொழுது ஒரு நாலு சக்கர வாகனம் காற்று போய் ஒருவர் உருட்டி வந்தார்.. வந்தவர் சிங்கள மொழி கதைப்பவர் சிங்களத்தில் கேட்டார் ஒட்டி தர முடியுமா என.. விளங்காத கடைக்காரன் இவனை பார்த்து கேட்டார் உனக்கு தானே சிங்களம் தறோ என்ன சொல்லுறான் என கேட்டு சொல்லு என்று இவன் குழம்பி ஓகே என்று எழும்பி என்ன என கேட்டான் அவர் மீண்டும் சிங்களத்தில் ஒட்டி தர முடியுமா கேட்க இவன் கடைகாரானுக்கு சொன்னான் பதில் பாருங்க .........

ஓம் அண்ணே அவன் கதைப்பது சிங்களம் தான் என்று கடுப்பாகின கடைக்காரன் சுட்டியலை தூக்க பாட்டி எஸ்கேப் இப்படி தான் அறியா சிங்களத்தால் அவன் பட்ட பாடு .

பிறகு ஒருநாள் கொஞ்ச பேருக்கு கதை சொல்லிட்டு இருந்தான் ஆவலா அனைவரும் கேட்டுக்கொண்டு இருந்தனர் முயல் ஆமை கதை.. இதில் முயலும் தண்டனை பணம் கட்டியது ஆமையும் வரிகட்டியது பற்றி அனைவருக்கும் ஆச்சரியம் எப்படி சாத்தியம் என் அவைகள் பணம் கட்டவேண்டி வந்தது என்று குழம்பி இருக்கு இவங்கள் இருவரும் டீ குடிக்க போயிட்டு வந்து கேட்டாங்கள் விடை தெரியுமா என்று எல்லோரும் விழியை உருட்டியபடி இல்லை சொல்லு சொல்லு என் காசு கட்டியது என்று வினாவ முதல் ஆள் சொன்னான் முயல் ஓவர் இஸ்பிட் (50 வேகத்தில் போகாமல் 150 போனது ) அதுக்கு குற்றப்பணம் என்று அப்ப ஆமை ஏன் கட்டினது வரி மற்றவன் சொன்னான் ஆயிரம் முட்டையை ஒழித்து மறைத்து கொண்டுவந்தது பிடிபட்டதால் கட்டியது .

இப்படி ஊருக்குள் சிலர் இருப்பங்கள் அண்டப்புளுகு ஆகாஷாபுளுகனுகள் அப்படி பெரிய புளுகங்கள் தான் இவர்கள் இருவரும் தாங்கள் ஜோக்கர் என்று தெரியாமல் வாழும் ஹிரோக்கள்
:D :D :D

தமிழரின் முகவரி .!

எட்டுகோடிக்கு மேல்லானோர்
எழுதி ஒட்டிய கடிதம் கேட்பார்  அற்று
ஆசியாவின் ஒரு பெருநிலத்தில்
பரவி கிடந்ததது சிதறி இருந்தது ..

எமக்கான பதிலையும் நாம் யார் ?
என்னும் கேள்விக்கு விடையும் அதில்
கேட்டு எழுதி இருந்தோம் கவனமா
ஆனாலும் அதை உலக பெட்டியில் போட ...

அஞ்சி பயந்து நடுங்கி  கைகளில் வைத்து
பைகளில் மறைத்து அன்னியர் பாரது ..
பக்குவமா தலைமுறைகளுக்கு மாற்றி
மாற்றி கொடுத்து பாதுகாத்து வைத்த கடிதம் ...

வள்ளுவன் வந்தான் கம்பன் கூட வந்தான்
நக்கீரர் நாவலர் என பலர் வந்து போயிம்
எமக்கான கடிதத்தின் முகவரி கிடைக்க வில்லை
நாங்களும் வருந்தவில்லை தேடியபடி இருந்தோம் ..

கார்த்திகை திங்கள் வேளையில் வல்வையில்
கிடைத்தது முகவரி உலக தமிழரின் நிஜ வரி
தேங்கி கிடந்த அஞ்சல்கள் எல்லாம் எழுதியது
எம் தலைவனின் பெயர் அதை துணிந்து ..

உலகமே தேடிவந்து பெற்றுக்கொண்டது கடிதம்
ஈழத்தை ஐநா வரை கொண்டுசென்று விட்டது
எம் தலைவனின் முகவரி இட்டு இனி நாம்
எழுதுவோம் எவருக்கும் அஞ்சாத கடிதம் ...

யாம் இருக்க பயம் ஏன் என்றான் தமிழ்குமரன்
நாடு பெரிது என்று வாழ்த்தார் எங்கள் ஈழக்குமரன்
அகவைகள் வந்து போகும் எங்கள் தலைவருக்கு
முகவரி மட்டும் தமிழீழம் ஆகும் தமிழருக்கு ...

உலக தமிழரின் பெரும் தலைவருக்கு
ஈழத்தமிழரின் அருமை தலைவருக்கு
விடுதலை புலிகளின் படை தலைவருக்கு
தமிழீழத்தின் அரியணை புதல்வருக்கு ...

எம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா .!

pirapakaran.jpg

நான் நினைவிழக்கும் தருணம் .!

பாட்டியின் கைகளால் சுடப்படும் அப்பம் ...
அம்மாவின் சேலையால் தலை துவட்டும் போது..
அப்பாவின் தோளில் ஏறி இருந்த பொழுதுகள் ..
அண்ணனின் கைகளால் முதல் வாங்கிய அடி ..

அக்காவின் கை பிடித்து கோயில் போன காலம் ..
தங்கையை வெருட்டி அழவைத்த நேரம் .
தம்பி என்னை கண்டால் ஓடி ஒழிந்த நிமிடம் ..
ஒரு ரொட்டியை எட்டா பிரித்த சமயம் ..

விலகி போன உறவு கதறி அழும் கணம்
காதல் என்னை கலங்கடித்த கணப்பொழுது ..
முதலில் அவளை தாவணியில் பார்த்த படம் ..
கோயிலின் வடக்கு வீதி மேளசமா  இனிமை ...


சாண்டிலியன் கடல்புறா வர்ணனனை ..
மெருவிரலால் தடவி மட்டி எடுத்த கடல் ..
இசையில் மயங்கி ஒன்றிப்போன சங்கீதம் ..
முதல் சினிமாவில் இருட்டில் தடவிய கதிரை ...

எல்லாம் நினைவிருக்கு எனக்கு ஆனால் ..
உன்முகமே முதல் இருக்கு மனதில் ..
நீ என்னை தேரடியில் கடந்து போனபோது
மொத்தமாய்  மறந்து போனேன் பெண்ணே .


வியாழன், 7 நவம்பர், 2013

சதுரங்கம் .!

போரியலின் அடிப்படை
படைகளின் அணி ஒழுங்கு
தகமைகளின் நெறி வழி
ஒரு சிறந்த போரியல் ஆசான் ..


ஆரம்பிப்பவன் சிப்பாய்
ஆனால் கட்டளை பீடம் அரசன்
நோக்கம் எல்லாம் தன் தலைவனை
காப்பது மட்டுமே சூழ்சி வலையில் இருந்து ..

இத்தனைக்கும் படையை ஒழுங்கு
படுத்தி பகையை நிலைகுலைய
செய்வதும் வைப்பதும் ராணியாம்
உதவிக்கு மந்திரி நெடுக்க வழிநடக்க ..

முன்னேருவோர் வீழ்வார் என தெரியும்
ஆனாலும் அடுத்த கணம் நிலையை பலப்படுத்தி
பதில் தாக்குதல் நடக்கும் இறப்பு பெறுமதி
வீழ்ந்தவர் பொறுத்து கணிக்கப்படும் ...

ஆனாலும் சதுரங்கம் வாழ்க்கையின்
மிக சிறந்த ஆசான் போரியலின் ஆசிரியன்
களங்களை மாற்றி அமைக்கும் வல்லமை
தந்திரங்களை உடைத்து வெளி வரும் கெட்டித்தனம் ..

காப்பு தாக்குதல் திறன்களை கற்று கொடுக்கும்
கருப்பு வெள்ளை காய்களில் எவ்வளவு இருக்கு
நாம் படிக்க இருக்கு இன்னும் அதிகமா
ஒவ்வரு நகர்வும் நில் கவனி முன்னேறு ...

வேவுபுலி ..!

நீர் பகைஅருகில் போகும்போது
பாம்புகளும் நடுங்கும் பாதைதனை விடும் ..
கம்பி பட்டு முள்வேலிகள் பூமாலையாய்  தெரியும் ..
எதிரியின் மண்ணரன் சிறு புற்றாய் இருக்கும் .

கந்தகப்பொதி புத்தக்பைபோல இருக்கும்
சுடுகோல் எழுதுகோலாய் இருக்கும்
கைக்குண்டு அழி ரப்பர் ஆகமுன் நிங்கள்
அதிகாலை மீண்டும் வந்திடுவீர் ஓய்விடம் ...

மச்சான் நீ எனக்கு பூசிவிட்ட கரி போகவில்லை
நாளை உனக்கு பூசுறன் கரி எண்ணை கலந்து
கழுவினாலும் போகாது காய்ந்தாலும் போகாது
பருவாயில்லை மச்சான் வெடிவிளுந்தா போயிடும் ...

டேய் நான் பக்கத்தில் உள்ளவரை ஒரு ரவை ..
உன்னை நெருங்கா வேங்கையா கொக்கா ..
என்று நீ கட்டி என்னை அணைத்த கணம் நினைவில் ...
கண்கள் கண்ணீரை தூவுதடா உன் மேல் என்
பாசக்கார தோழா..sad.png
1002457_561110620609791_343191837_n.jpg


நானும் அப்பாச்சியும் .!

எனது சிறுவயது முதல் என்னை அதிகமா நேசித்த மனிதர்களில் எனது அப்பாச்சி  முன்னணியில் உள்ளார் அம்மாவை விட அவர் மேல பாசம் அன்பு கொள்ளை பிரியம் எனக்கு ஒரு நெடியெனும் என்னை காணமல் இருப்பது அப்பாச்சிக்கு எதோ தொலைத்து விட்ட சோகம் இருக்கும் எங்க போட்டான் இன்னும் காணவில்லை சுற்றிக்கொண்டு வருவான் ஆளை காணம் செக்கல் பட்டுடு விளக்கு வைக்கும் நேரம் ஆகுது இவனை காணம் என தனியா விட்டின் திண்ணையில் இருந்து கதைப்பார் .

அம்மா பேசியபடி இருப்ப அவன் வருவான் நீங்க வந்து தேத்தண்ணிய குடியுங்க எங்க போகபோறான் எங்காவது பெடியலோடா நிப்பான் இப்ப வந்திடுவான் என்று சொன்னாலும் அப்பாச்சி கேளாது நாலுதரம் ரோட்டுக்கு வந்து எட்டி பார்க்கும் சிலவேளை அப்பொழுதுகளில் நான் வருவேன் ......'என்ன கிழவி ரோட்டில யாரை சயிட் அடிக்கிற என்று கேட்படி ' ஓம் ஓம் எனக்கு இப்பதான் 18 ஆள் பிடிக்கிறன் நீ எங்க உலாத்திட்டு வாற என்று என் பின்னாடி வருவார் போய் முகத்தை கைகாலை கழுவிட்டு வீடுக்குள்ள வா நேரம் கேட்ட நேரம் வாறது பேய் பிசாசுடன் என்று புறுபுறுப்பு நடக்கும் .

சரி சரி கிழவி உனக்கு கதை கூட புட்டை போடு என்று சொன்னா ஓம் மாப்பிளை நீ வைச்ச ஆள் நான் சாப்பாடு போடுறன் பொறு என எனக்கு பதில் சொல்லி  குசினிக்கு போகும் கிழவி கறிச்சட்டி திறந்து பார்த்து ஏண்டி பிள்ளை குழம்புக்க ஒண்டையும் காணம் என்று அம்மாவிடம் கேள்வி போகும் அம்மாவோ கிடக்கிறது போட்டு கொடுக்க சாப்பிடுவன் என்று சொல்லுவா கிழவி கேட்காது உடனம் ஒரு முட்டை பொரியும் அவ்வளவு வேகமும் வேலைக்கு பஞ்சி படாத ஆளும் அப்பாச்சி மண்வெட்டிய தூக்கினா அவ்வளவு காணி புல்லும் செருக்கிதான் வைப்பா மனவலிமையும் உடல் வலிமையையும் உள்ள ஆள் அப்பாச்சி ....

காலமும் நேரமும் வேகமாக நகர உறவுகள் சொந்தங்கள் பிரிவுகள் என சுழற்ச்சி முறையில் வர அதுக்கு நாங்களும் விதிவிலக்கா என்ன அதில் தப்பி போக o/L எடுக்கிற நேரம் போராட்டம் என்னும் பாதையில் போயிட்டம் சிறிது காலம் மனம் பெரும் கஷ்டம் ஏக்கங்களை சுமந்தாலும் நண்பர்கள் வேலைகள் என நாட்கள் நகர அப்பாச்சி இரவுகளில் நினைவில் எப்படியும் வருவார் என்னை அறியாமல் என் கண்கள் நீரை விட்டபடி இருக்கும் கிழவி இப்ப என்ன செய்யும் சாப்பிடுதா அல்லது கோயில் குளம் என்று திரியுதா சொல்லாமல் வந்திட்டன் தேடியிருக்கும் அன்று பூரா என மனதில் ஒரு ஓரமா வலி இருக்கும் இன்னும் சிறிது காலம் எப்படியும் பார்க்கலாம் இப்ப என்ன வேற நாட்டுக்கா போயிட்டன் என்று மனதை தேற்றி உறக்கம் தழுவும் ...


காலம் உருண்டு ஓட வெளியில் போய் வரும் சுழலும் எனக்கு அமைய ஒருநாள் இரண்டு வருடம் கழிந்து இருக்கும் வீட்டுக்கு போகிறேன் அங்கு அவர்கள் இல்லை பக்கத்து வீட்டு ஆண்டி சொன்னா அம்மா ஆக்கள் இப்ப இன்னாரின் காணியில் வீடு போட்டு இருக்கினம் என்று சரி எனகூறி அங்கு போனா கிழவிதான் முன்னுக்கு இருக்கு மேட்டர் சைக்கிளை கிழவிக்கு நேர விட்டுக்கொண்டு போக அசையாமல் கிழவி இருக்கு என்னன்னா எப்படி இருக்குற குரலில் யாரு என பிடித்த கிழவி அழுது குளறி கூப்பாடு போட்டு தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து நிண்டிச்சு சரி சரி விடு விடு இப்ப என்ன நான் உனக்கு முன்னுக்கு நிக்கிறன் எதுக்கு அழுகிற விடு தேத்தண்ணி போடு எங்க அம்மா என்று கேட்டபடி நான் அமர .....

அம்மா தங்கச்சிய கூப்பிட போயிட்ட எதோ பாடம் படிக்க போறவள் அந்த வாத்தியார் விட்டுக்கு பொழுது படுகுது அதுதான் கூட்டி வர போறா சரி மகனே நீ இப்படி கறுத்து இருக்குற வளத்திட போல கிடக்கு இப்ப எனக்கும் கண் பெரிசா தெரியிறது குறைவு என்று கூற ஓம் நான் முதல் நல்ல வெள்ளைதானே சும்மா இருண அப்பர் எங்க இப்பவும் தண்ணி அடிக்கிறவரா குழப்படியா உன்ர மகன் என்றவுடன் இல்லை நீ போனப்பிறகு குறைவு கவலைதான் அவனுக்கு தடி வளர்த்தபடி இருக்குறான் யாரோ இண்டைக்கு வயல் வெட்ட கூப்பிட்டது போல போயிட்டான் வருவான் இப்ப என் நீ போகப்போறியா மகனே கொஞ்சநேரம் இரு அம்மாவும் அப்பாவும் வந்திடுவினம் தங்கச்சி வேற உன்னை பார்க்க ஆர்வமா இருக்குறாள் இல்லையென நேரம் போகுது நான் எட்டி பார்த்திட்டு போவம் என்று வந்தனான் இனி இங்கால வேலை அடிக்கடி வந்து போறன் யோசிக்காமல் இரு நல்ல சாப்பிடு மருந்து எடு கண்ணுக்கு ஓம் ஓம் நாளைக்கு கட்டையில போற எனக்கு இதுகள்தான் குறை .........

வீட்டுக்குள் ஓடி சென்று தனது பையில் இருந்து ஒரு 200ரூபா கையில தந்தா எதாவது வாங்கி சாப்பிடு மோனே உடம்பை பாரு எங்க இருந்தாலும் நீ நல்ல இருப்ப எனக்கு நம்பிக்கை இருக்கு தங்கச்சி உன்னை நம்பிதான் இருக்குறாள் அவளை பாரு நான் இண்டைக்கோ நாளைக்கோ வாழ்த்து முடிச்சிட்டன் நீங்க வாழுற பிள்ளைகள் இன்னும் நிறைய இருக்கு பார்க்க என கட்டி அனைத்து முத்தம் இட்டு கண்கலங்கி நிக்கும் கிழவியின் கண்களை பார்த்து பேசும் அளவு நான் இல்லை என் கண்களும் நீ நிறைந்து இருந்ததால் சரியன போட்டு வாறன் அம்மா வந்தா சொல்லு சிலவேளை அடுத்த கிழமை வருவேன் போட்டு வாறன் ...........


காலம் வேகமா போக சமாதான  காலம் வர நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பா வந்தா இங்கயும் தனிமை வாட்டி எடுக்கும் சில காலம் அப்பாச்சிக்கு ஒரு போனை போட்டு ஒரு நிமிடம் கதைத்தா எதோ ஒரு சுமை இறங்கிய மாதிரி இருக்கும் கிழவி அங்க கதைக்கும் வேகம் இங்க கேட்கும் 'எண்டா மோனா அங்க எதோ காட்டு கொடுப்பினமாம் உனக்கு தந்திட்டங்களா ' என்று கேட்கும் வேகம் இங்க உள்ள பக்கத்து வீட்டுக்காரனுக்கு கேட்கும் ...இல்லையென அதுக்கு கனகாலம் வேணும் என்று சொன்னா ஆ அது எப்படி அவன்ட மகனுக்கு கொடுத்தவங்கள் இவனட மகனுக்கு கொடுத்தவங்கள் எண்டு எல்லா விபரமும் கிழவி எடுத்து விடும் நாட்டில இருந்த படி அப்படி விசாரிப்பு வெளிநாடு பற்றி அங்க ...


ஒருநாள் இப்படித்தான் வேலைக்கு போயிட்டு வந்து இருக்க  போன் வந்துது என்னன்னா சொல்லு சும்மா எடுத்தனான் இரவு பூரா ஒரே கனவு அதுதான் உனக்கு எதாவது உடம்பு சரியில்லை என்று யோசிச்சன் அதுதான் கேட்பம் என்று சொன்னா இல்லை அப்பாச்சி வேலை ஒன்றுக்கு போறனான் இங்க தேத்தண்ணி கடையில் கோப்பை கழுவுற வேலை சரியான சனம் இண்டைக்கு சாப்பிட வந்தது அதுதான் வேலை கூட களைச்சு போனன் என்று சொல்ல (அண்டைக்கு அடி அமவாசை ஊருல எல்லோரும் விரதம் எனக்கு தெரியாது ) உடனம் கிழவி சொல்லிச்சு உனக்கு பகிடி இண்டைக்கு ஆடி அமவாசை எல்லாரும் விரதம் யாரு தேத்தண்ணி கடைக்கு வரபோறான் சாப்பிட என்று உடனம் பதில் வந்துது எனக்கு சிரிச்சு முடில ...


யோவ் கிழவி இங்க வெள்ளைக்காரன் உனக்கு ஆடி அமவாசை பிடிக்கிறான் விரதம் இருந்து எண்டு ஒரு கத்து கத்தினான அதுக்கு பிறகுதான் கிழவிக்கு விளக்கிச்சு ஓம் நான் ஊர் நினைவில சொல்லி போட்டன் சரி விடு நேற்று போன் அடிக்க யாராவோ ஒரு வெள்ளைகாரி கதைச்சால் யாரு அவள் உனக்கு தெரியுமா என்று அடுத்த கேள்வி அனே அது என்னுடைய போன் நிப்பாட்டி கிடந்தா அப்படி சொல்லும் இப்ப உனக்கு இந்த ஆராய்ச்சி எல்லாம் நானும் உனக்கு கால் பண்ணினா சிலநேரம் 'உப அனத்த பிச்சி சாரிய கருணாகர லலித் பசுவ அவ தாணுவ ' எண்டு சொல்லுது நானும் கருணாவை பஸ்சில வைத்து பிடிச்சிட்டங்கள் எண்டு குழம்பி போயிட்டன் உடனம் கிழவி உனக்கு இந்த நக்கல் நளினத்துக்கு மட்டும் குறையில்லை சாப்பிட்டு படு இங்க எனக்கு காசு ஓடுது வைக்கிறன் என்று சொல்லி கட் பண்ணிட்டு போயிட்டா ...

இப்ப அப்பாச்சியின் கழுத்தில ஒரு சாம்சுங் கொழுவி விட்டு கிடக்கு அக்கம் பக்கம் எல்லாம் நடமாடும் டெலிக்கொம் இப்ப அப்பாச்சிதான் நம்ம ஊரில ...

வியாழன், 31 அக்டோபர், 2013

சீ ...தனம் எதுக்கு உனக்கு ஆண்மையே .!!

சீ.. தனம் என்னும் அறையில்
பூட்டப்படும் கன்னிகள் பல ஆயிரம்
ஓதிடும் மந்திரம் பொய்யாகி போகும்
தர்மத்தை மறந்து நீ வாழ்வே ..
.
புரட்சி செய்பவர் நாங்களே
ஆதாரம் பல உண்டு பூமியில்
வேதனைப் பிடியில் வாழ்க்கை ஏன் ?
நீ பூட்டினை உடைத்திட வேண்டும் ..

ஜாதிகள் சொல்லி தரம் பார்த்து ஊரினில்
அவர்கள் உயர்ந்து நின்றனர் சமத்துவம்
சொல்லி இவர்கள் இருக்க
சத்தம் இல்லாமல் மனங்களை கொன்றனர் ...

புரட்சி குணம் கொண்டு ஒரு மாற்றம்
சீ....தனம் கொடுப்பதில் கொண்டுவா
ஈழ விழுமியம் காத்திட பேணிட நீ .
ஆங்காரம் கொண்டு உன்னை மாற்றிக்கொள் ..


பென்னும் பெருளும் வாழ்க்கை என்றால்
ஆண் அவைகளை கட்டிட்டு அலையட்டும்
நான் முதிர்கன்னியா வாழ்ந்திட்டு போகிறேன்
என்னில் தொடங்கட்டும் முதல் புரட்சி ..

திங்கள், 7 அக்டோபர், 2013

உன் மாமி காத்து இருக்கா என் அம்மாவா .!

என் வீட்டுக்கு வா
வாசலில் கோலம் இல்லை
கண்ணாடியில் பொட்டு இல்லை
காலையில் கால்கொலுசின் ஓசை இல்லை
என் வீட்டுக்கு வா ...

நிலா முற்றம் வெற்றிடமா இருக்கு
முற்றத்து மாமர ஊஞ்சல் ஆடாது நிக்கு
குயில் இப்பொழுது எல்லாம் கூவுவது இல்லை
ஒரு கிளிமட்டும் கிளையில் சோகமாய்
என் வீட்டுக்கு வா ...

அம்மா எப்பொழுதும் விரதம் ..
கோயிலில் நித்தம் தீபம் ஏற்றியபடி
பூசுமஞ்சள் வாங்கி வைத்து இருக்குறா
சோப்பில் வாசனை கூடியதும் இருக்கு
உன் வரவுக்காய் அடி என்னவளே
என்னோடு வா என் வீட்டுக்கு பெண்ணே ..

சீயக்காய் அரைத்து முழுகி உன்
தலைவாரி தூபம் காட்டி பின்னல் இட்டு
அதில் மல்லிகை வைத்து அழகு பார்க்க
உன் மாமி காத்து இருக்கா என் அம்மாவா
என்னோடா வா என் வீட்டுக்கு காதலியே .

புதன், 2 அக்டோபர், 2013

சூரிய தேவனின் தம்பி .!

புலிகள் போராடியபோது நான்
அவர்களுடன் நிற்கவில்லை என  தெரியும்
எதை விட்டுக்கொடுக்க முடிந்ததோ அதை
உயிரை கொடுத்துதான் போராடினோம்
எவற்ரையும்  விட்டுக்கொடுக்க வில்லை

அப்படி  விட்டு கொடுத்து இருந்தால்
எப்பவோ அழிந்து இருப்பம்
இது தான்  உண்மை
இது தான்   நடந்தது

எவரும் வன்னியில் வேடிக்கை
பார்க்கவில்லை எல்லைப்படை
துணைப்படை என குமரி முதல்
கிழவி வரை போராடிய மண்

விட்டிருக்கக்கூடாது என்றும்
விட்டுக்கொடுக்காததை விட்டு பிடிக்கலாம்
என்றும் தோன்றும் ஏனெனில்
அனைவருக்கும் போர் பயிற்சி
சண்டை அனுபவம் இருந்தது

காரணம் எவரும்   வெளியில்  நிக்கவில்லை
அதோடு பயணித்தவர்கள் வன்னி மக்கள்
பொறுப்புடன் கருத்துச்சொல்ல நான் சு இல்லை
ஒருவருடைய  எழுத்துக்களை  வைத்தே
அவர் எங்கு நின்றார் என சொல்ல முடியாது


கேபி  என்ற  முன்னாள் போராளி
சரணடைந்தது
முள்ளிவாக்காலுக்கு முன்பா........???
பின்பா ..........???
அதுவல்ல கேள்வி தலைவர் அவரை
வெளியுறவு செயலரா நியமித்தது
முள்ளிவாய்க்காலுக்கு முன்பா பின்பா

இப்படி ஆயிரம் கேள்விகளுடன்
எமது தேசியம் நகருது
ஒருவன் நான் பிரமா என்றால்
மற்றவர் நான் விஸ்ணு என்பார்

எமக்கு தெரியும் இங்கு யாரு நாரதர்
என வேளைவரும்போது நாம் சிவனாக
உருவெடுப்போம் அப்பொழுது இருக்கு
ருத்திரதாண்டவம் .

செவ்வாய், 1 அக்டோபர், 2013

கேட்கிறவன் ...........!

ஜனநாயக வழி நின்று நெடுநாள் போராடி
எம் தலையில் காலிமுகத்தில் சாணி பூசி
உருட்டி பிரட்டி எடுத்து எள்ளி நகையாடி
சிங்களம் மகிழ்ந்து இருந்த போது...

கேட்க நாதியற்று கேட்பார் எவரும் இன்றி
எம்மை காக்க எவர் வருவார் என
தந்தை செல்வா ஒரு மொழி ஒருஇனம்
என தமிழ்நாடு ஓடி ஐயாமாரை எம் ....

நிலை சொல்லி அழ அவரோ தன்னிலை
சொல்லிவிட்ட வரலாறு எம்மிடம் இருக்கு
நானோ இறையாண்மை அடிமை
நீயோ இன்னொரு அடிமை உனக்கு...

என்னால் என்ன செய்ய முடியும் என விளக்கம்
சொல்லி கை கழுவி விட்ட கதை நினைவிருக்கு
எமக்கு காலம் கடந்தது வர எமக்கான கனவை
சுமந்த ஒரு வீரன் வர நாம் பட்ட மகிழ்வு அளவில்லை..

தம்பியா வந்த அண்ணன் பின் தானை தலைவனாய்
வளர்த்த கரிகாலன் எம் இனத்தின் விடிவெள்ளி
எம்மை ஒரு பாதையில் ஒளியுடன் கூட்டி போன
வழிகாட்டி தான் நேசித்த மண்ணை மக்களை கட்டி
காத்த வரலாற்று நாயகன் ஈழம் என்னும் ஒரு தேசம்..

உலக வரைபடத்தில் உருவாக நின்ற ஒரு நாயகன்
மக்களில் இருந்து புலிகளை உருவாக்கி புலிகள்தான்
மக்கள் மக்கள்தான் புலிகள் என முழங்கிய தேசியத்தின்
தலைவனை அவர் பின்னால் சென்ற மக்களை...

இன்று 30 வருடம் வராதவன் 3வருடம் முன்வந்தவன்
பூனை என்கிறான் இடத்தை நிரப்ப முடியாது என்கிறான்
ஈழப் பெண்ணை விதைவைப் பெண்ணை மணப்பேன்
இலை மலர ஈழம் மலரும் என்றான் நடந்தது வேறு ...

புலித்தடைக்கு அனுமதி கொடுத்த சபாநாயகர்
காளிமுத்து பெண் கைபிடித்து இந்திய..
இறையாண்மைக்கு கட்டுப்பட்டு அரசியல்
நடத்தும் பயல் எம தமிழ் தலைமைகளை....

பூனை என்பதா முன்னம் பெரியார் பேரன் என்றார்
இப்போ பெரியார் தெலுங்கன் என்றார் அவரின்
அரசியல் சாசனம் இந்திய இறையாண்மைக்கு
உள் பட்டவேனே கட்சியில் உறுப்பினர் ஆகலாம்..


என்று இருக்க கனடாவிலும் ஐரோப்பிலும்
கிளை எதுக்கு டொலர்பார்க்க யூரோ பார்க்கவா
சிவத்த துண்டு போட்டு விறைப்பா நின்றால்
எம் தலைவன் ஆகமுடியும் என்கிற நினைப்பா
எம் தலைவன் காட்டி போன கட்சி அவர்...

உருவாக்கி போன கூட்டமைப்பு அதை
கேள்வி கேட்கவும் மாற்றி அமைக்கவும்
எமக்கே உரிமை சினிமா கூத்தடிக்கு இல்லை
எம்மை கேள்வி கேட்கும் உரிமை..

பொன்சேகா கோமாளிகள் என்றபோது வராத கோவம்
இப்ப ஏன் வருது விக்கி தமிழ்நாட்டு
அரசியலை சொல்ல இவருக்கு ஏன் வருது கோவம்
இவர்  மட்டுமா அங்கே அரசியல் தலைவர் ...

புலிபோல் சூடு போட்டு கொண்டாலும் பூனை
புலியாக முடியாது மானே நீதான் எமக்கு
அடுத்த காமடியன் பவரே பதவியும் கதிரையும்
வர நீ நாளை நிப்பா திருமாவளவன் நிலைமையில்..
அரசியல் மாற்றும் மாற்ற பண்ணும்..!

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

பர்வதத்தின் சிவலையன் .!

பர்வதம் ஆச்சி இரண்டுநாளா போன சிவலையை காணம் எங்க போனானோ..? ஒன்னும் தெரியாது யாருட்ட கேட்க..? தனிக்கட்டை எண்டு தெரியும் நேரகாலத்துக்கு வீட்டுக்கு வராமல் எங்க மேயுறான்...? வரட்டும் குறி இழுக்கிறன்.. என பேசியபடி களனித்தண்ணியை பழைய வாளியில் ஊறினார்.

சிவலை எப்படியாவது தன்னை பிணையெடுக்க கிழவி வரும் என்ற நம்பிக்கையில் கொடுத்ததை சாப்பிட்டபடி நின்றிருந்தான்... ஆனாலும் மனதில் நான் பரமர் வீட்டுப்பக்கம் போனது பிழைதான் என எண்ணி வேதனை பட்டபடி எவ்வளவு பணம் கட்டவேண்டி வருமோ தெரியல்லை ஆச்சி பாவம் என் யோசினையில் நின்று இருந்தான்...

அடே முனியாண்டி எங்கால போற..? வடக்கால போனால் இவன் சிவலை நிண்டா அனுப்பி விடு நேற்று பூரா தேடி களைச்சு போனன்.. இன்னும் வீடு வாசல் வராமல் என்ன உத்தியோகம் எண்டுதான் விளங்கவில்லை எனக்கு.

வழமையா கிழக்க போறவன் அவள் சரசு வீட்டில பெட்டையள் அதிகம் எண்டதால நான்தான் அங்கால போகவேணாம் என்று மறிச்சன்.. என்னுடைய பிழைதான்.. சரசு நம்ம சாதிசனம் ஒன்று என்றாலும் கதைத்து பேசி இருக்கலாம்.. இப்ப பாரு போனவனை காணம்.. நாளைக்கு பேரனை வரசொல்லி இருக்குறன் ஒருக்கா போலீசில் போய் ஒரு முறைப்பாடு போடுவம் எண்டு .

அப்பொழுது முருகேசர் எனை ஆச்சி சிவலை இரண்டுநாளா பிடிச்சு வைத்து இருக்கினம் நீ என்ன இங்க நின்று அலம்பிற..? போ இண்டைக்கு பிணை எடுக்காட்டி நாளைக்கு இடம் மாற்ற போறான்கள் போல.. கெதியா போனை.. ஆட்டோ சண்முகம் வீட்டுக்கு பக்கத்தில்தான் ஆறு ஏழுபேர் ஒன்றா வைத்து இருக்கு.. போகும்போது குடும்பகாட்டு கொண்டு போணை.. என சொல்லி கடக்க ஆச்சி ஒப்பாரி தொடங்கிச்சு.. நாசமா போவார் என்னட்ட காசை புடுங்க நிக்கினம் நல்லாவே வரமாட்டினம் வயிறு எரிஞ்சு சொல்லுறன் அவன் ஒரு பிரச்சினைக்கும் போகமாட்டான் எல்லோருடனும் பழகுவான் மெதுவா கூட்டி போயிட்டு இப்ப காசுக்கு நிக்கினம் போல வாறன் போய் நாலு கிழி கிழிச்சா சரிவரும்...

சிவலை உன்னை எடுக்க ஒருவரும் வரக்காணம் என்ன செய்ய போற என கேட்க.. சிவலை ஆச்சியின் சேலை கலரை கண்டு கண்களை அகல விரிக்க புரிந்தது அவருக்கு யாரவோ வருவது.. நேர வந்த பார்வதம் ஆச்சி சிவலையை கட்டி அணைத்து என்னடா ஆச்சு அடிச்சு போட்டங்களா படுபாவிகள் நல்லாவருவினம் கொழுப்பெடுத்து திரியுறவ.. என வசைபாட குறுக்கிட்டு பார்வதம் ஆச்சி சிவலை பரமரின் வேலி பாய்ந்து போய் இருக்குறான் அங்க நிண்ட இளசுகளை மொட்டு பூ எண்டு பாராமல் கடிச்சு வைத்து இருக்குறான் சும்மா விளங்காமல் கத்தாதை.

அதுக்கு என்னிடம் வந்து சொல்லாமல் எதுக்கு இங்க கொண்டு வந்தனியள் இரண்டுநாள் அன்னம் தண்ணி இல்லாமல் கிடக்கு பெடி வாடிபோனான் வேற.. சரி இப்ப என்ன நான் செய்யவேணும் பரமத்தான் எவ்வளவு கேட்கிறான் எண்டு கேட்டு சொல்லு எனக்கு ஆயிரம் அலுவல் இருக்கு .

சரியன ஆச்சி எல்லாமா இளம்கண்டு ..கச்சான் என்று ஒரு கால் ஏக்கர் மேய்ந்து இருக்கு 3000 ரூபா கொடுத்துட்டு மாட்டை அவிழ்த்திட்டு போ.. இனியாவது கட்டி வைத்து வள பயிர் செய்யும் நேரம் அவிழ்த்து விடாத பார்க்க ஆக்கள் இல்லை என்றால்.. என கூறி முடிக்க முந்தானை முடிச்சில் கொண்டுவந்த காசை எண்ணி கொடுத்து போட்டு சிவலையுடன் வெளியில் வந்தா பர்வதம் ஆச்சி மூணு..நாள் களனி தண்ணி இருக்கு தவுட்டோட கலந்தது தாரன் வடிவா குடிக்கலாம் என சிவலையுடன் பேசியபடி வீடுநோக்கு நடந்தார் கிழவி..

புதன், 25 செப்டம்பர், 2013

நம்ம ஊரு பெண்கள் அழகிகள் தான்..!

வன்னியின் சந்தோஷங்களை கொண்டுவருவதில் ஒருநாள் திருவிழா காணும் கோயில்கள் முக்கியம் ஆனவை.... வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே பொங்கல் செய்து எல்லா ஊர்களிலும் இருந்து வண்டிகட்டியும் உழவு இயந்திரங்களிலும் புறப்பட்டு வந்து சேர்த்து கூட்டமா ஒரு இடத்தில் பாய் விரித்து உறவுகள் ஒன்றுகூடி விரதங்கள் பிடித்து தீ மிதித்து படையல் போட்டு அந்த ஒரு இரவில் போதுமடா சாமி என சாமி சொல்லும் அளவிற்கு மக்களின் வேண்டுதலும் படையலும் இருக்கும்....

அப்படியான ஒரு கோயில்தான் மாங்குளம் மல்லாவி வீதியின் இடையில் உள்ள வன்னிவிளாங்குளம் அம்மன் கோயில்...அக்கோயிலின் சிறிது தூரத்தில்தான் மாவீரர் துயிலும் இல்லமும் அமைந்து உள்ளது... பின்னேரம் வர ஆரம்பிக்கும் மக்கள் கூட்டம் இரவு பத்து மணிவரை தொடரும்... கூடுதலா சைட் அடிக்கும் எண்ணங்களுடன் பாய்ந்து வரும் வாலிபர் அதிகம்.. பல காதல்கள் தொடங்கும் இடமும் முடியும் இடமும் இது.. போனவருடம் தொடங்கியவர்கள் இந்தவருடம் பிள்ளைக்கு மொட்டை போடவும் வந்து இருப்பார்... இப்படி இந்த இரவு திருவிழா கோயில்கள் முக்கியம் பெறும்...

அப்படி ஒரு அப்பாவி தனமா இடம்பெயர்ந்து வந்த புதிதில் வவுனிக்குளம் அருகில் இருந்த போது அந்த வீட்டுக்கார அண்ணை என்னை கூட்டி போனார்... அது எனக்கு ஒரு புது அனுபவம்... 500க்கு மேற்பட்ட கோழிகள் நூற்று கணக்கா ஆடு மாடு என நேத்திக்கு விட்டு கொண்டுவந்து கொடுக்கப்படும் அவைகள் விடியும் பொழுது ஏலத்தில் விடுவினம்... இதை வாங்கவேண்டு சந்தையில கோழி வியாபாரம் செய்கிறவ பூரா அங்க நிப்பினம்.. இது ஒருபுறம் இருக்கட்டும்..

எங்கபோய் பார்த்தாலும் திரும்புற இடம் எல்லாம் பெண் பிள்ளைகள்.. உள் ஊருக்குள்ள இருக்குற பிள்ளைகள் எல்லாம் இன்னைக்கு பார்த்தா தான் உண்டு.. அப்புறம் சந்தர்ப்பம் கிடைக்காது வீடு.. தேடியெல்லாம் போய் பார்க்க முடியாது... அப்புறம் இடியன் கட்டு துவக்கு தான் பதில் சொல்லும் என்பதால் இப்படியான இடத்தில் காதலை சொல்ல முடிஞ்சா சொல்லி போடவேணும்.. விட்டா அடுத்த வருடம் தான்.. நம்ம பெடியளும் அப்படித்தான் தோட்டம் வயல் எண்டு திரியுறவங்கள் இப்படி ஒருநாளுக்கு வடிவா வெளிக்கிட்டு மாப்பிளை கோடன் சாரம் மாட்டின் சேட்டு அதில முன்னுக்கு ஒரு மையில் தாள் வைத்து கொண்டு வந்து நிப்பினம் அம்புட்டு அழகு... .

அதை விட நம்ம பெண்ணுங்க ஆலை இல்லா ஊருக்கு இலுப்பம் பூ சாக்கரை மாதிரி.. எல்லோரையும் கண்டா ஒருநேரத்தில் யாரை பார்ப்பது எண்டு ஒரு குழப்பம்.. கோயிலுக்கு நேத்திக்கு விட்ட சேவல் கணக்கா அழகா தலை வாரி இழுத்து இரட்டை பின்னல் போட்டு ஒன்றை முன்னுக்கு விட்டு மற்றதை பின்னாடி போட்டு நெற்றியில் ஒரு திருநீற்று கீறுபோட்டு ஓரக்கண் பார்வையும் பார்த்து வருவினம்.. யாரு யாரு யாருடன் வந்து நிக்கினம் எண்டு எல்லா தகவலும் பார்வையில் எடுத்து போடுங்கள்.. அப்ப ஊரில பரிசியன் எண்டு ஒரு பவுடர் இருந்தது.. அதுதான் அங்க உள்ளதில் விலை கூடியது.. அதை எடுத்து அப்பி நல்லா பூசி வாற பெட்டையளுக்கு என்ன வெள்ளை அடிச்சு கிடக்கு எண்டு நம்ம பையனுகள் நக்கல் வேற.. .

இப்படி காவல்துறைக்கு தெரியாமல் கடிதம் கொடுத்து முடிவு கேட்பது ஒரு திறில்.. பகிடி கூட குறைய விட்டதை கண்டால் முடிஞ்சுது கதை.. கூட்டிட்டு போய் கொட்டிலில இருத்தி போடுவினம் என்ட பயம் வேற.. மணிக்கடை கச்சான் கடை அலுமினிய பாத்திரக்கடை பிளாஸ்டிக் கடை எண்டு எங்க எல்லாம் நமக்கு பிடிச்ச பிள்ளை போகுதோ அங்கு எல்லாம் போய் பின்னாடி நிண்டு விலை கேட்டுட்டு வாறது.. ஒரு சாமம் 2 மணி வரை நல்ல பம்பலா பகிடியா போகும்.. அப்புறம் அவன் அவன் அங்க அங்க சுருண்டு படுக்க தொடக்கி போடுவாங்கள்.. அப்ப சந்திரிகா புட் பாய் ஒன்று வந்தது பெரிய பாய் இருவர் வடிவா படுக்கலாம்.. அதில் ஒன்றை வாங்கி அதை நம்ம பெடியள் நாலுபேர் போட்டு படுப்பம்.. பாட்டு சத்தம் மேளசத்தம் காவடி ஆட்டம் மணியோசை அரோகரா ஆர்ப்பரிப்பு மத்தியில் வாற நித்திரை சொர்க்கம்...

எல்லாம் முடிஞ்சு விடிஞ்சுது என்றால் இரவு அழகான பிள்ளைகள் எல்லாம் இப்ப காளி வேஷம் போட்டு நிக்கும்.. நித்திரை துக்கம் கண்களில் வழிய போட்ட பவுடர் இல்லாமல் போக கனகா கனகம்மவா தெரிவா பார்வதி பார்வதிபிள்ளையா தெரிவா.. ஓடிப்போய் முகத்தை கழுவி கழுவி ஓரளவு செகப்பாகும் வரை பெடியளை திரும்பியும் பார்க்காதுவள்.. அப்படி வெட்கம் வரும்.. பவுடரை கொண்டுவந்து இருக்கலாம் பேப்பரில் சுற்றி என்று அப்பதான் நினைவு வரும் அவைக்கு... கோயிலில் வாங்கிய கண்ணாடியும் பொட்டும் உடனம் பாவிக்கும் ஆக்கள்..

அண்ணனுக்கு தெரியாமல் மெதுவா தங்கைச்சியை கழட்டி விட்டு கதைக்க வந்தா பெடியளோட சேர்ந்து நித்திரை கொண்டுட்டு இப்ப எழும்பி நிண்டு பார்க்கிறாயடி என்று எமக்கு சொல்வதை தன் தோழிக்கு சொல்லிகாட்டி கடந்து போகும் நம்ம ஊரு பெண்கள் அழகிகள் தான்..

திங்கள், 23 செப்டம்பர், 2013

விளங்கவில்லை ..!

மக்களின் தீர்ப்பை இனத்தின்
விதியை ஒருசிலர் கையில் எடுத்து
நாங்கள் சொல்வதை மட்டும் எழுத்து
என முனிவர் கணக்கா கதை சொல்ல
கொம்பு உடைத்து எழுதிய கணபதிகள்

சிங்க கொடிபிடித்து விட நீ இன துரோகி
சிங்களத்தின் அருவருடி மாமா வேலை என
தலைமை செய்த தெரிவை நாங்களே
மாற்றுவோம் என பொங்கினர் இங்கின
பல தலைமை விளங்கவில்லை ...

பலர் வெளிய போயினர் சிலர் உள்ளே வர
இவர்கள் சரிவறார் கொள்கையை விடுகிறார்
நாங்கள் தொடங்குவோம் புது கட்சி தேசியம்
பேசினோம் தேசியத்தை தூக்கலா பேசினோம்
எவரும் மதிக்கவில்லை காரணம் விளங்கவில்லை ..

காலம் நெருங்கி வர ஈழம் விடை சொல்லும்
நேரம் காத்திருந்த மக்கள் பழைய பாடம் மறவாது.
மேல்குடி மகன் வடக்கு தெரியாதவர் இவர் வேணாம்
புலம் பெயர்த்த புலிகள் என சொல்லிக்கொள்வோர்
வசைகளை கையில் எடுத்தனர் சிங்கள் உறவுக்காரன்
சம்மந்தி வேற கணவன் மனைவி எங்கிறான் ..


என்ன தெரியும் இவருக்கு புலி அல்ல பூனை
இது நேற்று வந்தவர் எமக்கு வகுப்பு வேற
இதுக்கும் ஈழத்து சில ஜால்ரா மணிகள் பாராட்டு
என்ன இது அவர் என்ன ஈழத்தை விக்கவா வந்தார்
மொத்தமா வாங்கா வந்தார் எதுக்கு இவ்வளவு குதியல்
யோசிச்சேன் விளங்கவில்லை ..

மையை கையில் எடுத்த என் உறவு ஈழ மக்கள்
பூசினர் வீடுக்கு மிகுதியை பூசினர் எதிரி முகத்தில்
அடித்து போட்டு நெற்றியில் துப்பாக்கி வைத்தாலும்
உன்னை சுட்டு எரிப்பேன் என அச்சுறுத்தல் இட்டாலும்
என் வாழ்வும் சாவும் மண்ணுக்கும் மக்களுக்கும் போனால்
என் வாழ்க்கை வரலாறு ஆகும் ...

அரியணை ஏற்றினர் எடுத்த முடிவை சரியாக்கி
சினிமா கூத்தாடியை நம்பி பிழைக்க நாங்கள் என்ன
முட்டாள்கள் அல்ல தலைவன் நிழலில் வளர்த்த மக்கள்
சிலர் மதில்மேல் பூனையை போல விழி பிதுங்கி நிக்க
துரோகி என கூவியோர் கூட்டமைப்பின் வெற்றியை
தங்களின் வெற்றி என்கிறார் இப்பொழுது

முன்னம் அதிகாரம் இல்லை பொம்மை வேணாம் என்றார்
இப்பொழுது அவர் அதை செய்ய வேணும் இதை செய்ய வேணும்
தலைவனை மறக்காமல் மாவீரரை மறக்காமல் நடக்க வேணும்
வேண்டுகோள் போடுகிறார் விமர்சனம் சொல்கிறார் அதுதான்
அதிகாரம் இல்லா பதவி எப்படி முடியும் அவர் இவளவும் செய்ய
அதுதான் எனக்கு விளங்கவில்லை .....!

சனி, 21 செப்டம்பர், 2013

நானும் கணணியும் நாடும் ..!

நாட்டில் இருந்து வெளிக்கிட்டு ஐரோப்பா வந்து ஒரு ஆறுமாதம் வெளிஉலகம் தெரியாது இருந்தன். அங்க போகாத இங்க போகாத அவனோட சேராத இவனோட சேராத அவங்கள் குறுப் பெடியள் இவனுகள் இவங்களுக்கு எதிர் பெடியள் எண்டு என்னை வெருட்டி வீட்டில இருத்தி போடுவாங்க. வீசா போடு அப்புறம் போய் வரலாம் எண்டு சொல்லி டிகெட் காசு போயிடும் எண்டு என்னை கூட்டி போறது இல்லை. சரி எண்டு வேலைக்கு போறவங்களுக்கு சமைச்சு கொடுப்பன். நல்லா தூள் அள்ளி போட்டு கறி வைப்பன். யாருக்கு தெரியும் அளவு.. என்ன சிவக்கவில்லை எண்டு போட்டு போட்டு கடைசியா கூடி போடும் பாவம் பேசி பேசி சாப்பிட்டு போவாங்கள் பெடியள்..

படமும் நான் பெரிதா பார்ப்பது இல்லை. அதோட இருந்த வீட்டில் தமிழ் சனல் வராது. வீட்டில் இருந்த ஒருத்தன் மட்டும் ஒரு சிறிய மடிக்கணணி வைத்து இருந்தான். மற்றவர்கள் எதிலும் பெரிய ஆர்வம் இல்லை. வேலை வீடு நித்தா என ஓடியபடி இருப்பார். இந்த சின்ன கணணி வைத்து இருந்த அண்ணணும் இரவுதான் வருவார். வந்து சாப்பிட்டு ஒரு கொஞ்ச நேரம் இணையங்கள் பார்ப்பார். நானும் வந்த புதுசு அவர் பார்க்கும் போது எட்டி எட்டி பார்க்குறது என்ன செய்திகள் எண்டு. அவர் எவருக்கும் தனது கணணி கொடுக்க மாட்டார் (அவர் தந்தாலும் அதை இயக்கி பார்க்கும் அறிவு நமக்கு இல்லை .) பிறகு பேஸ்புக் ...டுவிட்டர்...ஜிமெயில் ...யாகூ ..எண்டு எல்லாம் கதைப்பார். தானே படங்களை பார்த்து சிரிப்பார். இந்த ஸ்கைப் எப்பபாரு நொன நொன எண்டு அடிக்கும். அதிலும் கதைப்பார். ..போனிலும் கதைப்பார். கடும் அலுவலா இருப்பார்.. நமக்கு கடுப்பாகும் பயல் போடுற சீனை பார்த்து .

இரடி மகனே வேலைக்கு போக கணனிக்கு ஒரு வேலை வைக்கிறன் எண்டு நினைப்பான். ஆனால் ஒன்றும் செய்வது இல்லை. காதால இரத்தம் வர கதை நடக்கும். சிலவேளை அரசியல் அத்துப்படி. இப்பவும் யாழ் மாவட்ட தளபதி கிட்டு தான் இருக்குறார் என்று எல்லாம் நடக்கும். நானும் பல்லை கடிச்சுட்டு கிடப்பன். ஏன் வம்பு.. திருப்பி கேள்வி கேட்டா வீட்டால இறங்கு எண்டுவான் என்கிற பயம். எங்க போறது ஆக்களையும் பெரிசா தெரியாது.. கொண்டுவந்து விட்டவன் சொல்லிட்டு போனது உனக்கு வாயில சனி வெளிநாடு விளங்கும் வரை சும்மா மூடிட்டு இரு என்றுதான்... அதுக்கா இவனின் அரசியல் அறிவை கண்டு நான் வியந்து கதைப்பேன்.. அவரும் எடுத்து விடுவர் எப்படா நமக்கு வீசா கிடைச்சு இவன் மாதிரி சீன் போடுறது எண்டு நமக்கு மனதில ஒரு ஏக்கம் .

காலம் கூடி வந்துது போலிஸ் கூப்பிட்டு விசாரணை.. எழுதி கொடுத்தது ஒன்றும் விடாமல் சொன்னேன்.. சொல்லிட்டு வீட்டுக்கு வந்தா இங்க இவங்க விசாரணை என்ன கேட்டன், எத்தின கேள்வி, விசாரிச்சது பெட்டையா பெடியா கிழவனா கிழவியா..? இதை அறிஞ்சு இவங்க என்ன செய்ய போறாங்க எண்டு எனக்கு தெரியா.. ஆனாலும் சொன்னான் எல்லாம் ..அப்ப கணணி பார்த்தபடி அரசியல் அண்ணை சொன்னார் செய்திகள் இப்ப நல்லமாதிரி போடுறாங்கள் நாடு பிரச்சினை முடிஞ்சுது என்று.. கஷ்டம் தான் கிடைப்பது என்று.. எனக்கு கடுப்பாகிட்டு.. கள்ளக்கோழி பிடிக்க கம்பி வேலி புகுந்தவன் கீறின காயத்தை காட்டி ஆமி அடிச்சது எண்டு வீசா எடுக்குறான் எனக்கு காயம் எல்லாம் இருக்கு முதுகில் பீஸ் வேற இருக்கு எனக்கு தருவான் நீங்க இருங்க என பேசிட்டு இருக்க இன்னொரு குண்டு போட்டான்.. காயம் பீஸ் இருந்தா உங்களை தீவிரவாதியா பார்ப்பான் உடனும் வீசா மறுத்து பதில் வரும் என்று.. அட நாதாரி பயலே நல்ல வார்த்தை உனக்கு வராதா வெங்காயம் எண்டு மனசில நினைச்சுட்டு போயிட்டன் .

இரண்டு கிழமை கழிந்து வீசா கிடைச்சுது கடிதம் வந்துது.. நேர வேலையால வந்தவருக்கு பாருங்க மாஸ்டர் நாங்க எவ்வளவு கதை சொல்லி இருக்குறம் எங்க ஆக்களுக்கு வெள்ளை தோளுக்கு சொல்லாமல் இருப்பமா என்று ஒரு வாய் சவடல் விட்டுட்டு வேலை இருந்தா சொல்லுங்க இப்ப வீசா இருக்கு எனக்கு எண்டு அவரின் தன்மானத்தை ஒருக்கா சுரண்டி விட்டு பார்த்தன்.. மனுஷன் நாலாம் நாள் வேலை எடுத்து தந்துது.. முதல் மாத சம்பளம் வாங்கி முதல் வேலையா மடிக்கணணி வாங்கினான்.. வாங்கி வந்து எப்படி அதை இயக்குறது எண்டு தெரியாது உடனும் பெரியம்மாவின் மகன் ஒருத்தன் இத்தாலியில் இருக்குறான் அவன் அங்கயே சரியான கெட்டிக்காரன் யப்புனா ஹிந்துவில படிச்சவன் பாருங்கோ.. அவனின் நம்பர் இல்லை.. உடனும் யாழ்ப்பாணம் பெரியம்மாக்கு ஒரு பேனை போட்டு நம்பர் வாங்கி இவனுக்கு போனை போட்டேன்.. அவன் ஓம் எப்படி இருக்குறியல் கனகாலம் கதைச்சு அம்மா சொன்னவா வெளிநாடு வந்திட்டியள் எண்டு வீசா எல்லாம் ஓகே யா என குசலம் விசாரிச்சு போட்டு கேட்டான் உங்களிட்ட ஸ்கைப் இல்லையா அதில கதைக்க ப்ரீ அண்ணா என்று.. ஓமடா அதுதான் இண்டைக்கு ஒரு மடிக்கணணி வாங்கினனான் எனக்கு துப்பரவா ஒன்றும் தெரியாது உன்னட்ட கேட்பம் எண்டு எடுத்தனான் என்று சொல்ல.. அவன் ஓகே அண்ணா நல்லம் அது ஒன்றும் பிளேன் ஓடுற வேலை இல்லை நான் சொல்ல சொல்ல செய்யுங்கோ கையிலையா இருக்கு கணணி..? ஓம் சரி ஒன் பண்ணுங்கோ
நான் .பொறு

என் வலது முலையில் சின்னனா ஒரு பட்டின் இருக்கு பாருங்கோ..
அட அதுக்கு பெட்டி உடைக்காமல் எப்படி பார்க்கிறது பொறன்..
சிவணே இன்னும் பெட்டி உடைக்க வில்லையா உடையுங்கோ வேகமா..
சரி ஓகே சொல்லு ரெயிபோம் வைக்கவா வேணுமா..? மூடி வந்த பொலித்தின் கிழிக்கவா..?
போங்க சும்மா இது என்ன ஊரா எல்லாம் எறியுங்கோ..
சரி சரி கோவப்படாத சொல்லு..
ஓகே அமத்திட்டன் மூனு லைட் எரியுது இனி என்ன செய்யா..?
ம்ம் அது தானா எல்லாம் வரும் பொறுமையா இருங்கோ..
ஒரு ஐந்து நிமிடம் சரி வந்திட்டு ஒரு பெட்டி வந்து நிக்கு ..........
ஓகே நிக்கா..? அதில அம்பு குறிய கொண்டுபோய் விடுங்க.. இப்ப இடது பக்கம் கிளிக் பண்ணுங்க .....
சரி..
கன மொழி வந்து நிக்கும் நிக்கா ...
ஓம் ஓம் en,fr எண்டு காட்டுது..
அதில en கிளிக் பண்ணுங்க .
ஓகே..
இப்ப இங்கிலிஸ் மொழியில் இனி வரும் ...
நான் என் தமிழ் வராதா எல்லாரும் தமிழில செய்தி எல்லாம் பார்க்கினம் ...
அடிக் அது செய்தி இணையம் அண்ணா சொல்லுறத செய்யுங்கோ முதல் .. சரி இப்ப கூகுளுக்கு போங்கோ ஜிடவுளோ எண்டு அடிச்சு பாருங்க
ஓம் வருது ம்ம் ..
அதில டிம் விபர் எண்டு அடியுங்கோ ...எழுத்து ச்பளின்க் பண்ணு
ஓம் ஒரு சீனுவா பிள்ளை ஒரு கொப்பிய செங்கல்லுக்கு மேல பிடிச்சு நிக்கு....
ஓம் அதுதான் அதில டவுன் லோட் எண்டு இருக்கும் அதை அமத்துங்கோ
ம்ம் பச்சையா ஓடுது .
சரி விடுங்க அதுதானா வரும் ..
வந்திட்டு..
இப்ப இரண்டு நமபர் தெரியும் அதை எனக்கு சொல்லுங்க ..
ஓம் எழுத்து எண்டு நான் சொல்லிக்கொண்டு இருக்க நான் கை வைக்காமலே அம்புக்குறி ஆடுது திகைச்சு போனன் பழுதா போட்டுது போல எண்டு ..
அவன் சொன்னான் அதுநான் நீங்க சும்மா இருங்க உங்களுக்கு என்ன வேணும் எல்லாம் இறக்கி விடுறன்..
சரி பேஸ்புக் முதல் வேணும் ...

ஓகே ஒரு பெயர் சொல்லுங்க பேஸ்புக் திறக்க உண்மையான பெயரா அல்லது வேற பெயரா எண்டான்
நான் ஏன் வேறு பெயர் என் உண்மை பெயரை போடு என்றேன் அதுக்கு அவன் இல்லை கணனியில் நாடு பிடிக்கிறது எண்டால் எதாவது தமிழ் மறவன் ....ஈழ புதல்வன் இப்படி பெயர் போட்டா காண லைக் விழும் உங்களுக்கு அதுக்குதான் கேட்டேன் என்றான் .
அட பாவி இது வேறையா வேணாம் நீ நோமலா திற..
ஓகே அண்ணா இது உங்க ஐடி இது உங்க பாதுகாப்பு எண் என தந்தான் நானும் இருந்து உள்ள நாட்டு பெயருகள் எல்லாம் அடிச்சு தேடுறது ஆக்களை.. மூனாவது நாள் தம்பி ஸ்கைப்பில் கால் பண்ணுறான் எங்க உங்க பேஸ்புக்கில கானம் என்று.. வாங்கோ எதாவது பதிவு போடுங்கோ தமிழில கூகள் போய் எழுதுங்க அப்புறம் கொப்பி பண்ணி கொண்டுவந்து இங்க போடுங்க என விளக்கம் தந்தான்.. நானும் ஆத்திசூடி ..திருக்குறள் ..தத்துவம் கண்னதாஷன் எண்டு போடுவன்.. ஒருநாள் அவன் எனக்கு செம பேச்சு என்ன உங்களுக்கு பிரபலம் ஆக்கி வாரா பிளான் இல்லையோ எதாவது போராட்டம் பற்றி எழுதுங்க நீங்க வன்னியில் பார்த்த நிகழ்வுகள் எல்லாம் எழுதலாம் .. அப்படியா இனி எழுதுறன் எண்டு அடுத்த நாள் தொடங்கி போராட்ட பதிவுகள் தலைவரின் படம் ஊர்வலம் எண்டு எல்லாம் போட்டு எழுத லைக்கும் கொமன்சும் குவியுது எனக்கு தலைகால் புரியா சந்தோசம் பாருங்கோ...

நான் அந்தசண்டையில் நிண்டன் அங்க ஆமியை பிடிச்சான் இங்க காயப்பட்டன் எண்டு எழுத எழுத நாளுக்கு நாள் கூட்டம் கூடிக்கொண்டு போகுது.. ஒருநாள் காணாட்டி உள் பெட்டியில் தேடி செய்திகள் என்ன ஆச்சு எங்க போட்டியல் என்ன நடந்தது எண்டு.. ஒரு பெரிய அளவில நாமக்கு கவனிப்பு பாருங்கோ.. நாம இரண்டு வேலை அதால இருப்பது குறைவு எண்டு சொல்ல முடியுமா.. அடிச்சு விடுறது ஒரு முக்கிய சந்திப்பு அதுதான் வரவில்லை அப்படி இப்படி கதையா விடுறது.. அவனுகளும் அதை நம்பி நம்ம பெரிய ஆள் போல அண்ணை எண்டு நினைக்குறது.. நாள் போக போக பேஸ்புக் சலிச்சு போக நமக்கு நாமே கேள்விகேட்டு எதுக்கு இந்த பிழைப்பு ஏன் ஊரை ஏமாற்றுவான் எமக்காக மடிந்தவர் தியாகங்களில் நான் ஏன் சினிமா காட்டவேணும் நாலு லைக்குக்கு ஆக அவர்கள் சாதனைகளை எனது என சொல்வது எவ்வளவு ஒரு கொடுமையான விஷயம்...

அன்று முடிவு எடுத்தேன் இனி பேஸ்புக் போவது இல்லை கணக்கை செயல் இழக்க பண்ணிட்டு நிமிந்த போது என்னும் ஒரு மன நிறைவு எதோ ஒரு பாரம் குறைந்த மாதிரி இருந்துது பின்னர் புத்தகங்கள் வாசிக்க என்னை பழக்கி கொண்டேன் பொழுதை வேறு வழிகளில் செலவு செய்வது எப்படி என என்னை தயார் படுத்தி கொண்டு வந்து இருந்த தேசத்தின் மொழியை படிக்க கிளம்பினேன்.

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

தூர தேசத்தில் அவள் நினைவுகளை சுமந்து..!

சுமாரா அவளுக்கு ஒரு 17 வயது இருக்கும். தமிழ் பண்பாட்டுக்கு உரிய நான்கு குணமும் இருக்கு முதல் நாள் பார்வையில் என்னை ஒரு நிமிடம் திரும்பி பார்க்கவைத்தாள். யார் இவள்? ஒருநாளும் இவ்வழியில் நான் கண்டதா இல்லை என யோசிச்சு நிக்கையில் மறுபடியும் மூலையில் திரும்பும் போது கடைக்கண்ணால் ஓரப்பார்வை வீசிபோனால். பல முறை இடம் பெயர்ந்து பல இடங்களில் இருத்து எழும்பி வந்த எனக்கு பல பெண்களை கடந்து போன எனக்கு இவள் மட்டும் எப்படி என் உள் மன இடைவெளியில் குடி புகுந்தால்? மறுபடியும் இவ்விடத்தால் வருவாளா இல்லையா அல்லது யாரவது ஒரு சிநேகிதியை தேடி வந்தவளா இருக்குமா என பல கேள்வி எழ பல்லை தீட்டியபடி கிணற்றடியில் நின்று யோசிச்சு கொண்டு வாளியை கிணற்றுக்கு விட்டனான் கயிற்றைபிடிக்க மறந்து போனேன் .

தண்ணி எடுக்க வந்த அம்மா எங்கடா வாளி என்ன கனவு கானுறாய் என கேட்கும்போது தான் தெரிஞ்சுது வாளி போட்டுது எண்டு. பொறன எடுத்து தாறன் எதுக்கு கத்துறா என மறு மொழி பேசி கொக்கத்தடி எடுத்து வந்து கிணற்றில் விட்டு துலாவி ஒருவழியா வாளியை மீட்டு போட்டன். தண்ணியை அள்ளி அம்மாவின் பிளாஸ்ரிக் வாளியில் ஊற்றிகொண்டு இருக்க அம்மா சொன்னா இண்டைக்கு கச்சேரியில புது நிவாரண அட்டை கொடுக்கினம் என்னை கொண்டுபோய் அதில இறக்கிவிடு சைக்கிளில கெதியா வா சனம் வரமுதல் போகவேணும்... நான் ஓம் நீங்க வெளிக்கிடுங்க இப்ப வாறன் ஆனால் உள்ள வரமாட்டன் சரியா என்று கூறிக்கொண்டு முகத்தை கழுவ தொடங்கினான்..

இந்த குடும்ப அட்டை நிவாரணம் அப்படி ஆன இடத்துக்கு போறது நமக்கு வெட்கம். பெண்பிள்ளைகள் நிண்டா என்ன நினைக்கும்? நாங்க நிவாரணம் எடுத்து சாப்பிடுற குடுமபம் எண்டு ஒரு வரட்டு கௌரவம் தான். சரி என அம்மாவை ஏற்றி கொண்டு அங்க போனால் சரியான சனம். என்னடா இது... ஒரு ஐயா சொன்னார் தம்பி கலையில வந்து நம்பர் எடுத்தவைக்குதான் இண்டைக்கு கொடுப்பினமாம் மற்ற ஆக்களை நாளைக்கு காலையில வரட்டாம் எண்டு சரி எண்டு அடுத்தநாள் வேலைக்கு போய் நான் நம்பர் எடுத்திட்டு நிக்க அம்மா சுணங்கி வாறன் எண்டு சொன்னா நானும் 9 மணியாகும் எண்டு சைக்கில் கரியரில் ஏறி இருக்குறன் ...

அப்பொழுது ஒரு பிரமிப்பு. நான் அன்று பார்த்த அதே பெண்ணு தன்னுடைய தாயுடன் வாரா. உடனும் முகத்தை லேஞ்சி எடுத்து வடிவா துடைச்சுபோட்டு சேட்டு கொலரை ஒருக்கா சரிபண்ணி, பார்த்தும் பாராதது மாதிரி ஒரு பில்டப்பு கொடுத்து போட்டு இருக்க எனக்கு பக்கத்தில வந்து நிண்டு அவாவின் தாய் எப்ப நம்பர் கொடுப்பினம் என அருகில் உள்ள ஒரு பெண்ணிடம் விசாரிக்கிறா.. அந்த பெண் சொன்னா இண்டைக்கு கொடுத்து முடிஞ்சுது இனி நாளைக்குதான், ஒருநாளைக்கு 150 பேருக்குமட்டுமே நம்பர் கொடுக்கினம் என்றவுடன் அவளின் அம்மா ஐயோ அப்ப இண்டைக்குக்கு இல்லையா என்ன செய்ய என மிக வேதனையா தலையில் கைவைத்து புலம்ப நான் திரும்பி பார்த்தேன்.அந்த பிள்ளை சரி அம்மா பறுவாயில்லை நாளைக்கு வருவம் என்று சொல்லி சமாளிக்குது வெட்கபட்டு. ஆனா எப்படி பிள்ளை? நாளைக்கும் யாரு சைக்கிள் இரவல் தருவினம் நிவாரண அட்டை இல்லாட்டி நாளைக்கு எப்படி சங்கத்துக்கு போறது சமையல் சாப்பாடு என்ன அப்பாக்கு மருந்து வேற நாளைக்கு எடுக்க வேணும் என கொட்டி தீர்த்தார்..

தகப்பன் செல்லில் காயப்பட்டு நடக்க முடியாதாம் குடும்ப தலைவர் யாராவது அப்பா அல்லது அம்மா வந்தாத்தான் இங்க குடும்ப அட்டை கொடுப்பினம் என்கிற நிலைமை பிள்ளை பள்ளிக்கூடம் போகாமல் தாயை கூட்டி வந்து இருக்கு இனி நாளைக்கும் வரவேணும் பாவங்கள் உதவி இல்லை போல என பக்கத்தில் இருந்த அக்கா சொல்லிட்டு இருந்தா... மனசு ஓரம் ஒரு வலி என்ன செய்வம் நம்ம நிலைமையும் இதுதான்.. அம்மா வேற... வரப்போற நம்பரை கொடுப்பமா வேணாமா என இருமனம் போராடுது. கடைசியா ஒரு முடிவுக்கு வந்தன்.கொடுப்பம் நாளைக்கு வேளைக்கு வந்தா நான் திருப்பி எடுக்கலாம் தானே பாவங்கள் அழுதண்டு போறா.. உடனம் இறங்கி நடந்து போய் அம்மா நில்லுங்கோ நம்பர் கிடைக்க வில்லையா என வழி மறித்தேன்.. அவரும் ஓம் தம்பி நாங்க இருக்குறது சரியான தூரம் நாளைக்காம் என வேதனைய கூற நான் எனது நம்பரை கொடுத்தேன்.. இந்தாங்கோ எடுத்துக்கொண்டு போங்கோ நான் நாளைக்கு வந்து எடுப்பன் கிட்டதான் இருக்குறன் என.

தாயின் முகத்தில் ஆயிரம் சூரியன். மகள் ஏசுவது கூட தெரியாது வேறு எங்கோ பார்த்த படி.. யாருடைய பிள்ளையோ நீ நல்லா இருதம்பி என என்னை வாழ்த்தி நகர ஏதோ பெரிய ஒரு தியாகம் செய்த நினைப்பில் நான் மிதக்க அம்மா எதிரில்.. என்னடா இங்க நிக்கிறா எத்தினையாவது நம்பர்?? உடைஞ்சுது கனவு...இல்லை வந்தனான் சரியான சனம் எல்லாம் குறுக்க மறுக்க நிண்டு இடையால வாங்கிட்டு போகுதுகள் எனக்கு நமபர் கிடைக்க வில்லை நாளைக்கு பார்ப்பம் வா போவம் எண்டு சொல்ல எருமை விடிய வந்து ஒரு நம்பர் எடுக்காமல் எங்க பார்த்தண்டு நிண்டனி என வழமையான பூசை நடக்க சனம் பார்க்குது.. பேசாமல் வானை எண்டு அம்மாவை அதட்டிக் கொண்டு வர பின்னாடி ஒரு குரல்.. ஏய் மங்கை எண்டு அம்மாவும் நானும் ஒருசேர திரும்பி பார்க்க நம்பர் கொடுத்த அந்த அம்மா திகைச்சு போய் நான் நிக்க மங்கை எப்படி இருக்கிறா? இங்கினியா இருக்கிறா? யாரது இது உண்ட பெடியா என கேள்விகள் நீளுது .
அம்மாவும் லட்சுமி என இருவரும் கட்டி அணைத்து பரவச பட ஒன்னும் புரியாமல் நான் நிக்க அந்த பிள்ளைவேற நம்மளை கடைக்கண்ணால பார்க்க நமக்கு வெட்கம் வேற வர அந்த பீலிங்கை சொல்ல முடியாது.. பின்னர் அம்மா சொன்னா அப்பாவின் உறவுக்காரர் உனக்கு மாமி முறை எண்டு.. அம்மா கூற நமக்கு மனசில ஓடுது நீங்க சொல்லாட்டியும் எனக்கு மாமி முறைதான் என. 90இல் இடம் பெயர்ந்த பிறகு தொடர்பு இல்லை 15 வருடத்துக்கு மேல ஆச்சு இப்பதான் காணுறம் எண்டு பழைய கதை புதுக்கதை எல்லாம் பேசி முடிச்சு வீட்டுக்கு வந்துட்டுபோங்க பக்கத்தில்தான் எண்டு அம்மா அழைக்க; மகளா இவள் என எங்க அம்மா அருகில் கூப்பிட்டு கட்டியணைத்து முத்தம் இட்டு அப்படியே பேத்தியார் மாதிரி என்று சொல்லி ஆரதழுவி நின்றா ..நமக்கு இங்க முக்காவாசி கலியாணம் முடிஞ்சுது.

பின்னர் அம்மா சொன்னா நீ நிண்டு கூட்டி வா நான் போறான் எண்டு. பாலுக்கு பூனையை காவலுக்கு விட்டுட்டு போறா அம்மா.. நானும் தலையாட்டி நின்று உறவு கொண்டாடி போட்டு போக நீண்டநேர மவுனம் கலைத்து பேச தொடங்கினேன். உங்கட பெயர் என்ன எப்ப பிறந்தனீர் என்ன படிக்கிரீர் எங்க படிக்கிரீர் என கேள்விகள் மட்டுமே கேட்டபடி நான் இருக்க அவள் நீங்க வேலைக்கு போறிங்களா படிக்கிறிங்களா எண்டு ஒருகேள்வி நாம வாயை ஆப் பண்ணிட்டு. சரி அம்மா வாறா போவம் வாங்கோ எண்டு கூட்டிக்கொண்டு வெளிக்கிட்டன். நாங்க வெட்டி என்பதை எப்படி சொல்லமுடியும்?? நீங்களே சொல்லுங்க மக்களே எண்டு மனதில் நினைத்த படி சைக்கிளை எடுத்தேன். பின்னர் என்ன மாமிவீடு என்ன வேலை எண்டாலும் நாமதான் முன்னுக்கு நிப்பம். பகிடி நக்கல் என செம ஜாலியா போனது வாழ்க்கை. மீண்டும் ஒரு இடம்பெயர்வு நாம் வெளியேற அவள் எங்கு போனால் எண்டு இன்றுவரை தெரியாமல் நான் தூர தேசத்தில் அவள் நினைவுகளை சுமந்து.

சனி, 14 செப்டம்பர், 2013

வேதனை .!

கானகம் வயல் வெளி நடந்து
காரிருளில் கந்தகம் சுமந்து
இளமை துறந்து கல்வி துறந்து
வாழ்வின் வசந்தங்கள் தூக்கி தூரபோட்டு

என் மண் என் மக்கள் என சுவாசித்து
என் தலைவனை உயிரிலும் மேலாய்
விசுவாசித்து நேசித்து ஒரு இலக்குக்கு
தோழர்களுடன் சேர்ந்து பயணித்து
மீண்டு வரும்போது

அவர் உடல்கள் தூக்கிவந்து தாங்கி வந்து
வலி சுமந்து இளைப்பாறும் போது
விடுதலை தீக்கு ஒரு சுள்ளி ஏனும்
முறித்து போடாதவர் எம்மை நிக்க வைத்து
கேள்வி கேட்கிறார் நீ யார் எதுக்கு சாகவில்லை

எப்படி வந்ததாய் தாங்கள் கெட்டித்தனமா
முன்னமே வந்ததால் போராளிகள்
நாங்கள் முட்டாள் தனமா கடைசியா
வந்ததால் துரோகிகளாய் அனுப்பபட்டவர்கள்

தேசியம் குழப்ப செயல்வீரரை பிடிக்க
உண்மையை அறிய நிலைகளை கண்காணிக்க
கேட்காமல் சும்மா கிடைக்கும் துரோகிபட்டம்
நாம் நாலுபேர் இப்ப முடிவு எடுக்கும் வட்டம்
எதுக்கு இந்த ஆர்ப்பாட்டம் எதுக்கு இந்த கூப்பாடு

40ஆயிரம் போராளிகள் 2லட்சம் மக்களின் இழப்பை
விடுதலை கனவை அவர்களின் தியாகத்தை
எனது என சொல்ல எவர் கொடுத்தார் உங்களுக்கு அனுமதி
ஈழ தமிழன் என்கிற அடையாளம் போதும்
உங்களின் வேஷம்களை கலைக்க
உங்கள் ஆட்டைகளை உலகம் அறிய செய்ய

மீண்டும் வருவார்கள் புலிகள் அதுக்கு முன்
புலிகளை வைத்து பிழைப்பவரிடம் இருந்து
புலிகளை காப்பற்ற வேணும் ஒரு தமிழனா
என் நெஞ்ச்சு பிளந்து என் தலைவனை காட்ட
நான் ஒன்றும் அனுமான் இல்லை வலிகள் பட்ட
அகதி தமிழன் வேஷம் போடா ஈழ தமிழன் .

வியாழன், 12 செப்டம்பர், 2013

வில்லியம் வாட்டர் பம்மும் விநாசியரும்.!

விநாசியர் வீட்டில இருந்ததை விட தோட்டத்தில் நின்றதுதான் அதிகம் தனது வயதான காலத்தில் ஒய்வை சற்றும் விரும்பாத மனிதர் எப்பபாரு வயல் ..தோட்டக்காணி என்று மாறி மாறி நடந்து திரிவது பிள்ளைகளின் படிப்பு வாழ்க்கை என குடும்ப சுமையை தூக்கி நிக்கிற ஒரு மனிதனா அவரை ரொம்ப பிடிக்கும் எப்பொழுதும் கலகலப்பான பேச்சு சினம் கொள்ளாத முகம் இடம் பெயர்ந்து அவர் கணியில் ஒரு குடில் போட்டு இருந்த எமக்கு அம்மாபச்சை அரிசிக்கு அவரின் கத்தரிக்கா பலமுறை ஒன்றி இருந்தது..இருக்கு.

ஒருபக்கம் வெங்காயம் ..ஒருபக்கம் முளகாய் ..தண்ணி ஓடும் பாத்திக்கு இரு கரையும் மேல் கீரை மிகுதி தண்ணி வழிந்து போகும் இடத்தில் பூசணி என மிக நேர்த்தியா திட்டம் இட்டு பயிர் செய்வது அவரின் சிறப்பு.இறைக்கும் தண்ணி போகும் இடம் எல்லாம் ஒரு பயிர் நிக்கும். மண்ணெண்ணை தட்டுபாடு நிலவிய காலம் இரண்டு வாளி கொழுவி கைகளால் நீர் இறைத்து பயிர் செய்யும் அவரை பார்க்கும் போது கவலையா இருக்கும்.
மூனும் பெண்பிள்ளைகள் அப்பாக்கு உதவியா பள்ளி போட்டு வந்து புல்லு புடுங்குறது கிளி பார்ப்பது என பாட புத்தகம் ஒரு கையில் வைத்து படித்த படி இவர்கள் செய்யும் வேலைகள் அதிகம். அப்ப எல்லாம் நாங்க கலெக்டர் வேலை காலையில் எழும்பி மூஞ்சிய ஒரு தேய் தேய்த்து போட்டு சைக்கிள எடுத்து கவட்டில வைச்சா எங்க போறம் எண்டு எங்களுக்கே தெரியாது..போயிட்டு இருப்பம். அதிலும் பாருங்கோ எந்த ரோட்டில பிரச்சாரம் நடக்கு எண்டு தெரிஞ்சு இடையில உள்ள குச்சு ஒழுங்கை எல்லாம் போய் சுற்றி போறதில எங்களுக்கு நாங்கள் தான் கில்லாடிகள்

இத்தறிக்கும் அம்மா நிவாரண சாமானை தலையில் கொண்டு போவா நாங்க ஒரு சந்தியில வெட்டி நாயம் பேசி நிப்பம். இங்கின சிலர் காலையில் எழும்பி வந்து இன்று சாவு அடைந்த 45 பேருக்கு வணக்கம் என்பது போல ஓவ்வொரு நாளும் எண்ணினது தான் மிச்சம்.. உருப்படியா எதுக்கும் செய்யாமல் சந்தியில நிண்டு மச்சான் அங்க சண்டையாம் இங்க சண்டையாம் ஆமியின் உடல் எடுத்து கிளிநொச்சியில் வைத்து இருக்கம் என்று கதைச்சு போட்டு வீட்டுக்கு போய் கொட்டிட்டு இழுத்து போர்த்திட்டு படுக்குறது நாளைக்கு என்ன சோத்துக்கு வழி எண்டு யோசிக்காமல்..
ஆனால் விநாசியர் அப்படி இல்லை அதிகாலை எழும்பி பனி மூட்டம் தலைப்பாகை கட்டிய படி பன்டி வாற நேரம் என்று காணிய சுற்றி வருவார் ஒருநாள் வழமையா பள்ளிக்கூடம் போன பிள்ளை திருப்பி வரவில்லை. மூத்த மகளை காணம் தம்பி என்றபடி வந்தவர் தனது சைக்கிள் காற்று இல்லை சைக்கிளை ஒருக்கா தங்கோ பார்த்து வர என வாங்கி போனார். திரும்பி வந்து சோகமா பத்து பிள்ளைகள் ஒன்றா இயக்கத்துக்கு போனதாம் அதில் என்னுடைய பெண்ணுமாம் என்று வரும் கண்ணீரை துடைத்தபடி படுத்து இருந்து விட்டத்தை பார்த்த படி இருந்த எனக்கு அவரின் உரையாடல் காதில் என் உணர்வுகளை ரோஷ நரம்புகளை சுண்டி விட்டு போனது.

வெளியில் வர எனக்கே வெட்கமாகிட்டு நாம் என்ன செய்தோம் எம்மால் என் குடுமபத்துக்கு அல்லது நாட்டுக்கு என்ன பிரயோசனம் என யோசிக்கும்போது பூச்சியம். மனதில் ஓடிய நெருடலான விசயங்களை எண்ணிய படி முகத்தை கழுவி விட்டு வந்தது முற்றத்தில் நின்று பார்த்தால் விநாசியர் அந்த மன நிலையிலும் முளகாய் கன்றுக்கு தண்ணி இறைக்க குழாய் போட்டபடி. வழமையா அவரின் மூத்த மகளே அந்த வேலையை செய்வாள் இதுவரை நான் சும்மா தன்னும் என்ன எப்படி எண்டு எட்டி பார்த்தது இல்லை. ஒவ்வொரு நாளும் என்ன அண்ணை வெயில் படத்தான் எழும்பிவியல் போல என என்னை நக்கல் பண்ணும் அவளும் இப்ப இல்லை என்கிற மன நிலையில் ஒரு உந்துதல் வர நான் விநாசியர் அருகில் போனேன்.

விடுங்கோ நான் இழுக்கிறன் என வாங்க அவர் சொன்னார் இல்லை தம்பி உமக்கு பழக்கம் இல்லை குழாய் கண்டில பட்டுட்டா மரம் ஒடிஞ்சு போடும் என்று. சரி என அவருடன் சேர்ந்து தூக்கி கொடுத்து விட்டு கிணற்றடிக்கு வந்து வாட்டர் பம்மை இழுக்க வேணும் என்று சொன்னார். ஓம் எண்டு அவரோட வந்தன். தம்பி நோஷால் ஊசியை குறை நான் இழுக்கும்போது சொக்கை விடு வில்லியம் பம்முக்கு அப்ப நல்ல மதிப்பு தம்பி 15 வருடம் மேல கிடக்கு நமக்கு சோறு போடுது எனக்கு இதுகும் ஒரு பிள்ளைமாதிரி.

சரி அதில போய் சின்னவள் வேல்மூடி சூடாக்கி வைத்து இருப்பால் எடுத்து வா.. பக்கத்தில ஒரு சின்ன சிங்கர் சூப்பி இருக்கும் அதை கவனமா கொண்டுவா.. நான் கிணத்துக்குள் குழாய் இறக்கிறன்... சரி என்று நானும் கிளம்பி போய் எடுத்து வந்து சேர அவரும் தனது வேலை முடிச்சு நின்றார். நான் இழுக்கிறன் வேல்மூடிய காபிறேட்டருக்கு நேர பிடிச்சு ஒரு துளி பெற்றோல் விடு, புகை எழும்பும்போது சொக்கை கையை விடு, சரியா கவனம் பெற்றோல் இவளவுதான் இருக்கு என்று சொல்லி இழுத்தார்..

என் மனதில இவளவுனாலும் என்ன எழும்பி குழாய் போட்டு பம்மை இழுக்குறது எல்லாம் ஒரு வேலையா என அசால்ட்ட நினைத்த எனக்கு அவருடன் சேர்ந்து செய்த ஒரு இரண்டு மணித்தியால வேலை நாக்கை தள்ளி நிண்டுது..இவளவு கடினம்..வில்லியம் ஓடினாதான் இந்தமாதம் யூரியா வாங்கலாம் மிளகாய் பழுக்கிற நேரம் என சொன்னபடி சிவனே என்று கடவுளையும் அழைத்தபடி இழுத்தார் ..ஒன்று இரண்டு என போய் ஆறு ஏழு தடவை இழுத்தும் வில்லியம் இயங்க வில்லை.. களைத்து போய் ஒருவாளி தண்ணி அள்ளி குடித்து விட்டு என்ன செய்வது என தெரியாமல் நிக்க நான் கேட்டேன் நான் இழுக்கவா நீங்க பெற்றோல் காட்டுங்க என.. நானும் உள்ள பலம் எல்லாம் சேர்த்து இழுத்து முடியாமல் இருந்திட்டன்..

மனதின் ஒரு மூலையில் ஒரு கணம் இவளவு வேலையயும் இவர்கள் தனியத்தானே செய்தார்கள் தோட்டம் செய்வது அவ்வளவு சுலபம் இல்லை என்பது அப்பொழுதான் புரிஞ்சுது.. சந்தையில் மரக்கறியை எடுத்து வைத்துக்கொண்டு நக்கல் கதையும் நளின விலையும் கேட்கும் எமக்கு அதன் பின்னால் இருக்கும் வலிகள் புரிவது இல்லைதான்.. சரி செடி வாடுது இவள் சின்னவள் எப்ப பள்ளியால வருவாள் என தெரியாமல் இருக்கு என விநாசியர் ஒழுங்கையை எட்டி பார்த்தார்..


அவளும் சரியா வர என்ன அப்பா இன்னும் தண்ணி இறைக்க வில்லையா என கேட்டபடி கிணத்தடிக்கு வந்தாள்.. இல்லை அம்மா வில்லியம் ஓடுறான் இல்லை என்ன எண்டு பார் என்றபடி விநாசியர் சொல்ல அவனுக்கு நான் இரண்டு தட்டு தட்டுறன் பொறுங்கோ என அந்த சாவி என்று மகள் கேட்க எனக்கு தலை விறைச்சு போச்சு.. என்ன நடக்கு இங்க என நாங்க இரண்டு ஆம்பிளைகள் முடியாமல் நிக்கிறம் இவா எப்படி செய்ய போறா என எனக்குள் கேட்டபடி நிக்க..

விறு விறு என சாவியை எடுத்து பிழக்கை கழட்டி நெருப்பில போடுட்டு இருங்க அப்பா உடுப்பை மாற்றி வாறன் எண்டு போனாள் வந்து பிளக்கை தட்டி எடுத்து எதோ ஒரு கம்பியால அப்டி இப்டி தட்டி போட்டு சூட்டோட பூட்டிட்டு வயரை கொளுவிபோட்டு தள்ளுங்க அப்பா என்று விட்டு கயிறை சுற்று ஒரு இழுவை... வில்லியம் ஓலம் எடுத்து கத்த கம்பிலிங்க எடுத்து குழாய் இறுக்கி விடுங்கோ என்றபடி அசால்ட்டா ஓவரு கொமாண்டும் கொடுத்தபடி அவள் மண் வெட்டிய கையில் எடுக்கும் போது எனது மனநிலை குதிச்சிடு நீ கிணத்தில் என்பது போல இருந்துது...

என்ன ஒரு அனுபவ முதிர்ச்சி என யோசிச்சு கொண்டு இருக்க விநாசியர் என்ன தம்பி எப்படி அவளுக்கும் வில்லியத்துக்கும் ஒரு வயது அதுதான் அவளுக்கு அவனை பற்றி நல்ல தெரியும் என்று சொல்லி சிரித்த படி போக நாங்கள் வீரவசனம் வெட்டி பேச்சிலும் நாட்கள் கழித்தோம் ஒழிய உருப்படியா ஒரு வேலையும் செய்யவும் இல்லை பழகவும் இல்லை இன்றில இருந்து அதிகாலையில் எழுவது விநாசியர் உடன் தோட்டம் செய்ய பழகுவது மரக்கறி கொண்டுபோய் சந்தையில் கொடுப்பது இனி நான் தான் செய்ய வேணும் என்கிற உறுதியுடன் வில்லியம் பம்மை முறைத்து பார்த்த படி நகர்ந்து போனேன்..

என்னுள் ஆயிரம் மாற்றம் தெரிய தொடங்கியது வன்னி மனிதர்களை பக்குவபடுத்தியது அறிவாளிகள் ஆக்கியது சுய சிந்தனையை போர் சூழல் தூண்டியும் விட்டது எமக்கு நாமே என்கிற தத்துவத்தை சொல்லமல் சொல்லி போனது காலம்..

வியாழன், 5 செப்டம்பர், 2013

ஒரு போராளியின் குறிப்பேடு ..!

ஊரை உறங்க செய்து
நாய்களுக்கு தெரியாமல் நடந்து
வெள்ளி பார்த்து திசை பிடித்து
அவன் எல்லையை தொடும்போது
ஆந்தைகள் முழித்து இருக்கும்

அவன் மட்டும் விடிகாலை பொழுதில்
குறக்கண்ணில் தூங்கி விழித்து இருக்க
அவன் கால் அருகில் அரவம்போல் நகர்த்து
அவனை கடந்து போகும்போது உள்ளம்
மகிழ்த்து இருக்கும் உள்ளுக்குள்

உள்ளே வந்துவிட்டம் என இறுமாந்து நிமிர்த்து
நடந்து போகையில் எதிரே ஒரு கேள்வி வரும்
யாரு நீ எங்க போற .....பதில் யோசிக்க முன்
சுடும் விசை கிழ நோக்கி போகும் அதன் டிக் ஒலி
அவன் காதிலும் விழும் இருவருக்குள்ளும்

ஒரு நொடி மவுனம் பேசும் அத்துடன் கலைக்கப்படும்
சொன்ன இடத்துக்கு வந்து சேர் என உரக்க கூறி விட்டு
வலம் இடமா பாய்த்து வேட்டுக்களை தீர்த்து எம்மை
காப்பற்றி விட்டு மறுநொடி மனது சொல்லும் இவன்
மாட்டிட்டனோ இல்லை இருக்காது போய் இருப்பன்

இல்லை எதுக்கும் ஒருமுறை பார்த்து வருவம்
என மீண்டும் அவன் நிலைக்கு மெதுவா  வந்து
உற்று நோக்கி ஓகே போயிட்டான் என மனது
ஒரு முடிவுக்கு வர முனகல் சத்தம் பக்கத்தில்
மச்சான் என இருளில் தடவி என்ன ஆச்சு என
சைகையில் கேட்டு அவன் கைகளை இறுக்க பற்றி

நீ போயிடு நான் முடிவு எடுத்துட்டன் என சொல்லு
எம்மை அனுப்ப அவன் தன்னை அழிக்க நினைத்து
நான் கவர் கொடுக்குறன் நீங்க வேலிய தாண்டுங்கோ
என்று பிடிவாதம் பிடிப்பவனை  இல்லை மச்சி அடிச்சு
பிரிச்சு போவம் வாறது வரட்டும் அது ஒண்டும்
பெரிய சிக்கல் இல்லை என சகதோழன் கூறி

இவனை நான் தோளில் போடுறன் நீ குண்டை கலட்டி
கையில வைச்சு இரு நிலைமை மோசம் எண்டா
அடி அல்லது போயிடுவம் விடிய முதல் ஓகே என
ரகசியம் பேசி அவன் கம்பி வேலியை வெட்டி கடந்து
வந்தவுடன் ஒரு துள்ளல் வரும் உலகில் அப்பொழுது
போல் ஒரு ஆனத்தம் இல்லை நட்பை மீட்டு வருவது

ஒரு போராளியின் குறிப்பேடு ..!

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

பார்பதி அக்காவும் பாம்பும் ..!



எங்கள் ஊரில் மிக அதிக மக்கள் தெரிந்து இருக்க கூடிய ஆள் நம்ம பார்வதி அக்கா எவர் என்ன உதவி கேட்டலும் முகம் சுளிக்காமல் செய்து கொடுப்பா சிலர் அதை அவர் கஸ்ரம் என்பதால் செய்கிறார் என்றும் சொல்லுவினம் ஆனால் அவா அப்படி இல்லை அருமையான ஆள் வீடுக்கு தன் மகனுடன் வரும் நண்பர்களை வாங்கோ தம்பி இருக்கு என்ன சாப்பிடிறியல் என தனது கஸ்ரம் காட்டாது உபசரிப்பு செய்வதில் எங்கள் மனம் நெகிழ்த்து போகும்

இப்படி இருத்த பார்வதி அக்காக்கு சமாதான காலம் வர போக்குவரத்து சுகம் ஆக பிரிந்து இருத்த உறவுகள் எல்லாம் தேடிவந்து உதவி செய்ய கொஞ்சம் வசதியா வர தொடங்கினா அவாவின் செயல்பாடுகளும் ஓவரா போக ஒரு மாமன் முறையான ஒருவரின் உதவியுடன் மகன் வெளிநாடு வந்தான் பின்னர்

அவன் உழைத்து யுரோ ரூபாவா மாற பார்வதி அக்காவும் மாற தொடங்கினா அக்கம் பக்கம் எல்லாம் போகமாட்ட ஒரு போன் எப்பவும் கழுத்தில் தொங்கும் இப்படி கடும் அலப்பரை

வீட்டுக்கு முதல் சுற்றி சுவர் கட்டினா எல்லோரும் வாயை பிளந்து நிண்டினம் பார்த்தியா அந்தபெடி அள்ளி அனுப்புது பார்வதி விட்டு விசுக்குது என்று நாடு நகரம் எல்லாம் பேச்சு மகனும் அம்மா கஸ்ரபட்டு வளர்த்த்வா சந்தோஷமா இருக்கடும் எண்டு பார்த்து பாராமல் இங்க வட்டிக்கு வேண்டி அனுப்பிறது பாருங்கோ


பின்னர் ஒருவருடத்தில் வீடும் கட்டி எல்லாம் புதுசா வாங்கி போட்டு ஐரோப்பா மெடலில வாழ்ந்த பார்வதி அக்கா அக்கம் பக்கம் எவரையும் அண்டுவது இல்லை எல்லாம் வசதி செய்கிற வேலை ஆனாலும் அவாக்கு ஒரு கவலை தன்னிடம் இருக்கும் வசதி ஒருவருக்கும் தெரியாது எப்படி சொல்லுவது யாராவது வந்து போனா சொல்லுவினம் இங்கதான் எவரும் வருவது இல்லையே என்கிற ஏக்கம் இருந்தது ஒருநாள் கடும் சத்தம் அவாவின் வீட்டுல் பக்கத்துக்கு சனம் என் எண்டும் கேட்கவில்லை சரி காலையில் பார்ப்பம் எண்டு இருந்துட்டு

சரி நம்ம ஊர்காரி எண்டு சரசு அக்கா என்ன இரவு ஒரே சத்தம் என்ன புதினம் எதாவது பிரச்சினையா எண்டு கேட்க ஓம் சரசு இரவு புதுசா கட்டின கொமட்டுக்குள்ள தண்ணி குளிர்மைக்கு பாம்பு வந்து படுத்திட்டு நான் லையிட்ட போட பார்த்து திகைச்சு போனன் ஆ பிறகு என சரசு விழிய விரிக்க பிறகு என்ன அடிப்பம் எண்டு தடிய எடுத்து வந்தன் புது கொமட்டு வேற உடைச்சாலும் எண்டு பாம்பை மெதுவா தள்ளி விட அது அப்படியே போய் நாற்பதுனாயிரம் ரூபா பிறிச்சுக்கு கிழபோட்டுது என்ன சனியன் எண்டு அதால தட்டி எடுத்து விட திரும்பவும் ஊர்த்து சம்ஸுக் டிவி பிளாஸ்மா கிழ போட்டுது சரசு வாயை திறந்து பெரியா டிவியா என கேட்க ஓம் அது ஒருலட்சம் எண்டு பதில் சொல்லிட்டு தொடரத்தா

அட கருமம் என்ன இது எண்டு தடிய அதுக்குள்ளே விட்டு இழுத்து பாம்பை எடுக்க அது அப்படியே டவுள் வெட் கட்டிலுக்க போட்டுது பிறகு ஐந்து பற்ரி டச் எடுத்து அடிச்சு பார்த்தா மூலைக்குள்ள  கிடக்கு அந்த வளமா வந்து அடிக்க முடியாது என சொல்ல சரசு மறுபடியும் என் அக்கா என அந்த மூலையில்தான்  கொம்புயுட்டர் கிடக்கு சரசு பெருமுச்சு விட்டபடி ஆஆ என பிறகு ஒருமாதிரி தட்டி தட்டி கொண்டுவர அது கதவு ஒட்டையல குசினிக்க போட்டுது

அது வெளிய போக இடம் தெரியாமல் எலைர்ரிக் அடுப்பால ஏறி மைக்குரோனுக்கு மேலால ஊர்த்து அப்படியே பாண்  சூடுபண்ணுறது ஆல கீழல வந்து சுடுதண்ணி வைக்கிற கிற்றர்க்கு மேலால போய் ஏசி பூட்டின வயரால நழுவி சோனி பாக்ஸ் செட்டுக்கு மேல விழுந்து ஒடதொடங்க நான் எட்டி அடிக்க அடி பிடிக்க வில்லை பிறகு முன் போர்ட்டிக்கோ கதவால வெளிய ஓடிட்டு என்று பார்வதி அக்கா சொல்லி முடிக்க சரசுக்கு தலை சுற்ற வெளிக்கிட பாம்பு வந்ததா வரவைக்க பட்டதா என்கிற குழப்பம் நிறைச்ச கேள்வியோட சரசு நகர ஒருபடிய ஊர் குருவிக்கு நான் வாங்கின பொருள் எல்லாம் சொல்லியாச்சு எங்கிர சந்தோஷத்துடன் பார்வதி அக்கா சந்தைக்கு போக தனது குலின்க்  கிளாசை தேடினா .

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

எங்கே போகிறோம் நாம் எங்கிருத்து வந்தோம் .!

நாம் வாழ்வும் பண்பாடும் கலாச்சாரம் என எமக்கான தனி அடையாளங்களுடன் வாழ்ந்த  இனம் இப்பொழுது பயணிக்கும் பாதை மிக கவலையானது எமக்கான அடையாளங்களை தொலைத்து நாம் என்ன லாபம் அடைய போகிறோம் ஒரு சாதாரண கைபேசியில் தொடங்கி வீட்டு கழிவறைக்கு போடும்  செருப்பு வரை என்னுடையது விலை மதிப்பாக இருக்க வேணும் என்பதே எமது எண்ணம் ஆகி இருக்கு கலக்சி போனில் அல்லது ஐபோனில் என்ன இருக்கு அதை பயன் என்ன பாவனை திறன் என்ன என்றுகூட அறியாது நான் மார்க்கான ஒரு போன் வைத்துள்ளேன் என்பதில்தான் என் கௌரவம் அடங்கி இருக்க என போகிறது வாழ்க்கை

வருமானத்துக்கு  மேலக செலவுகளும் பிழைகளுக்கு  நாங்கள் ஊரில பில்கேஸ் என நீட்டி முழங்கி கதைகள் சொல்லி  எங்கள சுயங்களை அவர்களுக்கு  விளக்காது ஒரு கனவு உலகத்தில் பயணிக்க செய்வதால் எமது வாழ்வியல் அழிந்து போகும் ஒழிய வேறில்லை வெள்ளைக்காரன் சுகமா கூப்பிட பெயர் பார்த்து வைப்பது முதல் போடும் உடுப்பு வரை அவர்கள் வாசனை  பத்துமாதம் சுமந்தவள் ஆசையாய் ஒரு பெயர் வைக்க முடியுதா.. பிள்ளைகளை எமது கலாச்சரம் பற்றி புரிதலை அறிதலை அவர்களுக்கு சொல்லி கொடுப்பது வெட்கமா படுத்து எமக்கு நாலு சபை சடங்குக்கு கூடி போனால் தமிழ் கதைக்க பஞ்சி படுவது தொடக்கி உறவுகளை நலம் விசாரிப்பது வரை போலியான பாவனை
நான் பார்த்தவரை அம்மா பக்கத்தில் இல்லாவிட்டால் அந்த பெண்பிள்ளை அழகா தமிழ் கதைக்கும் அதை கவனிக்கும் தாய் உடனம் அருகில் வருவர் வந்தவர் சொல்லும் கதை அவளுக்கு தமிழ் அவளவா வராது என்பதே
அழகா கதைத்த பிள்ளை  நடிக்க தொடங்கும் எதுக்கு இந்த வீண் பில்டப்பு எங்களை நாங்கள் உயர்வா காட்ட எவளவு கேவலமான வேலையும் சிரிச்ச படி செய்வம் பணம் உள்ளவர் பார்த்து உறவு முறை சொல்லி கொடுப்பது மற்றவர்களை கண்டுகொள்வது இல்லை பின்னாளில் பெண்பிள்ளைகள் உறவுமுறை தெரியாமல் காதல் வயப்படுவது பின்னர் தெரியவருவதும் வெளிநாடுகளில் அதிகமானதா இருக்கு உள்ளநாட்டு  தொடர்நாடகம் எல்லாம் பார்த்து பழகி அதிகமா மாமனை காதலிக்க தொடங்கி இருக்கு ஒரு தலைமுறை இது ஆரோக்கியம் ஆனதா
பத்து தலைமுறை வாழும் அராபியனும் ஆபிரிக்கணும் இன்னும் தன்னை காத்து மொழி காத்து உடைகாத்து நிக்க நாம் ஒரு தலைமுறை வரவில்லை பெயர் மாறி உடைமாற்றி தலைமுடி முதல்வரை மாறி நிக்கிறம் நாம் எங்கிருத்து வந்தம்

செல்லமாக கேட்டது எல்லாம் வாங்கிகொடுத்து கஸ்ரம் துன்பம் காட்டாது பிள்ளை வளர்த்து இரவு பகல் பாராமல் வேலை செய்து அடிமாடாய் தேய்த்து சிறுக சேர்த்த பணத்தில் கலியாணம் பண்ணி வைத்தால் கட்டி இரண்டு கிழமையில் வீடில் வந்து நிக்கு டிவைஸ் வேணும் என்று கரணம் சொல்வதுக்கு இல்லை கேட்பது வாங்கிதாறார் இல்லை அவரின் குடுப்பத்துக்கு அடிகடி காசு அனுப்புறார் என்பதே அதிக காரணமா இருக்கு அதுக்கு பெற்றோரும் ஒத்து ஊதுவது தான் கொடுமை

நாம் எங்கிருத்து வந்தோம் எங்கள் ஆணி வேர் என்ன எங்கள் கிளைகளின் பரப்பு விழுதுகளின் வலு இவைகளை சொல்லி வளர்க்காது ஒரு கற்பனை கலந்த கனவு உலகில் வாழ்த்து காட்டி நடித்து காட்டி எம் வேசங்களை சரியாய் போடுவரை நாடகம் தொடரும் ஒருநாள் எங்கள் முகமூடி கிழியும்போது எங்கோ போய் புதைக்க போகிறோம் எங்கள் நிஜ முகங்களை .

வேட்காவும்....விஸ்கியும் ..வியூட்டி பாலரும்..தான் எனது உலகம் வாழ்வியல் என என்று நாம் இறங்கினமோ அன்றே எம்மை எம்முள் தொலைத்து விட்டு பக்கத்தில் தேடிக்கிடைக்க போவது இல்லை சம்பளம் 30 யுரோ முகம் பேசியர் செய்ய 35 யுரோ ஐந்து யுரோ வட்டிக்கி  வாங்கி மேக்கப் போடும் சமூகம் ஆரோக்கியமானது இல்லை வெளிநடப்பை பார்க்கும் போது ஆதங்கம் தாங்க முடியவில்லை யாரிடம் சொல்வது அதுதான் இங்கின கொட்டி தீர்த்தம் மக்ளே.

இந்த மாதிரி சமூகத்தில் தான் வாழ்கிறோம் நாம் படம் கதை சொல்லும் .
1186041_4658373757160_289471402_n.jpg

சனி, 17 ஆகஸ்ட், 2013

அரைகுறை .!

கேட்டலும் படித்தாலும் அரைகுறை
பார்த்தாலும் தெரிதலும் அரைகுறை
விளக்கமும் தெளிவும் அரைகுறை
கன்னியும் கவர்ச்சியும் அரைகுறை

படமும் பாட்டும் அரைகுறை
பேச்சும் செயலும் அரைகுறை
வெட்டியும் பந்தாவும் அரைகுறை
வரலாறும் வாழ்கையும் அரைகுறை

நம்ம வாழ்க்கையும் அரைகுறை
மற்றவன் செயலை விமர்சனம் அரைகுறை
என்னை நான் தேடினேன் அரைகுறை
நான் முழுமை பெறும் நாள் எப்போ
அப்போ நான் மனிதன் ஆகிறேன் .

ஐயோகு :)

முத்தம் .!

நச் என்று நாலுவரி கவிதை சொல்லு என்றேன் அவள்
இச் என்று கொடுத்து ஒருவரியில் முடித்துவிட்டால் முத்தம் ..!




காதல் உணர்வு ..!

உன்னிலையும் என்னிலையும் சேரும் மனனிலைதான்
காதல் .!!



ஊடல் ..!

நீ அட்டமி நான் நவமி
எப்பொழுது ஆவோம்
பௌர்ணமி .!

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

என் மனம் .!

கடலை போன்றது நிலையாய் இருக்கா
அலையும் காற்றும் உறங்க விடா
படகில் பலர் அலையுடன் பேசி நகர
என் மன வானில் விடி வெள்ளி

சீவாத தலை முடியும் பொட்டில்லா
உன் நெற்றியும் எனக்கு அம்மவாசை
இரவை நினைவில் கொண்டுவர
உன் புன்சிரிப்பு நட்சத்திரம் ஆனது

நீ பேசினால் புல்லாங்குழல் இப்பொழுது
எனக்கு சங்கு சத்தமா கேட்குது
உன் அண்ணன் பார்த்த நாள் முதல்
கனவிலும் சுடலை தெரியுது

நான் உன்னை பார்க்கிறேன் காதல் பார்வை
நீ என்னை பார்க்குறாய் ஏக்க பார்வை
நான் உன்னை அடைய விரும்பினேன்
ஆனால் உன் அண்ணன் என்னை அடிக்க தேடுறான்

என்றோ ஒருநாள் உன்னை சேரும் நாள் வரும்
அதுவரை என் மனம் நிலையில்லா கடலில்
பயணம் செய்து கொண்டு இருக்கும்
உன்னை தேடி காதலியே .

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

அன்றாடம் ..!

மேய்ந்து கொண்டு இருந்த மாடுகள் திடீர் என
 தலையை நிமிர்த்தி மேல பார்த்து
தங்களுக்குள் பேசிவிட்டு கிழக்கே நடக்க தொடங்கின 
வேகமாக மிக மிக வேகமாக

கருமேகம் வடக்கு திசையில் சுழன்று மேலுருளும்
 காட்சி அமாவாசை இருளை நினைவு படுத்த
 மாடுகள் வரிசையாய் நடந்தவண்ணம் இருந்தது
 பட்டியை திறந்து விட்டுபரமர் வானத்தை பார்த்தபடி

மிக் 27 தாழபறக்க அவரவர் பக்கத்தில் இருக்கும்
 மரங்களுக்குள் பாதுகாப்பை தேட
அண்ணாந்து பார்த்து சைக்கிள் ஓடி
 வேலியுடன் மோதியவனும் கிடங்கில் விழுந்தவனும்

தங்களுக்குள் சிரித்து விட்டு தம்பாட்டில் 
அலுவல்களை தொடர
 ஒலியின் ஓசைகேட்டு என்ன என இனம் 
கண்டு மக்கள் வீடு போவதும்
மாடு மழைவருவது முதலே தெரிந்து
  பட்டி திரும்புவதும்

வன்னியின் அன்றாட வாழ்க்கை ஆகிப்போனது மக்களுக்கும் மாக்களுக்கும்
பொல்லாத காலம் ஓய்ந்து பொழுதுடன் நிழல்வீச
 எல்லா ஆயாசம்களும் தீர்த்து சனம் எதிர்காலம் தேடி
ஏரும் கலப்பையுமாய் ஆ நல்லம் வசந்தம் இனியாவது வரட்டும் .

திங்கள், 22 ஜூலை, 2013

மீசை ..!

ஆணா பிறந்தால் ஒரு வயதுக்கு பிறகு
ஆரம்பிக்கும் அதீத ஆசை  மீசை
எப்பொழுதும் கண்ணாடியில் முகம் பார்க்க
உள்மன கேள்வியில் எழும் ஒரு ஆதங்கம்

எப்ப   வளரும் எப்படி வளரும்
நாம வளர்க்க  வேணுமா அதுவா வளருமா
தாடையை வழித்தா வருமா அல்லது
வந்தபின் வழிக்க வேணுமா

யாருடா கேட்கலாம் எப்படி கேட்கலாம்
அப்பா சேவ்செய்யும் பிளேட்டை ஆட்டை
போட்டு அடிவளவில் போய்நிண்டு  கண்ணாடி
இல்லாமல் கண்டபடி இழுத்து வெட்டுக்காயம்

இப்பொழுதும் போகவில்லை அடையலாம்
மீசையை முறிக்கிட்டு போறவனை பார்த்து
பொறாமை பெரிய இவரு எண்டு நினைப்பு
எங்களுக்கும் வளரும் எல்லே உள்மன களிப்பு

வளத்த பின் தெரித்தது பராமரிக்க பத்து ரூபா
கிழமைக்கு வேணும் எண்டு அதுவரை
மீசை  மேல் இருத்த ஆசையெல்லாம் குறைத்து
தடுக்கும் யோசனை தானாக வர மனதில்

காரணம் இருக்கு என்ன தோல்வி எண்டாலும்
கேட்கும் முதல் கேள்வி மண் ஒட்டவில்லை
என்னும்  பெரும் நக்கல் நையாண்டி அன்று
எடுத்த முடிவு திடமா நான்


வளர்ப்பது இல்லை இனிநான் மீசை
கிளின் சேவ் இனி எவர் சொல்வார் மண்
ஒட்டியதை பற்றி இவர்களுக்காய் நான்
தண்ணியில விழமுடியும் அதனால் போனது
என் ஆசை மீசை .

(முறிக்கிட்டு யாரவது கேள்வி கேட்ககூடாது என்னய்யா ஆமா )


வியாழன், 18 ஜூலை, 2013

அறியா வயது ..!

வெட்டி கதை பேசி வெண்ணிலா ஒளியில் என் வீட்டு முற்றத்தில்
அக்கம் பக்கம் உள்ளவர் எல்லாம் சேர்ந்து இருந்து
பக்கத்துவீட்டு நிலவும் நானும் ஓரமாய் விடுப்பு கேட்டு
தெரித்த சினிமா தெரியாத அரசியல் போன கோயில்
என வண்ண வண்ண கலர் பூசி கதை பேசி இருந்த காலம்

விஜயகந்தும் அர்ஜுனும் இந்தியாவை காப்பது போல்
எமக்கு ஒரு ராம்போ இருந்தா நாடு விரைவா கிடைக்கும் என
எமக்குள் ஓடும் என்ன ஓட்டம் தலைகால் புரியா சந்தோஷம்
பக்கத்து வீட்டு பெடியள் எல்லாம் நல்லவங்கள் இல்லை நிலா
நானே உனக்கு எல்லாம் செய்யும் யோக்கியன் என பொய்பேசி


அறியாத வயது அதில் ஆயிரம் கதைசொல்லி மனதுக்குள் பூரித்து
நமக்குள் ஒரு உலகம் ஏற்படுத்தி வண்ணத்து பூச்சி போல
இறக்கை விரித்து திரிந்த காலம் அது வெட்டை வெளியும்
பூவரசம் மரநிழலும் இலைகளில் சுருட்டிய பீப்பியும்
கொடுத்த சந்தோஷம் எப்பொழுதும் மனதில் இருக்க

ஒருநாள் இரவு என் நிலா வரவில்லை கேள்வியது மனதில்
எல்லோரும் சிரித்து இருக்க நான் மட்டும் சோகமாய்
ஒரு கட்டத்தில் முடியாமல் போக கேட்டுவிட்டேன் நிலா
அம்மாவிடம் உங்களுடன் ஏன் நிலா வருவது இல்லை என்
வீட்டுக்கு இப்பொல்லாம் என ஆதங்கத்தை

அவள் பெரிய மனுசி ஆகிட்டாள் அக்கம் பக்கம் இரவில்
போகக்கூடாது காத்துகருப்பு படுமாம் அதுகும் எனக்கு
புரியல எதுகும் எனக்கு விளங்கவில்லை நேற்றுவரை என்னுடன்
இருந்து கதை பேசியவள் எப்படி பெரியவள் ஆனால் நான் மட்டும்
சின்னவனா இருக்க மீண்டும் விடைதெரியா கேள்வியுடன் உறக்கத்துக்கு

மூன்றுகிழமை கடந்திருக்கும் பார்க்கவே முடியாதா என என்
மனம் ஏங்கி இருக்க ஒருநாள் காலை என் வீட்டு வேலியோரம்
நின்றிருந்தால் என் நிலா என் கண்கள் ஆயிரம் கேள்வியுடன்
அவளை பார்க்கக் அவள் கண்கள் ஓராயிரம் ஏக்கத்துடன் என்னை
பார்க்க சிறுவயது குறும்பும் விளையாட்டு தனமும் ஒரு புரிதலாய்
எம்முள் மாறியிருக்கு என என் மனம் கதைசொல்லிச்சு எனக்கு

இலைமறை காயாய் இளையவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள்
வாழ்வின் மாற்ற விநோதத்தை பல கேள்விட்டு விடைகிடைக்கும்
என்னை போல நல்லவர்க்கு (நோ பேசக்கூடாது )உங்களையும் சேர்த்து
புரிதல் அறிதல் தெரிதல் எல்லாம் ஒரு ஆவல் .

1069240_4500581852461_1424594751_n.jpg

திங்கள், 15 ஜூலை, 2013

அரசியல் அல்ல ..!

2009 மே18 பின் தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தி முடிவுக்கு வர ஈழ விடுதலையை முன்னெடுக்கும் முன்னெடுப்பார்கள் என நம்பியவர்கள்  எல்லாம் தமிழர் தலைகளில் கல்லை போட செய்வதறியாது நின்ற ஈழ மக்களுக்கு தேசியத்தின் தலைவர் கைகட்டி போன தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே எஞ்சி இருத்தது அதன் பிரகாரம் ஈழமக்கள் அவர்கள்  பின்ன நடக்க முழுமையான அரசியல் மட்டுமே செய்து பேசக்கூடிய செய்யக்கூடிய  ஒருதலைவரை இவர் போராட  பயப்பிடுறார் எனவும் சிங்களுத்துக்கு  சார்பா நடக்குறார்  எனவும் வசைபாடி துரோகியாக்கி என்ன எல்லாம் பேச முடியுமோ பேசி விலகி வைக்க பெரும் பாடு நடத்தது தெரிந்த விடையம்

இதில் என்ன வேடிக்கை என்றால் தலைவரால் கைகாட்டபடு கூப்பிட்டு கூட்டமைப்புக்கு  தலைவர் ஆகும்வரை சம்மந்தன் ஐயா பற்றி எவரும் வாய் திறக்க விலை அவரே கூறியது போல் புலிகளின் இலக்கில் நான் முதாலாய் இருத்தேன் இப்படி இருக்க அவரை  தேசிய தலைவர் எதுக்கு தெரிவு செய்தார் எவ் அவரை தலைவர் ஆக்கினார் அப்போது இப்ப தேசியம் பேசும்  ஊடகங்கள் எழுத்தாளர்கள் என் மவுனித்து இருத்தனர் தலைமைக்கு கடுபட்டா பயந்தா விடைதெரியா கேள்வியா போக

முள்ளிவாய்க்கால் பின் ஈழத்தமிழர் தங்களுக்கான  பலம்  பொருந்திய ஒரு அரசியல் தலைவரை தெரிவு செய்யவில்லை அல்லது உருவாக்க வில்லை என்றே தோன்றுகிறது இருப்பவர் எல்லாம் துரோகிகள் என்றால் அங்கு அல்லல் பட்டு  துன்பப்படும் மக்களின் நிலைமைய கருத்தில்  கொள்ளது ஊடகபுலிகள் மீண்டும் எழுவேம் அடிப்போம் என்பதாக வரிவரியா கதை எழுதுவதுடன் போராட்டம் நடந்தவண்ணம்  இருக்க அங்கு காணமல் போதலும் கொலையும்  கலாசார சீரழிவும் இனிதே நடக்கு இதை தட்டி கேட்க எமக்குள்  பாரிய முரண்பாடு இருக்க எவர் கேட்பது என்பதுடன் நிக்குறது தேசியமும் மக்களும்

அதன் காரணியா தமிழ்தேசிய கூட்டமைப்பின் அரசியல் மேற்கு உலகுக்கும் இந்தியாக்கும் முக்கியம் ஆக புலி சாயம் பூசப்பட்ட கூட்டமைப்பு எங்கு போனாலும் உள் பூசலை தவிர்க்க முடியாமல் இருதது என்பதுதான் உண்மை தமிழ் தேசியத்துக்கு கட்டுபடுவம் என வந்தவர்கள் பதவிகளுக்கு அடிபட்டு நிக்கும் நிலை வேதனை ஆனது ஆளுமையான திறைமையான நாலு வெளிஉலகுக்கு தெரிய கூடிய மனிதர்களை முன்னிறுத்தி அரசியல் செய்தால் தான் இப்பொழுது இருக்கும் உலக ஒழுங்குக்கு ஏற்றாபோல் நகர  முடியும் ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் நின்று அரசியல் பேசுவதை தவிர்த்து ஒரு சர்வதேச பொறிமுறை அரசியலுக்கு நாங்கள் வளர வேணும்

இங்குதான் படித்தவர்கள் உயர் பதவிகளில் இருத்தும் விலை போகாதவர்கள் தேசியத்தில் பற்று உள்ளவர்கள் கண்டு எடுக்க பட்டு முன்னிறுத்தி கண்டும்போக்குகளுக்கு  தங்கள் அரசியல் வல்லமையால் பதில் அளித்து மக்களின் வாழ்விற்கு எவர் உறுதுணைய நிக்குறார்களோ அவர்களே இப்பொழுது ஈழ மக்களுக்கு வேண்டியவர்கள் தேவையும் கூட அதன் படி கேட்பார் அற்று இருக்கும் எமது இனத்தின் பாதுகாப்பை சமத்துவத்தை எவர்  உறுதிபடுத்தினாலும் அவரை கட்சி போதம் துரோகி என பாராது எமது சமூகத்துடன் அரவணைத்து போகவேண்டுய நேரத்தில்  நாம் இருக்குறோம் என்பது யதார்த்தம்

ஆகவே முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் அவர்களின் வரவு விடுதலையின் ஒரு புதிய அரசியலா இருக்கட்டும் அவரின் அரசியல் போக்கை பார்த்த பின்  மிக சிறந்த துரோகி பட்டம் கொடுக்கலாம் அதுவரை பொறுத்து இருப்போம் மக்களே .

என் காதலி(#களம் ) ..!

நான் 10ஆம் வகுப்பை நிறைவு செய்யமுன் என் முன்னால் அடிக்கடி வந்து போவாள் எப்படியாவது அவளை தொட்டு பார்க்கும் ஆசை  எனக்கு ஆனாலும் வயது இல்லை என என்னை போக தடுப்பர் உறவுகள் ஆனாலும் என்னுள் ஆசை தீயா  முயற்சி செய்தவண்ணம் அவளின் காதலர்களுடன் அடிக்கடி  தொடர்பில் இருப்பேன் அவர்கள் அவளை பலமுறை கொண்டு வந்து காட்டி போவார்கள்
ஆசை அதிகமாக நானும் சண்டை பிடித்து அவர்களுடன் போய் விட்டேன்


விளைவு முன்று மாதங்களில் எனக்கு சொந்தம் ஆனால் அவளை கலட்டி பிரித்து சுத்தம் பண்ணி அணைத்து தூங்கும் சுகம் எவளவு இனிமை அவளில் வாசனை ஒரு தனி சுகம் உறக்கத்திலும் பாதுகாப்பை உறுதிப்படித்தி வெட்கம் அற்று உறங்குவாள் கைகளில் ஏந்தி அவளை காடுமலை வயல்கள் எல்லாம் நடப்பேன் என்னுடன் சுற்றுவது எண்டால் அவளுக்கு கொள்ளை பிரியம் போகும் வழிகளில் மான் மரை அணில் எலி எதுகும் மிச்சம் இல்லை பதம் பார்ப்பாள் அவளை வருடி நடக்கும் பொழுது என் சந்தோஷம் சொல்லி மாளாது

பெரும் தடுப்பு ஒன்று போட்டு அவளை வைத்து கடும் சண்டை அவள் என்கைகளில் நான் பக்கத்தில் நின்றால் கடும் வாய்க்காரி 31பல்லையும் காலடி வைப்பாள் மறுபடியும் நான் பூட்டி விட்டால் அதுகும்  மீதம் இருக்காது காறி உமிழ்த்து துப்பி விடுவாள் சண்டையில் இருக்கும் வேகமும் என்னை காப்பற்ற இருக்கும் விவேகமும் அடா போடவைக்கும் ஒருமுறையும் நம்பிக்கை துரோகம் எனக்கு செய்யாதவள் நோய் நொடி என களைப்பு அடையாதவள் அவள் எனக்கு கிடைத்தது வரமே என நான் இருக்க


ஒருமுறை கடும் சண்டை  அவளின் வாயில் வீக்கம் கூடுதலா பேசி இருப்பாள் போல வைத்தியரை நாடும்படி எனக்கு கட்டளை வருகிறது அழைத்து போனேன் சுற்றி பிரட்டி முன்னாள் பின்னால் பார்த்து விட்டு சொன்னார் இனி நீ அவளுடன் வாழமுடியாது உனக்கு இன்னும் ஒரு புதிய காதலி ஏற்பாடு செய்கிறம் போட்டு இரண்டு நாள் கழிய வா என பெரும் சோகம் என் எல்லா சந்தோஷம் துக்கம் எல்லாம் கூட இருத்தவள் எப்படி பிரிவேன் என ஆனாலும் எதோ ஒரு காதலி இல்லாமல் என்னால் வாழ முடியாது என்பதால் 2 நாள் கழிந்து சென்றேன் ஆச்சரியம் எனக்கே

ரஷ்சியன் 47வயது  காதலியை வாங்கி வைத்து விட்டு ஒரு புதிய அமெரிக்க m16 காதலியை காட்டி இனி இவளுடன் வாழ் என சொன்ன போது நான் பட்ட ஆனத்தத்துக்கு அளவே இல்லை இனி எந்த சுழலுளும் உன்னை விட்டு நான் பிரியேன் என மனதில் சத்தியம் செய்து அவளை கட்டி அணைத்தேன் கந்தக வாசம் என் நாசியில் பட்டு சிலிர்க்க


என் துப்பாக்கி என்னை இறுக்க பிடி என்றது ..!!

சனி, 29 ஜூன், 2013

அட பாவமே .!

பாரிஸ் வந்து பலவருடம் ஆகிட்டு இன்னும் முசு ..சவாவுடன் வாழ்க்கை சிரிச்சு கையை காலை காட்டி ஓடுது வெளியில நிண்டு பார்க்குறவனுக்கு அவன் நல்லா பிரஞ்ச்சு கதைப்பான் என்கிற எண்ணம் வரும் நாங்க கண்ணாடி ரூமில நிண்டு செய்யும் கைஅசைவு ஒரு கோலிவுட் பட டைரட்டர் கணக்கா அக்ஷன் போட்டு கதைப்பம் காரணம் சைகையிலதான் நம்ம பாசையே கதைக்குறம் என்பது எப்படி புரியும் வெளியில் நிக்கும் நபருக்கு

இப்படியே ஊரை பேய்க்காட்டி கொண்டு திரியிற நமக்கு ஒரு சூப்பர் மாக்கெட் வேலை சரி எவளவோ பண்ணிட்டம் இதை சமாளிக்க மாட்டமா எண்டு தலையை ஆட்டி எனக்கு வேலை தெரியும் மொழி அத்துப்படி எண்டு உள்ள போயாச்சு முதல்நாள் தொடக்கம் நாலுநாளா மைக்கில எவனை கூப்பிட்டாலும் என்னை கூப்பிடும் நினைவு பாய்த்து பறத்து போய் முன்னாடி நிப்பன் அவள் சொல்லுவாள் உன்னை இல்லை அவருதான் கூப்பிட்டது எண்டு அப்ப ஒரு சிரிப்பு சிரிப்பும் பாருங்க அது எப்பவும் வராது

இப்படியே போனா என்ன ஆகும் எண்டு நினைத்து வெட்கத்தை விட்டு மெதுவா பேச்சு கொடுக்குறது சிலரக்கு இதைதான் சொல்லவாறான் எண்டு விளங்கி ஓகே எண்டுவான் சிலர் விளங்கவில்லை எண்டுவான் அப்ப நமக்கு கோவம் வந்திடும் அவனை பேசுவம் (துவா கொம்பரம் அறியான்)உனக்கு ஒண்டும் விளங்காது எண்டு பிரான்சுகாரனுக்கு வகுப்பு எடுப்பம்  அப்படி தள்ளாடி நிண்ட நமக்கு ஒருத்தி வந்தால் தேவதை போல (மிகுதி வர்ணிப்பா சாண்டிலியன் புத்தகத்தில படியுங்க தேன்கிண்ணம் ..செவ்விதழ் அப்படி )நான் வணக்கம் சொன்னாலும் கிழ குனிவாள் அப்புட்டு வெட்கம் பிள்ளைக்கு நான் வேற அமிதாபச்சன் மாதிரி (நோ கொமன்ஸ் )இப்படியே ஒரு ஆறுமாதம் போட்டுது

நானும் கட்டக்கூடிய எல்லா சினிமாவும் காட்டி பார்த்தன் பாலா படம் முதல் கொண்டு சங்கர் படம் வரை ம்ம் ஒண்டுக்கு அசையுது இல்லை ஓகே கடைசியா எனக்கு தெரிஞ்ச அறிச்ச முடித்த முழு பிரான்ச்சையும் பாவிச்சன் அவா கண்டுக்கவே இல்லை ஓகே இனி இவளோட ஒரு வணக்கம் வைக்க கூடாது எண்டு ஒரு மிக கடினமான முடிவுக்கு வந்தன் அதன் படி செயல் படித்தி கொண்டு இரண்டு கிழமை சுமார போட்டுது மூனாவது கிழமை வேலைக்கு போய் நானும் வேலையுமா நிக்குறன் அந்த பிள்ளை என்னை அடிக்கடி பார்க்குது எனக்கு செம கடுப்பு பேசும்போது பேசவில்லை இப்ப என்ன பார்வை வேண்டி கிடக்கு என்கிட்ட ஆதங்கம்

அப்புறம் நான் என்ன பேசினாலும் விளங்கி கொள்ளும் ஒருவன் வந்தான் அவன்தான் பின்னேரம் கடைக்கு பொறுப்பு அவன் கேட்டன் நீ என் அவாக்கு வணக்கம் சொல்லுவது இல்லை அந்த பிள்ளை தன்னிடம் சொல்லி கவலை படுகுது எண்டு சொன்னான் நம்ம மனசில ஆயிரத்தி ஒரு பட்டம் பூச்சி பறக்குது சரி போடா மாதவா எண்டு சொல்லிட்டு நான் அவனுக்கு விளக்கம் சொன்னேன் அவக என்னுடன் கதைப்பது இல்லை வேலைக்கு வந்து ஆறுமாதம் ஆகுது வணக்கம்
சொன்னால் கிழ பார்க்குது எப்படி நான் கதைப்பான் எண்டு கேட்க அவன் சொன்னான் பாருங்க ஒரு தகவல் அப்படியே தலை சுற்றி வேட்கா போத்திலில போய் பிடிச்சு நிண்டன்

அப்படி என்ன சொன்னான் எண்டு கேளுங்கோ


அவளுக்கு பிரஞ்சுமொழி சரியா தெரியாது அதாலதான் அவா எவருடனும் அதிகம் பேசுவது இல்லை எண்டு அட பாவமே நீ என் இனமா இதை முதலே சொல்லி தொலைக்க வேண்டியது தானே இருவரும் சைகையில் கதைத்து இருக்கலாம் .

வட் இஸ் திஸ் .! வெரி நைஸ் ..!

நாட்டில இருத்து படாத துன்பம் எல்லாம் பட்டு பிறந்ததில் தொடங்கி இடம் பெயர்த்து மாறி மாறி குடிசை போட்டு கரையான் புற்றிலும் பாம்பு புற்றிலும் கரப்பான் பூச்சியுடனும் வாழ்க்கை நடத்திய எமக்கு வெளிக்கிட்டு வெளிநாடு வந்து ஒரு ஐந்துவருடம்  போயிட்டா நாங்க காட்டுற அலப்பாரை இருக்கே தாங்கமுடியாது பாருங்கோ மாக்கிலதான் உடுப்பு போடுவம் சப்பாத்து போடுவம் விலைஉயர்த்த போன்தான் பாவிப்பம் பொரும்பாலும் தமிழை தவிர்ப்பம் தெரியுதோ தெரியாதோ இங்கிலுசுதான் கதைப்பம் நோ ..யெஸ் ..யா .சோ .வெள்ளையைவிட நாங்கதான் அதிகமா பாவிப்பம் பாருங்கோ .

இப்படி ஒரு குடும்பம் நமக்கு பக்கத்தில் இருக்குறாங்க வந்த நாட்டில வதிவிட உரிமை பெற்று விட்டு அவங்க படுற பாடு வெயில் வந்தா ஒ வெரி காட் எண்டு ஏசியை கட்டிபிடிச்ச படி பிறந்தது 37 டிக்கிரி வெயிலில இங்க 15டிக்கிரி முடியவில்லையாம் எப்புட்டு கொழுப்பு விட்டில சோறும் கோழியும் வெளியில போனா பிஸ்ஸாவும் .கேப்சியும் வாழ்நாள் பூரா இதுதான் சாப்பிடுறம் என்கிற பில்டப்பு வேற அவங்க வெளிக்கிட்டு பாரிஸ் வந்தாங்க இங்கின தமிழ் கடைவேற கூடுதலா இருக்கு சரி வாங்க எண்டு கூடிபோனா இங்கபாருங்க கத்தரிக்கா ஐயோ முருங்கைகாய் எண்டு மனுஷரை கடுப்பாக்கிறது

இவங்க பிறத்தது இது எல்லாம் பார்க்கவே இல்லையாம் சின்ன யாழ்ப்பாணம் மாதிரி இருக்கு பெடியள் எல்லாம் ஊருல நிண்டதுமாதிரி அங்க அங்க நிக்குதுகள் எண்டு விடுப்பு விஞ்ஞானம் வேற தேத்தண்ணி கடைக்கு போனா வடையை காட்டி வட் இஸ் திஸ் என்பதும் சாப்பிட்டு முடிய உங்க சாப்பாடு வெரி நைஸ் என்பதும் தமிழனுக்கு தமிழன் பண்ணும் மிக பெரிய கொடுமை

என்னதான் சீனை போட்டாலும் சிலதை கண்டால் வாய் ஊறும் அப்பம் சாப்பிட ஏலாதா எண்டு வெட்கத்தை விட்டு கேட்டு வாங்கித்தான் சாப்பிட வேணும் சாப்பாட்டில கடைசியா ரசம் தரமாடினாமா எண்டு கேட்கும்போது நமக்கு ஒரு மனசுக்க சிரிப்பு வரும் அப்படியே கையாள குலைச்சு அமுக்கும் போது அடையாள அட்டைதான் மாறியுருக்கு நாங்க மாறாவில்லை என்பது நினைவில் வந்து போகும் தருணங்கள் அவை தமிழ் கடை பக்கம் வந்தனியள் நாலு பொருளை வாங்கி போங்கோவன் எண்டு கூட்டி போனால்

நேர ஊர் கருப்பருசி ஊர் வெங்காயம் முருங்கைகாய் நெக்டோ சோடா எல்லாம் வாங்கி முடிய கேட்பங்கள் பாருங்க சாமி படத்துக்கு பட்டு விபூதி  சரி  எல்லாம் வாங்கி கொண்டு வெளிக்கிட முதல் கேட்டன் ஊர் பக்கம் போகவில்லையா எண்டு சொன்னங்க பதில் அங்க போக ஆசைதான் தம்பி
அம்மா என்னும் வீட்டுக்கு கொமட் கட்டவில்லை அதல இன்னும் போற பிளான் வரவில்லை எண்டு வீரை மரமும் பாலை மரபக்கமும் ஒதுக்கிய எமக்கு கொமட் ஒரு கேடு முழங்கால் சில்லு இருக்க நோகுமாம் இங்க பண்ணுற வேலை கொமட் கழுவுற வேலைதான் எதுக்கு இவளவு சீன் எண்டுதான் விளங்க வில்லை எல்லாத்துக்கும் ஆங்கில விளக்கம்தமிழ் கூட இப்ப கொஞ்ச்சம் கொஞ்சம் தான் வருகுது ஆங்கிலத்தை அழாகா கதைத்தாலும் பருவாயில்லை அதையும் கொண்டு குற்றுயிர் ஆக்கி முடில நம்மாள

ஓகே சொல்லி வெளிக்கிட்டு போட்டு வாறன் எண்டு போவங்க 2 மணித்தியாலம் கழிச்சு போன் வருகுது தம்பி போலிஸ் மறிச்சு வைச்சுஇருக்குறான் எண்டு நானும் என்ன எது எண்டு பதறி கேட்க சோதிக்கும்போது விபூதி பைய எடுத்துட்டான் போலிஸ் உடைச்சு மனத்து பார்த்துட்டு வாயில வேற போட்டு சாப்பிட்டு  வட் இஸ் திஸ் வெரி நைஸ் எண்டு கேட்கிறான் நமக்கு சிரிப்பு தாங்க முடில நிங்களே சொல்லுங்க அவங்க எப்படி விபூதிக்கு இங்கிலிஷ் விளக்கம் கொடுத்து இருப்பாங்க ஓவர் சீன் உடப்புக்கு கூடாது


எங்க போனாலும் நாங்கள் தமிழர் என்பது எமக்கு எப்பவும் நினைவில இருக்க வேணும் உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது .