வியாழன், 1 ஜனவரி, 2015

நீயும் உன் காதலும் ..!

சாம்பலில் இருந்து மீண்டும்.. 
எழுத்து பறக்க நான் ஒன்றும்.. 
பீனிக்ஸ் இல்லை.. 
என் வலுவை திரட்டி... 
பாய்ந்து போகக் கூட .. 
பந்தைய குதிரையும் இல்லை..
சிறுக சிறுக சேர்த்து..
கட்டி எழுப்பிய தேன்கூடு..
என் காதல் வீடு ...
நீ ஒற்றையாளாய் கல்லெறிந்து..
போக எப்படி மனசு வந்தது உனக்கு ..
வரிகளில் ஆழம் புகுத்தி ..
சொல்களில் ஜாலம் காட்டி ..
கவிதை புனையக் கூட ..
கற்று கொள்ளவில்லை நான் ..
உன் உதட்டில் நாண் ஏற்றி ..
வார்த்தை அம்பை இழுத்து ..
எப்படி குறி தவறாது என் ..
இதயத்தில் செலுத்தினாய் நீ ..
உயிர் ஊசல் ஆடும்போது கூட ..
என் மனவானில் நீ..
ஊஞ்சல் ஆடுகிறாய் காதலே .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக