சனி, 20 பிப்ரவரி, 2016

போராளிக்கு மட்டும் தான் மானம் உண்டா பொது மகளுக்கு இல்லையா ???????

கலாச்சாரத்தை பாதுகாக்க முடியாத எழுத்துலகம் யாருக்கு வேணும் ...உங்கள் கழிவுகளை விற்க மக்கள் வேணும் ஆனால் நீங்கள் மக்களை கண்டுக்க மாட்டீர்கள் பிரபலங்களும் பிரபலங்களுக்கு ஜால்ரா போடும் கூட்டமும் சிந்திக்கவேணும் இனியாவது ..
‪#‎இசைப்பிரியாக்கு‬ உலக நீதி கேட்பவர்கள் முதலில்‪#‎வித்தியாக்கும்‬ ‪#‎ஹரிஸ்ணவிக்கும்‬ உள்ளூரில் நீதியை தேடுவார்களா ....
ஊடகவியலாளர்கள்,எழுத்தாளர்கள் ,இலக்கியவாதிகள் என்பவர்கள் எப்பொழுதும் ஒரு சமூகம் சார்த்து சிந்திக்க வேண்டியவர்கள் ,அந்த சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிர் குரல் எழுப்பவேண்டியவர்கள்,கண்டனங்களை பதிவு செய்வதும் முறையிடுவதும், சுட்டிக்காட்டி மக்கள் மத்தியில் கொண்டுபோவதுமாக இந்த எழுத்துலகம் இயங்க வேண்டியது ,ஒருகாலத்தில் அப்படித்தான் இயங்கியது எனலாம் .....
ஆனால் இப்பொழுது எல்லாம் ஆளாளுக்கு இலக்கிய சங்கங்களும் ,வட்டம் சதுரம் என இலக்கிய குழுக்களும் தாம் சார்த்த தங்களை சாரும் நபர்களுக்கு பஜனை பாடவே தங்களின் முழு நேரத்தையும் செலவழிப்பதும் ,எவன் காலை பிடித்தாவது பெயர் பெற துடிப்பதும் அதற்காக அம்மணமாக நிற்க கூட துணிவதுமாக மிக அநாகரிகமான மீன்சந்தை வியாபாரமாக மாறி இருக்கிறது இந்த எழுத்துலகம் ........
அதிலும் ஈழ இலக்கியவாதிகள் இந்தியாவில் ஒரு தலித் பெண்ணுக்கு ஏதாவது பங்கம் ஏற்பட்டால் தங்கள் உடலில் காயம் ஏற்பட்டது போல துடித்து எழுவதும்,கூட்டறிக்கை ,இலக்கியவாதிகள் கையொப்ப மனு என அவர்கள் செய்யு அழும்புக்கு அளவே இருக்காது ஏனெனில் தமிழ்நாடு என்னும் பெரும் சந்தியில் சிறு கீரை விற்க இவைகள் இவர்களுக்கு அவசியம் ஆகிறது .....
அதிலும் ஈழத்தில் இருக்கும் இலக்கிய காளான்கள் மாதம் நாலு முறையாவது இலக்கிய சந்திப்பு நடத்துவதும், அதில் பெண்கள் கலந்துகொள்ளவில்லை என கவலைப்படுவதுமாக இருக்கு ஒரு சில குறுப்புக்கள், இந்த சமூகம் சார்த்து சிந்திப்பதே இல்லை அதற்காக ஒருநாளும் பேசியதும் இல்லை குரல் எழுப்பியதும் இல்லை, எங்காவது பிரபலம் கிடைக்கும் என்றால் அங்கு போய் நின்று படத்துக்கு போஸ் கொடுப்பதும் ,செல்பி எடுத்து போடுவதும் அத்துடன் முடிந்துவிடும் போராட்டம் .....
ஆக இணையங்களில் நாடுபிடிக்கும் போராளிகளும் தமிழ்தேசிய அதி உச்ச விசுவாசிகளும் ,தங்களை புரட்சியாளர்கள் என காட்டுவதற்காக அடிக்கடி படங்களை மாற்றி வீரவணக்கம் போடுவதும்,தளபதிகளின் படங்களை போட்டு கதை சொல்வதுமாக அவர்களின் பொழுது போகிறது ....
ஆக ஈழ எழுத்தாளர்கள் என அறியப்படும் பலர் ஒரு இனம், அந்த சமூகம் பட்ட அவலங்களை எப்படியாவது விபரித்து கதை எழுதி ,அதை எங்காவது ஓடி ஓடி விற்று தங்களின் பிழைப்பையும் , இருப்பையும் தக்கவைக்க எடுக்கும் முயற்சியில், ஒரு துரும்பாவது சமூகம் சார்த்து ஓர் சீரழிவு ,பெண்கள் மீதான வன்முறை ,என்பவற்றுக்கு குரல் கொடுப்பதில்லை ,இசைப்பிரியாக்கு காட்டுகூச்சல் போடும் இந்த அடிப்படை அறம் பிழைத்த நியாவதிகள் வித்தியாவும் , ஹரிஸ்ணவியும் கண்களுக்கு தெரிவதில்லை .........
ஆக எமக்கு இசைப்பிரியா மட்டுமே ஈழபெண்ணாகவும் பாலியல் வல்லுறவுக்கு ஆள்பட்ட பெண்ணாகவும் தெரிவதால், எம் சமூகத்தால் சீரழிக்கப்படும் பெண்கள் பெண்களாக தெரிவதில்லை சிங்களவன் செய்வது மட்டுமே பாலியல் வன்புணர்வு இதை தமிழர் செய்தால் அதை பத்தோடு பதினொன்றாக கடந்து போகும் மனநிலையில் நாம் வாழ்கிறோமா .......
என் வீட்டுக்கு வராதவரை நாம் மௌனமாக இருக்கலாம் ,அது தீவிலையாம் இது வவுனியா காட்டிலையாம் என பேசிவிட்டு கடந்து போவோம் ஒருநாள் உங்கள் முற்றத்தில் உங்கள் சகோதரி சீரழிந்து கிடப்பாள் அப்பொழுதாவது உங்களுக்கு பேசுவதற்கு எழுதுவதற்கு முனைப்பு வருகிறதா என பார்க்கலாம் அதுவரை வேடிக்கை பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக