ஞாயிறு, 4 அக்டோபர், 2015

வலி மிகு தருணம் .

மீட்டுக்கொண்டே இருக்கிறேன்
இசையை அல்லா நினைவை
பழையவை தான் ஆனாலும்
அவை விட்டு போன வடுக்கள்
சாகாவரம் பெற்றவை .....

இசை அறிந்து பாடல் சொல்வோம்
ஒரு வயது காலம்
இரைச்சல் வைத்து விமானம் எதுவென
சரியாக சொன்ன காலம் அது
சன்னங்களின் சத்தம் கேட்டு என்ன
வகை ஆயுதம் என கணித பொழுதுகள் ...

இன்று கிண்ணத்தில் விழும் துளி சத்தம்
வெளியில் அடைமழை என சொல்லும்
எண்ணிய எண்ணத்தில் இரத்தம்
இன்னும் உடலில் இருக்குதாம்
சிறு துண்டு குண்டு ...

தாங்கி தாங்கி வலிகளை சுமந்து
தாங்காது என அறிந்தும் வலிமை பெற்று
தங்களுக்கு வாழும் காலம் வந்த போது
தங்களுக்கு வாழ்வில்லாமல் போனதே
இன்னும் துயர் சுமந்து .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக