ஞாயிறு, 22 ஜூன், 2014

என் அப்பா ..!

அப்பா ஒரு அழகிய சிற்பி..
என்னை செதுக்கிய போது வலித்தது ..
செதுக்கிய பின் என்னை பார்த்தா ..
எனக்கே ஆச்சரியம் அவ்வளவு அழகு ..
பல முரணுக்கு செந்தக்காரர் அப்பா ..
என் பார்வையில் அப்படியே ஆனால் ..
உள்ளாத்தம் என்னை சீர்படுத்தல் என்று ..
எனக்கு அப்பொழுது தெரிய வாய்ப்பில்லை ..
இளமையும் வேகமும் கேட்கும் நிலையில் ..
எனக்கு இருக்கவில்லை அறிவுரை வதையே ..
பொய்சொல்லி பணம் கேட்கும் போதும் ..
சொல்வது பொய் என தெரிந்தும் கண்டுக்காமல் ..
மேலதிகமா தந்துவிட்டு வேளைக்கு வா என ..
சொல்லிவிடும் அற்புத ஜீவன் அப்பா ..
என்ன செய்கிறாய் என்று இன்றுவரை என்னை ..
கேட்டது இல்லை என்னுள் தான் இருப்பதா ..
பலமுறை அம்மாவிடம் சொல்லி இருந்தார் ..
அவன் என்னைபோல எங்கு போனாலும் ..
தன்னை காத்து கொள்ளும் அறிவு இருக்கடி ..
என என் பின்னாடி பெருமை பேசும் இறை ..
கள்ளுக்கு வைத்த காசை பலமுறை ..
களவாடி போயிருக்கேன் இன்று ..
பல போத்தில் வாங்கி கொடுக்கும் நிலை ..
ஆனால் அப்பாத்தான் இறைநிலை ..
ஒரு முறை பலமா அடித்து விட்டார் ..
எண்ணை போட்டு உருவியபடி சொன்னார் ..
இனி என் கை உன்னை தட்டி கொடுக்க மட்டும் ..
உன்னில் படும் மகனே என்று செயலிலும் செய்தார் ..
சும்மா தட்டினா சொரணை கெடும் என்பார் ..
நீ சுயமா சிந்தி நீதான் ராஜா உனக்கு என்பார் ..
பாசத்தை கோவமா காட்டும் தாயுமானவர் .
என் அப்பா .


1 கருத்து: