சனி, 24 செப்டம்பர், 2016

வலிகள் மேல் வன்ம நாக்கால் நக்காதீர்.

                    

எழுதக்கூடாது என பலமுறை எழுதி அழிந்து விட்டு நிம்மதி அற்று உறங்க போயிருக்கிறேன்,காரணம் வேறு ஒன்றும் இல்லை எங்க பல்லை குற்றி நாங்களே ....கூடாது என்பதால்...

ஆனாலும் இன்று அதன் கதையின் வேகமும்,அவர்களின் செயலும், அதன்னூடே எழும் கேலிகள், கிண்டல்கள் ,பேச்சும்,உங்கள் தினவெடுத்த தினாவெட்டுக்களை என் எழுத்து கோல் முனை கொண்டு முறிப்பது அன்றி வேறு ஒன்றும் வழியில்லை எனக்கு....

வித்தியாவின் மரணம் நிகழத்த பின் எழுந்த மனிதாபிமான அலையை ,அதன் உணர்வு பூர்வமான போராட்டங்களை ,அக்குடும்பத்துக்கு உறுதுணையாக நின்ற அனைத்து மக்களும்,நிறுவனங்களும் அமைப்புக்களும்,சமூக ஆவலர்களுக்கும் ,நாம் என்று கடமையுடனே இருக்கிறோம் இருப்போம்....
அதன் இடைவெளில் வித்தியா குடும்பத்துக்கு உதவுறம் என வெளிநாட்டு வாழ் புங்குடுதீவு உறவுகள்,ஒன்றியங்கள் ,சங்கங்கள் வெளிப்படையில் இட்ட அறிக்கைகள் பேச்சுக்கள் பெரும்பாலும் அனைவரும் காதுகள் ஊடாக பாதுகாக்கபட்டது என்பதையும் அனைவரும் அறிவார்கள்....

இவ்வாறன செயல்பாட்டின் அடிப்படையில் கனடா "புங்குடுதீவு பழையமாணவர் சங்கம்"ஒரு தொகை நிதியை சேகரித்து இருக்கிறது அது போல் லண்டனில் ஒரு சில தனிநபர்கள் வித்தியாவின் உறவுகள் என சொல்லி நிதி சேகரித்து உள்ளார்கள்,மற்றது சுவிஸில் உள்ள உறவுகளும் சொந்தம் என சொல்லி நிதி சேகரித்து உள்ளார்கள்,ஆனால் இவர்கள் சேகரித்த நிதி வித்தியா குடும்பத்துக்கு கொடுக்கபடவில்லை,இப்ப பிரச்சினை இவர்கள் எமக்கு தரவில்லை என்பது இல்லை இவர்கள் வாங்கிய காசு வித்தியா பெயரை சொல்லி வாங்கியது தான் எமக்கான நெருடல், பிரச்சினை, வேதனை......

வெளிநாட்டில் இருந்து வித்தியா குடும்பத்துக்கு புங்குடுதீவு அமைப்புகளால் கொடுப்பட்ட எனில், அது பிரான்ஸ் புங்குடுதீவு ஒன்றியம் மட்டுமே ஆகும்...http://www.pungudutivu.fr/2015/08/b... தொடுப்பை அழுத்தி தொகையை பார்க்கலாம்,மிகுதி எல்லாம் தாம் கொடுத்தாக சொல்லப்பட்ட செய்திகள் ஆகும்அவர்கள் கொடுத்து இருந்தால் ஆதரங்களுடன் வெளியிடலாம் ஒரு பிரச்சினையும் இல்லை ...

ஆனால் இன்று கண்ணகை அம்மன் கோயில் திருவிழாக்கு கூடி இருக்கும், பெரும்பாலும் வித்தியாவை கொலை செய்த கொலையாளிகளின் அண்ணன் ,தம்பி, மாமன், மச்சான், உறவுகள், என அனைவரும் இன்று அங்குதான் நிக்குறார்கள்,அவர்கள் வித்தியா குடும்பத்துக்கு ஐன்பது அறுபது லட்சம் பணம் வந்ததாகவும் ,அதை வைப்பில் இட்டு வாழ்வதாகவும் (இரண்டு தவணைக்கு சட்டத்தரணி வரவில்லை அது வேறுகதை) அந்த கொலையில் தங்கட உறவுகளுக்கு எந்த தொடர்பும் இல்லையெனவும் ஒரு தோற்றத்தை புங்குடுதீவில் உருவாக்கி வருகிறார்கள்...

நீங்கள் கொளுத்தும்பாவம், உங்கள் பாவ புண்ணிய கற்பூரம் கண்ணகி உங்கள் குலத்தை ஒருநாள் கொளுத்துவாள் என்னும் நம்பிக்கை எமக்கிருக்கு,பால் சட்டி ,தீ சட்டி எடுத்து உங்கள் யோக்கியங்களை நீங்கள் மூடி மறைந்ததால், ஒருநாள் அது உமியில் இட்ட நெருப்பாக உள்ளால் எரிந்து சாம்பல் ஆக்கும் என்னும் திடம் எம்மிடம் இருக்கிறது...

நா கூசாது நீங்கள் பேச்சும் பேச்சை நிறுத்துங்கள்,திருவிழா முடிந்து போகும் போது வேறு ஒரு வித்தியாவை நீங்கள் சிதைக்காமல் போனாலே பெருநிம்மதி அடைவோம்,ஏனெனில் உங்கள் குணங்கள் வெறி குணம் ஆனது கூழுக்கும்,மீனுக்கும் தானே ஊருக்கு திருவிழா செய்ய போறனீங்கள் கடவுள் பக்தியிலா இல்லையே,ஆக நீங்கள் உதவி செய்வது பற்றி இல்லாது, இப்படி எல்லாம் செய்தோம் என பொய்களை அவிழ்த்து விட்டு நல்லவர்கள் போல எப்படி உங்களால் ஊருக்கு உலாவ முடிகிறது,படங்களை பேஸ்புக்கில் போட்டு ஊருக்கு உதவுறம் என போஸ் கொடுத்து பொன்னாடை போர்த்தி சிரித்தபடி நிக்க முடிகிறது,நல்லவர்களே பதில் தரலாம்.

“எரியும் சிதை நெருப்பை அணைக்கலாம் நீறு பூத்த நெருப்பு அணையாது”

#குறிப்பு...::இவை தொடருமாக இருந்தால் தனித்தனியாக பெயர்கள் போட்டு எழுத பெரிய நேரம் எடுக்காது,வித்தியா வீட்டுக்கு வந்த பலர் நாங்க காசுகொடுத்தம் இன்னாரிடம் தந்தவையா என கேட்பதால் அதுக்கு ஒரு முடிவு எடுக்கவே எழுத நேர்த்தது,அந்த பணம் பற்றி நீங்கள் பொதுவெளி அறிக்கை விடுவது உகந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக