அன்னை மண் சிந்திய கண்ணீர் ..
அணையாது காக்கப்படும் தீபம் ....
அணையாது காக்கப்படும் தீபம் ....
அண்ணனவன் ஆளும் காலம் ..
அனைவரும் இணைவோம் பலமா ..
அனைவரும் இணைவோம் பலமா ..
ஆளான ஆலமரங்கள் ..
ஆழியில் அகப்பட்ட துரும்பு போல் ..
ஆழியில் அகப்பட்ட துரும்பு போல் ..
ஆழமா உள் இழுக்ப்படும் மூச்சு ..
ஆணிதரமா முகத்தில் அறைந்தது ..
ஆணிதரமா முகத்தில் அறைந்தது ..
இலை என்று நினைத்தவர் எல்லாம் ..
இல்லை இது இமயம் என்று வியக்க ..
இல்லை இது இமயம் என்று வியக்க ..
இன்னொருவன் வருவான் எமக்கு ..
இனத்தின் இருளை போக்க ..
இனத்தின் இருளை போக்க ..
ஈ ஆக பறந்து போகாது ..
ஈட்டி போல பாய்வோம் நாம் ..
ஈட்டி போல பாய்வோம் நாம் ..
ஈனர் செயல் அறுத்து வீழ்த்த ..
ஈன்றவள் பெரு மகிழ்வு கொள்ள ..
ஈன்றவள் பெரு மகிழ்வு கொள்ள ..
உலகம் ஒருநாள் புரியும் எம்மை ..
உண்மை அறிந்து தலைகள் குனியும் ..
உண்மை அறிந்து தலைகள் குனியும் ..
உன்னத இலட்சியம் வெல்லும் காலம் ..
உணர்வுடன் நாம் மாவீரம் போற்றுவோம் .
உணர்வுடன் நாம் மாவீரம் போற்றுவோம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக