ஞாயிறு, 22 ஜூன், 2014

மனச்சுவர் ...!

பேசாத வார்த்தை நொடியில் ...
கரைந்து போனது என் வலி ...
மவுனம் என்னை மவுனியாக்கி ..
வேடிக்கை பார்க்குது மனவெளியில் ..
எதிர் திசை நீ வரும் போதும் ..
உன்னை தொட்டு வரம் காற்று ...
உன் மனக்கணக்கின் எண்ணம் சொல்லும் ..
ஆனாலும் நான் மவுனமா ..
என்னை கடந்து போகையில் ..
நீ வீசி செல்லும் விழி  கேள்விகள் ..
என் இதயத்தை ஒருமுறை உசுப்பும் ..
ஆனாலும் நான் மவுனமா ..
உன்னை அறியா வயதில் பார்த்து ...
தெரியாத காதல் மொழி பேசி ..
இன்று காதல் வயதில் காணும் போது ..
கலங்குதடி கண்கள் இரண்டும் ...
நான் சொல்ல வரும் ஏக்கம் ..
உனக்கு வலிதரலாம் ஆதலால் ..
நான் மவுனமா ....
ஒரு வேலி ...ஒரு ஓணான் என..
பேசி திரிந்த அழகிய காலம் ..
மீண்டும் வராது என தெரிவதால் ..
இப்பொழுதும் நான் மவுனமா ...
காதல் எம்மை பிரித்ததா அல்லது ...
களமும் ...சூழலும் சுற்றி விட்டதா ..
யார் அறிவார் உன்னை மீண்டும் ..
காணும்போது கணவனுடன் வருவாய் என..
என் மனசுவரில் ஒரு ஓரமா ..
நீ இருப்பதால் உன்னை கடந்து ..
போகிறேன் நான் மவுனமா .

1 கருத்து: