செவ்வாய், 1 அக்டோபர், 2013

கேட்கிறவன் ...........!

ஜனநாயக வழி நின்று நெடுநாள் போராடி
எம் தலையில் காலிமுகத்தில் சாணி பூசி
உருட்டி பிரட்டி எடுத்து எள்ளி நகையாடி
சிங்களம் மகிழ்ந்து இருந்த போது...

கேட்க நாதியற்று கேட்பார் எவரும் இன்றி
எம்மை காக்க எவர் வருவார் என
தந்தை செல்வா ஒரு மொழி ஒருஇனம்
என தமிழ்நாடு ஓடி ஐயாமாரை எம் ....

நிலை சொல்லி அழ அவரோ தன்னிலை
சொல்லிவிட்ட வரலாறு எம்மிடம் இருக்கு
நானோ இறையாண்மை அடிமை
நீயோ இன்னொரு அடிமை உனக்கு...

என்னால் என்ன செய்ய முடியும் என விளக்கம்
சொல்லி கை கழுவி விட்ட கதை நினைவிருக்கு
எமக்கு காலம் கடந்தது வர எமக்கான கனவை
சுமந்த ஒரு வீரன் வர நாம் பட்ட மகிழ்வு அளவில்லை..

தம்பியா வந்த அண்ணன் பின் தானை தலைவனாய்
வளர்த்த கரிகாலன் எம் இனத்தின் விடிவெள்ளி
எம்மை ஒரு பாதையில் ஒளியுடன் கூட்டி போன
வழிகாட்டி தான் நேசித்த மண்ணை மக்களை கட்டி
காத்த வரலாற்று நாயகன் ஈழம் என்னும் ஒரு தேசம்..

உலக வரைபடத்தில் உருவாக நின்ற ஒரு நாயகன்
மக்களில் இருந்து புலிகளை உருவாக்கி புலிகள்தான்
மக்கள் மக்கள்தான் புலிகள் என முழங்கிய தேசியத்தின்
தலைவனை அவர் பின்னால் சென்ற மக்களை...

இன்று 30 வருடம் வராதவன் 3வருடம் முன்வந்தவன்
பூனை என்கிறான் இடத்தை நிரப்ப முடியாது என்கிறான்
ஈழப் பெண்ணை விதைவைப் பெண்ணை மணப்பேன்
இலை மலர ஈழம் மலரும் என்றான் நடந்தது வேறு ...

புலித்தடைக்கு அனுமதி கொடுத்த சபாநாயகர்
காளிமுத்து பெண் கைபிடித்து இந்திய..
இறையாண்மைக்கு கட்டுப்பட்டு அரசியல்
நடத்தும் பயல் எம தமிழ் தலைமைகளை....

பூனை என்பதா முன்னம் பெரியார் பேரன் என்றார்
இப்போ பெரியார் தெலுங்கன் என்றார் அவரின்
அரசியல் சாசனம் இந்திய இறையாண்மைக்கு
உள் பட்டவேனே கட்சியில் உறுப்பினர் ஆகலாம்..


என்று இருக்க கனடாவிலும் ஐரோப்பிலும்
கிளை எதுக்கு டொலர்பார்க்க யூரோ பார்க்கவா
சிவத்த துண்டு போட்டு விறைப்பா நின்றால்
எம் தலைவன் ஆகமுடியும் என்கிற நினைப்பா
எம் தலைவன் காட்டி போன கட்சி அவர்...

உருவாக்கி போன கூட்டமைப்பு அதை
கேள்வி கேட்கவும் மாற்றி அமைக்கவும்
எமக்கே உரிமை சினிமா கூத்தடிக்கு இல்லை
எம்மை கேள்வி கேட்கும் உரிமை..

பொன்சேகா கோமாளிகள் என்றபோது வராத கோவம்
இப்ப ஏன் வருது விக்கி தமிழ்நாட்டு
அரசியலை சொல்ல இவருக்கு ஏன் வருது கோவம்
இவர்  மட்டுமா அங்கே அரசியல் தலைவர் ...

புலிபோல் சூடு போட்டு கொண்டாலும் பூனை
புலியாக முடியாது மானே நீதான் எமக்கு
அடுத்த காமடியன் பவரே பதவியும் கதிரையும்
வர நீ நாளை நிப்பா திருமாவளவன் நிலைமையில்..
அரசியல் மாற்றும் மாற்ற பண்ணும்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக