புதன், 14 அக்டோபர், 2015

வித்தியா வாடாத பூ .

எல்லாம் மறந்தாயிட்டு 
என்றில்லை மறைந்து வாழ்கிறேன் 
சிரித்தபடி கடந்து போகலாம் 
வலி இருப்பது உள்ளே அல்லவா 
இன்ப திளைப்பில் கூட 
ஒன்றிட முடியாத ரணம்
சொல்கொண்டு வருவாள்
சிலவேளை
அரசியல் கொண்டு வருவாள்
பலவேளை
எதிர்காலம் பற்றி அதிகம் பேசுவாள்
முடிவு எடுக்க பேசலாம் ஆனால்
முடிவை எடுத்து விட்டு வந்தால்
தன் முடிவில் முடியும் வரை
பேசுவாள்
விடியோவில் ஆள் தெரியவில்லை
ஆளா முக்கியம் குரல் கேட்குது தானே
பதில் வரட்டும் என்பாள்
எங்க வளைச்சு பந்தை போட்டாலும்
எல்லைகோடுகள் தாண்டி போகும்
நீ ஒருத்தி மட்டும் போது
என்னுள் இருந்த இறுமாப்பு
கதைக்க விடாமல் கதைப்பாய்
இன்று தவிக்க விட்டு போனாய்
நாளை பொழுதுகள் ஒவ்வென்றும்
சர்ப்பம் வாய் தவளைபோல் நாம்
உன் கேள்விகளுக்கு தான் என்னிடம்
விடையில்லை
உன் தீர்ப்பில் மட்டும் என்னிடம் விடையிருக்கு
காலச்சக்கரம் சுழண்டு வரட்டும்
காத்திருப்போம் வன்மத்துடன் மகளே .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக