ஞாயிறு, 22 ஜூன், 2014

மகனதிகாரம் ..!

1
இறுக்கி பற்றி பிடித்து இருந்த ..
உன் கைகள் லேசாய் பிடி தளரும் ..
போது நான் புரிந்து இருக்க வேணும் ..
நீ வளர்த்து வருகிறாய் என்று ..
மகனே ...

2
ஓடும் உன் மகனை ...
பிடிக்கும் வயதில் நான் ..
இல்லை மகனே ..
முதுமை .!

3
அப்பா என்று என்னை நீ அழைத்தபோது ..
இன்னும் ஒருமுறை கூப்பிட மாட்டானா ..
என் பிள்ளை என்னை என்று ஏங்கிய..
என்னை இப்பொழுது உனக்கு ஒன்னும் ..
தெரியாது போப்பா அங்கால என்கிறான் ...
லையிட்டா வலிக்குது மகனே மனது ..!

4
என்ன உனக்கு தொப்பை எட்டி பார்க்குது ..
என்று கேட்பவர்களுக்கு தெரியுமா ..
அது உனக்காக வளர்த்து தொப்பை என்று ..
நீ சிரித்து சறுக்கி விளையாட மகனே ..!

5
உன்னுடன் மிட்டாய்க்கு இட்டா ..
சண்டையை விட உன் எச்சில் ..
முத்தத்துக்கு இட்ட சண்டைதான் ..
நினைவிருக்கு மகனே ..!

6
உன் ஊச்சா என் நெஞ்சை ...
நனைக்கும்போது தான் ..
என் மனது குளிருது மகனே ..!

7
நீ அப்பா என இழுக்கும் இழுவையில் ..
தெரிந்து விடும் எனக்கு உனக்கு ..
மிட்டாய் வேணும் என்று மகனே ..!

8
நான் தடி எடுப்பது பார்த்து ...
உன் கண்கள் கலங்கியது போது....
என் அப்பா நினைவில் வந்து போனார் ..
நான் கலங்கிய கணங்களும் அவ்வேளையே..
மகனே ....!

1 கருத்து:

  1. அப்பிடியே மனைவியதிகாரம் ஒண்டு எழுதினால் என்ன ?? கவிதைக்கு வாழ்த்துக்கள் அஞ்சரா .

    பதிலளிநீக்கு