சனி, 24 செப்டம்பர், 2016

போராளீஸ் ஓர் பார்வை.

இந்த சொல்லை எழுதி எழுதியே ஒரு புதிய சொல்லாக வந்துவிட்டது ஆகவே இதை தவிருங்கள்,இந்த போராளீஸ் என்னும் சொல்லை நீங்கள் எதற்கு பாவிக்கிறீங்க என எனக்கு தெரியவில்லை என்பதாக ஒருவர் கவலை தெரிவித்தார்.

போராளீஸ் என்னும் பதம் கையாளக்காரணம் போராளிகள் என்பவர்கள் புனிதமானவர்கள் ஒரு இலட்சிய பாதையில் தங்களை கொடுத்து அதற்காக உழைத்தவர்கள்,சரியான தலைவன்,நேர்த்தியான வழிகாட்டல்,ஒழுக்கம்,கட்டுப்பாடு,பெரியோரை மதிக்கும் குணம்,பெண்களுக்கு கொடுக்கும் உன்னத சகோதரத்துவம் அழமான நேசிப்பு,என போராளிகள் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்...

இவ்வாறு ஒரு பார்வையில் கெட்டுவெட்டி நேர் மரமாக ஒருவரால் அழகாக வளர்க்கப்படும் போராளிகள்,தங்கள் பாதையில் இருந்தும் ,சுய ஒழுக்கத்தில் இருந்தும் என்றும் மாறவோ மாற்றவோ முடியாத ஒருவராக இந்த சமூகத்தில் உயர்த்து நிப்பார்கள்.இவர் தான் இவனின் தலைவன் என வேறு ஒரு நபர் பிரித்து அறியும் அளவுக்கு அவர்கள் குண இயல்புகள் இருக்கும்,ஏனெனில் அவர்கள் தேர்த்து எடுத்த பாதை அதை வழிகாட்டி போன தலைவன் அப்பழுக்கில்லா ஒரு மனிதனாக இருப்பார்.

ஆனால் இணைய வெளியில் போராளீஸ் என பாவிக்க காரணம்.

இந்த சமூகத்தின் விடுதலை போராட்டத்துக்கு எந்தவிதமான உதவிகளை கூட செய்திராத,ஒரு போஸ்டர் தன்னும் ஒட்டாத ஒருவர் தன்னை தானே விடுதலை விரும்பியாகவும்,தான் கட்டுப்பாட்டில் தான் இலக்கே இருக்கிறது என்பதாகவும்,தான் மட்டுமே அந்த தலைவனை போற்றி பாடவல்ல புலவனாகவும்,தனக்கே இந்த மண்மீதும்,மக்கள் மீதும் அதீத அக்கறை உள்ளவனாகவும்,பேச்சு,எழுத்து வரை தரக்குறைவான வார்த்தைகள்,வசைவுகளை அள்ளி தெளித்து மற்றவர்களை தூற்றும் அதிகாரம் தனக்கே இருப்பதாகவும் உலாவ வரும் ஒருவரை போராளீஸ் எனலாம்......

அது போக போராட்டம் தொடங்கி ஒரு தோட்டா வெளியேறிய உடன் வெளிநாடு வந்தவனும்,ஆயுத போர் முடிந்து அனைத்தும் சாம்பல் மேடு ஆகியபின் வெளிநாடு வந்தவன்,போராட்டம் நடந்த பொழுது அவர்கள் கட்டுப்பாட்டில் கூட வாழாது எதிரியின் கட்டுப்பாட்டில் வாழ்த்து சகல இன்பங்களை அனுபவித்து விட்டு வெளிநாடு வந்தவனும்,இன்று தன்னை போராளி என சீனை போட்டு தேசியம் பேசி அவர்களின் தியாகத்தில் குளிர்காய்ந்துகொண்டு உண்டியல் குலுக்குவதும்,பணம் சேர்ப்பதும் என முழுக்க தன் சுயநல போக்கில் வாழ்பவன் போராளீஸ் எனலாம்...

மொத்தத்தில் இவர்கள் தேசியம் விடுதலை என பேசி பேசி தங்கள் பைகளை நிரப்புவதை, யாராவது ஒருவன் தடுத்து நிறுத்தி,அதுக்கு எதிராக பேச தொடங்கும் போது அவனை துரோகி எனவும்,செம்பு எனவும்,அவன் ஆள் ,இவன் ஆள் எனவும்,கூட்டம் சேர்த்து கூப்பாடு போட்டு உரத்து கத்தி சபையை குழப்பி தங்கள் இருப்பை தக்கவைக்க போராடும் இவர்களை போராளீஸ் எனலாம்.

தொடரும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக