நேற்றிரவு அவள்
காதருகில் தூங்கவிடாது
நிறையப் பேசினாள்
எங்கெல்லாம்
என்னை கடந்து போனாளோ
அவைகள் பற்றி
அப்பொழுது
தன்னுள் தான்
பேசிய ரகசியங்களை போட்டுடைத்து
காதல் வயப்பட்ட
அத்தருணங்களை சொல்லிக்கொண்டு சிரித்தாள்...
மனதுக்குள்ளே
பட்டாம்பூச்சிகள் பறக்க
அவள் சொல்லிக்கொண்டு இருக்கும் இடங்களில்
அந்த பொழுதுகளை மீண்டும் இரைமீட்டியபடி நான் சுற்றிக்கொண்டு இருந்தேன்
அவ்வேளைகளில்
அவள் என்னை கடந்து போனது
ஒரு சம்பவம்
ஆனால், இன்று காதலில்
வாழ்வில்
ஒரு உன்னத தருணங்கள்
என்பதை நான் உணர்த்து கொண்டு இருந்தேன் .
காதருகில் தூங்கவிடாது
நிறையப் பேசினாள்
எங்கெல்லாம்
என்னை கடந்து போனாளோ
அவைகள் பற்றி
அப்பொழுது
தன்னுள் தான்
பேசிய ரகசியங்களை போட்டுடைத்து
காதல் வயப்பட்ட
அத்தருணங்களை சொல்லிக்கொண்டு சிரித்தாள்...
மனதுக்குள்ளே
பட்டாம்பூச்சிகள் பறக்க
அவள் சொல்லிக்கொண்டு இருக்கும் இடங்களில்
அந்த பொழுதுகளை மீண்டும் இரைமீட்டியபடி நான் சுற்றிக்கொண்டு இருந்தேன்
அவ்வேளைகளில்
அவள் என்னை கடந்து போனது
ஒரு சம்பவம்
ஆனால், இன்று காதலில்
வாழ்வில்
ஒரு உன்னத தருணங்கள்
என்பதை நான் உணர்த்து கொண்டு இருந்தேன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக