வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

என் மனம் .!

கடலை போன்றது நிலையாய் இருக்கா
அலையும் காற்றும் உறங்க விடா
படகில் பலர் அலையுடன் பேசி நகர
என் மன வானில் விடி வெள்ளி

சீவாத தலை முடியும் பொட்டில்லா
உன் நெற்றியும் எனக்கு அம்மவாசை
இரவை நினைவில் கொண்டுவர
உன் புன்சிரிப்பு நட்சத்திரம் ஆனது

நீ பேசினால் புல்லாங்குழல் இப்பொழுது
எனக்கு சங்கு சத்தமா கேட்குது
உன் அண்ணன் பார்த்த நாள் முதல்
கனவிலும் சுடலை தெரியுது

நான் உன்னை பார்க்கிறேன் காதல் பார்வை
நீ என்னை பார்க்குறாய் ஏக்க பார்வை
நான் உன்னை அடைய விரும்பினேன்
ஆனால் உன் அண்ணன் என்னை அடிக்க தேடுறான்

என்றோ ஒருநாள் உன்னை சேரும் நாள் வரும்
அதுவரை என் மனம் நிலையில்லா கடலில்
பயணம் செய்து கொண்டு இருக்கும்
உன்னை தேடி காதலியே .

1 கருத்து: