வியாழன், 31 அக்டோபர், 2013

சீ ...தனம் எதுக்கு உனக்கு ஆண்மையே .!!

சீ.. தனம் என்னும் அறையில்
பூட்டப்படும் கன்னிகள் பல ஆயிரம்
ஓதிடும் மந்திரம் பொய்யாகி போகும்
தர்மத்தை மறந்து நீ வாழ்வே ..
.
புரட்சி செய்பவர் நாங்களே
ஆதாரம் பல உண்டு பூமியில்
வேதனைப் பிடியில் வாழ்க்கை ஏன் ?
நீ பூட்டினை உடைத்திட வேண்டும் ..

ஜாதிகள் சொல்லி தரம் பார்த்து ஊரினில்
அவர்கள் உயர்ந்து நின்றனர் சமத்துவம்
சொல்லி இவர்கள் இருக்க
சத்தம் இல்லாமல் மனங்களை கொன்றனர் ...

புரட்சி குணம் கொண்டு ஒரு மாற்றம்
சீ....தனம் கொடுப்பதில் கொண்டுவா
ஈழ விழுமியம் காத்திட பேணிட நீ .
ஆங்காரம் கொண்டு உன்னை மாற்றிக்கொள் ..


பென்னும் பெருளும் வாழ்க்கை என்றால்
ஆண் அவைகளை கட்டிட்டு அலையட்டும்
நான் முதிர்கன்னியா வாழ்ந்திட்டு போகிறேன்
என்னில் தொடங்கட்டும் முதல் புரட்சி ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக