திங்கள், 15 ஜூலை, 2013

அரசியல் அல்ல ..!

2009 மே18 பின் தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தி முடிவுக்கு வர ஈழ விடுதலையை முன்னெடுக்கும் முன்னெடுப்பார்கள் என நம்பியவர்கள்  எல்லாம் தமிழர் தலைகளில் கல்லை போட செய்வதறியாது நின்ற ஈழ மக்களுக்கு தேசியத்தின் தலைவர் கைகட்டி போன தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே எஞ்சி இருத்தது அதன் பிரகாரம் ஈழமக்கள் அவர்கள்  பின்ன நடக்க முழுமையான அரசியல் மட்டுமே செய்து பேசக்கூடிய செய்யக்கூடிய  ஒருதலைவரை இவர் போராட  பயப்பிடுறார் எனவும் சிங்களுத்துக்கு  சார்பா நடக்குறார்  எனவும் வசைபாடி துரோகியாக்கி என்ன எல்லாம் பேச முடியுமோ பேசி விலகி வைக்க பெரும் பாடு நடத்தது தெரிந்த விடையம்

இதில் என்ன வேடிக்கை என்றால் தலைவரால் கைகாட்டபடு கூப்பிட்டு கூட்டமைப்புக்கு  தலைவர் ஆகும்வரை சம்மந்தன் ஐயா பற்றி எவரும் வாய் திறக்க விலை அவரே கூறியது போல் புலிகளின் இலக்கில் நான் முதாலாய் இருத்தேன் இப்படி இருக்க அவரை  தேசிய தலைவர் எதுக்கு தெரிவு செய்தார் எவ் அவரை தலைவர் ஆக்கினார் அப்போது இப்ப தேசியம் பேசும்  ஊடகங்கள் எழுத்தாளர்கள் என் மவுனித்து இருத்தனர் தலைமைக்கு கடுபட்டா பயந்தா விடைதெரியா கேள்வியா போக

முள்ளிவாய்க்கால் பின் ஈழத்தமிழர் தங்களுக்கான  பலம்  பொருந்திய ஒரு அரசியல் தலைவரை தெரிவு செய்யவில்லை அல்லது உருவாக்க வில்லை என்றே தோன்றுகிறது இருப்பவர் எல்லாம் துரோகிகள் என்றால் அங்கு அல்லல் பட்டு  துன்பப்படும் மக்களின் நிலைமைய கருத்தில்  கொள்ளது ஊடகபுலிகள் மீண்டும் எழுவேம் அடிப்போம் என்பதாக வரிவரியா கதை எழுதுவதுடன் போராட்டம் நடந்தவண்ணம்  இருக்க அங்கு காணமல் போதலும் கொலையும்  கலாசார சீரழிவும் இனிதே நடக்கு இதை தட்டி கேட்க எமக்குள்  பாரிய முரண்பாடு இருக்க எவர் கேட்பது என்பதுடன் நிக்குறது தேசியமும் மக்களும்

அதன் காரணியா தமிழ்தேசிய கூட்டமைப்பின் அரசியல் மேற்கு உலகுக்கும் இந்தியாக்கும் முக்கியம் ஆக புலி சாயம் பூசப்பட்ட கூட்டமைப்பு எங்கு போனாலும் உள் பூசலை தவிர்க்க முடியாமல் இருதது என்பதுதான் உண்மை தமிழ் தேசியத்துக்கு கட்டுபடுவம் என வந்தவர்கள் பதவிகளுக்கு அடிபட்டு நிக்கும் நிலை வேதனை ஆனது ஆளுமையான திறைமையான நாலு வெளிஉலகுக்கு தெரிய கூடிய மனிதர்களை முன்னிறுத்தி அரசியல் செய்தால் தான் இப்பொழுது இருக்கும் உலக ஒழுங்குக்கு ஏற்றாபோல் நகர  முடியும் ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் நின்று அரசியல் பேசுவதை தவிர்த்து ஒரு சர்வதேச பொறிமுறை அரசியலுக்கு நாங்கள் வளர வேணும்

இங்குதான் படித்தவர்கள் உயர் பதவிகளில் இருத்தும் விலை போகாதவர்கள் தேசியத்தில் பற்று உள்ளவர்கள் கண்டு எடுக்க பட்டு முன்னிறுத்தி கண்டும்போக்குகளுக்கு  தங்கள் அரசியல் வல்லமையால் பதில் அளித்து மக்களின் வாழ்விற்கு எவர் உறுதுணைய நிக்குறார்களோ அவர்களே இப்பொழுது ஈழ மக்களுக்கு வேண்டியவர்கள் தேவையும் கூட அதன் படி கேட்பார் அற்று இருக்கும் எமது இனத்தின் பாதுகாப்பை சமத்துவத்தை எவர்  உறுதிபடுத்தினாலும் அவரை கட்சி போதம் துரோகி என பாராது எமது சமூகத்துடன் அரவணைத்து போகவேண்டுய நேரத்தில்  நாம் இருக்குறோம் என்பது யதார்த்தம்

ஆகவே முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் அவர்களின் வரவு விடுதலையின் ஒரு புதிய அரசியலா இருக்கட்டும் அவரின் அரசியல் போக்கை பார்த்த பின்  மிக சிறந்த துரோகி பட்டம் கொடுக்கலாம் அதுவரை பொறுத்து இருப்போம் மக்களே .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக