திங்கள், 7 அக்டோபர், 2013

உன் மாமி காத்து இருக்கா என் அம்மாவா .!

என் வீட்டுக்கு வா
வாசலில் கோலம் இல்லை
கண்ணாடியில் பொட்டு இல்லை
காலையில் கால்கொலுசின் ஓசை இல்லை
என் வீட்டுக்கு வா ...

நிலா முற்றம் வெற்றிடமா இருக்கு
முற்றத்து மாமர ஊஞ்சல் ஆடாது நிக்கு
குயில் இப்பொழுது எல்லாம் கூவுவது இல்லை
ஒரு கிளிமட்டும் கிளையில் சோகமாய்
என் வீட்டுக்கு வா ...

அம்மா எப்பொழுதும் விரதம் ..
கோயிலில் நித்தம் தீபம் ஏற்றியபடி
பூசுமஞ்சள் வாங்கி வைத்து இருக்குறா
சோப்பில் வாசனை கூடியதும் இருக்கு
உன் வரவுக்காய் அடி என்னவளே
என்னோடு வா என் வீட்டுக்கு பெண்ணே ..

சீயக்காய் அரைத்து முழுகி உன்
தலைவாரி தூபம் காட்டி பின்னல் இட்டு
அதில் மல்லிகை வைத்து அழகு பார்க்க
உன் மாமி காத்து இருக்கா என் அம்மாவா
என்னோடா வா என் வீட்டுக்கு காதலியே .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக