சனி, 7 டிசம்பர், 2013

தமிழரின் முகவரி .!

எட்டுகோடிக்கு மேல்லானோர்
எழுதி ஒட்டிய கடிதம் கேட்பார்  அற்று
ஆசியாவின் ஒரு பெருநிலத்தில்
பரவி கிடந்ததது சிதறி இருந்தது ..

எமக்கான பதிலையும் நாம் யார் ?
என்னும் கேள்விக்கு விடையும் அதில்
கேட்டு எழுதி இருந்தோம் கவனமா
ஆனாலும் அதை உலக பெட்டியில் போட ...

அஞ்சி பயந்து நடுங்கி  கைகளில் வைத்து
பைகளில் மறைத்து அன்னியர் பாரது ..
பக்குவமா தலைமுறைகளுக்கு மாற்றி
மாற்றி கொடுத்து பாதுகாத்து வைத்த கடிதம் ...

வள்ளுவன் வந்தான் கம்பன் கூட வந்தான்
நக்கீரர் நாவலர் என பலர் வந்து போயிம்
எமக்கான கடிதத்தின் முகவரி கிடைக்க வில்லை
நாங்களும் வருந்தவில்லை தேடியபடி இருந்தோம் ..

கார்த்திகை திங்கள் வேளையில் வல்வையில்
கிடைத்தது முகவரி உலக தமிழரின் நிஜ வரி
தேங்கி கிடந்த அஞ்சல்கள் எல்லாம் எழுதியது
எம் தலைவனின் பெயர் அதை துணிந்து ..

உலகமே தேடிவந்து பெற்றுக்கொண்டது கடிதம்
ஈழத்தை ஐநா வரை கொண்டுசென்று விட்டது
எம் தலைவனின் முகவரி இட்டு இனி நாம்
எழுதுவோம் எவருக்கும் அஞ்சாத கடிதம் ...

யாம் இருக்க பயம் ஏன் என்றான் தமிழ்குமரன்
நாடு பெரிது என்று வாழ்த்தார் எங்கள் ஈழக்குமரன்
அகவைகள் வந்து போகும் எங்கள் தலைவருக்கு
முகவரி மட்டும் தமிழீழம் ஆகும் தமிழருக்கு ...

உலக தமிழரின் பெரும் தலைவருக்கு
ஈழத்தமிழரின் அருமை தலைவருக்கு
விடுதலை புலிகளின் படை தலைவருக்கு
தமிழீழத்தின் அரியணை புதல்வருக்கு ...

எம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா .!

pirapakaran.jpg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக