வியாழன், 7 நவம்பர், 2013

வேவுபுலி ..!

நீர் பகைஅருகில் போகும்போது
பாம்புகளும் நடுங்கும் பாதைதனை விடும் ..
கம்பி பட்டு முள்வேலிகள் பூமாலையாய்  தெரியும் ..
எதிரியின் மண்ணரன் சிறு புற்றாய் இருக்கும் .

கந்தகப்பொதி புத்தக்பைபோல இருக்கும்
சுடுகோல் எழுதுகோலாய் இருக்கும்
கைக்குண்டு அழி ரப்பர் ஆகமுன் நிங்கள்
அதிகாலை மீண்டும் வந்திடுவீர் ஓய்விடம் ...

மச்சான் நீ எனக்கு பூசிவிட்ட கரி போகவில்லை
நாளை உனக்கு பூசுறன் கரி எண்ணை கலந்து
கழுவினாலும் போகாது காய்ந்தாலும் போகாது
பருவாயில்லை மச்சான் வெடிவிளுந்தா போயிடும் ...

டேய் நான் பக்கத்தில் உள்ளவரை ஒரு ரவை ..
உன்னை நெருங்கா வேங்கையா கொக்கா ..
என்று நீ கட்டி என்னை அணைத்த கணம் நினைவில் ...
கண்கள் கண்ணீரை தூவுதடா உன் மேல் என்
பாசக்கார தோழா..sad.png
1002457_561110620609791_343191837_n.jpg


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக