வெள்ளி, 13 மே, 2016

அணையாத விளக்காக .

நான் வளர்த்த கனவே
எங்கு போனாய்
என்னுடைய இலட்சியமே ..
எங்கு போனாய்

நான் விட்டேனா உன்னை அலட்சியமா
வெந்து சாகிறேன் என் மகளே ...

வாழ்த்தால் ஊர் பேச வேண்டும் என்றாய்
வாழ்க்கையில் கல்விதான் கண்கள் என்றாய்
வாழ்த்து நான் சாதிப்பேன் என்றாய்
வாழ்வு முடியமுன் புதைத்தார்கள் உன்னை ..

நான் போக இடம் நீ போகவேண்டி நின்றேன்
ஆனால் நீ போன இடமோ தூரம் எப்படி வர
பாருங்கள் என் ஊர் உயரும் என்றாய்
அதுவும் என்னால் உயரும் ஒருநாள் சபதம்

இன்று சாவிலும் அதை நடத்தி போனாய்
உன் ஊர் மட்டும் இல்லை இந்த உலகே
உனக்காக அழுது சாகிறது நீதி வேண்டி
நீதி செத்தாலும் சாகும் மக்கள் நீதி சாகாது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக