புதன், 12 அக்டோபர், 2016

மரணத்தை பேசி.

மணியோசையில் எழுந்த பொழுதும்
குயிலிசையில் மயங்கிய பொழுதும்
சில்வண்டின் ரீங்காரத்தில் உறங்கிய பொழுதும்
சருகுகள் ஊடே எலிகளை கலைக்கும் சாரையும்
உயிர் காக்க அவை எழுப்பும் அபாய ஒலியும்
இன்னும் மண்டையின் ஓர் ஓரத்தில் நினைவில்

கட்டிலும் மெத்தையும் தலையணையும்
ஏற்காத உடல் எப்பவும் வெறும் தரை தேடி
முதுகில் புற்று புட்டி முட்ட நெளிந்து கிடந்து
உறக்கம் தொலைத்த அந்த கணப்பொழுதுகள்
ஏனோ தெரியவில்லை படு சுகமாய் இருந்ததே
உறக்கத்தில் அவன் இறந்தான் என்பது கூட
இப்பொழுதும் கனவாக தான் உள்ளது


நாகம் கடந்திருக்கும் இல்லை இது புடையன்
வெள்ளை பூரான் போட்டு இருக்கும் ..இல்லை
அடையாளம் நட்டுவக்காலி தான் ..இல்லை
ஆள் நீலம் பெரவில்லை விஷமா இருக்காது
பேசி ஒரு முடிவுக்கு வரமுன்னம் வேட்டொலி
விடை இல்லாமலே புதைக்கப்பட்டான் அவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக