புதன், 2 அக்டோபர், 2013

சூரிய தேவனின் தம்பி .!

புலிகள் போராடியபோது நான்
அவர்களுடன் நிற்கவில்லை என  தெரியும்
எதை விட்டுக்கொடுக்க முடிந்ததோ அதை
உயிரை கொடுத்துதான் போராடினோம்
எவற்ரையும்  விட்டுக்கொடுக்க வில்லை

அப்படி  விட்டு கொடுத்து இருந்தால்
எப்பவோ அழிந்து இருப்பம்
இது தான்  உண்மை
இது தான்   நடந்தது

எவரும் வன்னியில் வேடிக்கை
பார்க்கவில்லை எல்லைப்படை
துணைப்படை என குமரி முதல்
கிழவி வரை போராடிய மண்

விட்டிருக்கக்கூடாது என்றும்
விட்டுக்கொடுக்காததை விட்டு பிடிக்கலாம்
என்றும் தோன்றும் ஏனெனில்
அனைவருக்கும் போர் பயிற்சி
சண்டை அனுபவம் இருந்தது

காரணம் எவரும்   வெளியில்  நிக்கவில்லை
அதோடு பயணித்தவர்கள் வன்னி மக்கள்
பொறுப்புடன் கருத்துச்சொல்ல நான் சு இல்லை
ஒருவருடைய  எழுத்துக்களை  வைத்தே
அவர் எங்கு நின்றார் என சொல்ல முடியாது


கேபி  என்ற  முன்னாள் போராளி
சரணடைந்தது
முள்ளிவாக்காலுக்கு முன்பா........???
பின்பா ..........???
அதுவல்ல கேள்வி தலைவர் அவரை
வெளியுறவு செயலரா நியமித்தது
முள்ளிவாய்க்காலுக்கு முன்பா பின்பா

இப்படி ஆயிரம் கேள்விகளுடன்
எமது தேசியம் நகருது
ஒருவன் நான் பிரமா என்றால்
மற்றவர் நான் விஸ்ணு என்பார்

எமக்கு தெரியும் இங்கு யாரு நாரதர்
என வேளைவரும்போது நாம் சிவனாக
உருவெடுப்போம் அப்பொழுது இருக்கு
ருத்திரதாண்டவம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக