செவ்வாய், 22 ஜூலை, 2014

பொய் ..!

பொய்யும் புரட்டும் ...
சிரட்டையும் கையுமாம் ..

என் அப்பத்தா அடிகடி ..
முணுமுணுக்கும் சொல் ..

வழி கேட்டா சொல்லார் பின் ..
வக்கனையா விடுப்பு கேட்பார் ..

எதுக்கு போறிங்க என்னத்துக்கு என்று ..
கேள்வி மேல் கேள்வி வைப்பார் ..

உள்ளதை உள்ளபடி சொல்லார் பொய்யர் ..
சுற்றி வளைத்து சுழல விட்டு ..

கெட்டித்தனம் என தமக்குள்ள எண்ணி ..
அத்தனை முட்டாள் தனம் செய்யும் ...

இவர்கள் வாய் திறந்தாள் வானவெடி ..
மனிதனுள் மனிதனை விற்கும் ..

வித்தை அறிந்தவர்கள் பொய்யர்கள் ..
கேட்டால் வாழ வழி என்பார் ...

வேறு நல்வழி தேடார் பொய்யர் ..
நடுநிலை ..கரைநிலை என்று காரணம் வேறு ..

கண்ணை பார்த்து மூக்கு என்று சொல்பவர் ..
இல்லை என நீ சொன்னால் கொள்கைவாதி ..

புரட்சிவாதி என்று சொல்லி கடைசியில் ..
தீவிரவாதி என்று ஒரு பட்டம் வரும் ..

மறைக்கணும் ..ஒழிக்கணும் உண்மையை ..
பிதற்ரனும் ..புனையனும் பொய்யை ..

இலக்கியம் என்னும் பெயரில் ஒரு ..
கலக்கியம் பதியனும் பொய்யா ..

அதை திறன்பட விற்கவேணும் ..
கதை எழுதி காசு பார்த்து ..

கண்டபடி காரணம் சொல்லி ..
ஒட்டி உறவாடி கட்டி தழுவி ..

வைத்திடுவார் ஒற்றை ரூபா நெற்றியில் ..
செத்திடு என்று பொய்யுரைப்போர் ..

மெத்த கவனம் மெய்யாலும் சொல்லுறன் ..
பொய்யர் போக்கத்து போவார் ஒருநாள் ..

அன்று நாம் காரியம் செய்திட வேண்டும் ..
வீரியமா இருப்போம் எம் இலக்கில் ..

வரலாற்றை ஒருநாள் மாற்றுவோம் என.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக