ஞாயிறு, 4 அக்டோபர், 2015

ஒரு தலைமையை உருவாக்க வேணும் .

விடுதலைப்புலிகள் என்னும் அமைப்பு ,அதன் தலைவர் பிரபாகரன் வழிநடத்தல் இல்லாமல் போன பின் ,அந்த அமைப்பு அல்லது நாம் தான் புலி என சொல்பவர்கள் பின்னாடி போவதற்கு மக்கள் தயாராக இல்லை என்பதை, இந்த ஈழ தேசியவாதிகள் ,நாம் தான் அடுத்த புலிகள் என சொல்பவர்கள் புரிந்து கொள்ளவேணும் .....

நீங்கள் இனி ஈழ தேசியத்துக்கு உண்மையானவர்களாக ,நேர்மையுடன் உழைக்கலாமே தவிர நாம் சொல்வதை, நாம் காட்டும் பாதையில் தான் இனி ஈழ தமிழர் நடக்க வேணும் என நீங்கள் போடும் கணக்கு தவறு ....

அந்த நேர்மையும் ,உறுதியும் ,கொள்கை பற்றும் பிரபாகரன் என்னும் ஒரு மனிதனுக்கே இருந்தது ,இனி நீங்கள் அவரை உதாரணமாக கொண்டு நடக்க முனையவேண்டும் அதை விட்டு நாம் தான் ஈழ மீட்ப்பர்கள் எங்கள் பின்னாடி வாருங்கள் ,நாம் சொல்வதை கேளுங்கள் ,நாம் எதிர்ப்பவனை எல்லாம் எதிர்த்து நில்லுங்கள் என கட்டளை இடுவதை நிறுத்தினால் நல்லது ...

முன்னாள் போராளிகளாக இருந்தாலும் சரி ,தளபதிகளாக இருந்தாலும் சரி இனி நீங்கள் மக்களில் ஒருவர் ,ஆகவே மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்ய முனைய வேணும் அதை விட்டு, இப்படி செய் அப்படி செய் என புலம்பெயர்த்து இருந்துகொண்டு நாட்டில் உள்ளவனை மேய்க்கா எத்தனிப்பது பிழையான சிந்தனை .....

அரசியல் போராட்ட வழிகளில் இன்னும் ஒரு பத்து வருடத்தில் ,இதே ஐநா எமக்கு சாதகமா மாறலாம் அதுக்காக இன்னும் உழைக்க வேண்டிய தேவை இருக்கு ,அதை விட்டு அவன் பிழை, இவன் பிழை, அவனை ஆதரி , இவனை ஆதரி ,நாம் சொல்வதை கேள் என்று, அதி உச்ச தேசியவதிகளாக காட்ட நினைப்பவர்கள் நிறுத்த வேண்டிய காலம் இது ....

ஒன்றில் இணைத்து கூட்டு வேலை செய்யுங்கள்,அல்லது ஒதுங்கி ஓரமா இருங்கள் குட்டையை குழப்பி விட்டு வேடிக்கை பார்க்காமல் ,அங்கு துடிப்பது தமிழர் என்னும் மீன்கள் தான் என்பது உங்களுக்கு நன்கு தெரியும் ...
யார் குற்றியாவது அரிசி ஆகட்டும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக