வியாழன், 22 அக்டோபர், 2015

வேர் இருக்கு .

கிளைகளை வெட்டி விட்டேன் 
பக்கத்துவீட்டுக்காரன் ஒரே சத்தம் 
காணியை கடத்து கொப்பு வருவதாக 
மீண்டும் மீண்டும் துளிர்த்து 
அத்திசையே  போகிறது  
கொஞ்சம்  யோசிச்சேன் 
மரம் இருந்தால் தானே 
மாதம் மாதம் வெட்டும் வேலை 
நச்சரிப்பு தாங்கும் எண்ணம் இல்லை 
இனி 
ஆதலால் மரத்தை அறுத்து விட்டேன் 
அட  ஆறுதலா அமரும் இடம் 
எந்த போக்கத பயல் வெட்டியது 
பக்கத்துக்கு  வீட்டு  கிழவி இது 
ஒம்மென ஆச்சி என்றால் பேத்தி 
எதிரில் வந்த வேலிக்காரன் 
ஏன் மரத்தை வெட்டினியல் என்றான் 
இருக்கும் போது என்னை 
நீ 
இருக்க விட்டியா இப்ப சோகம் 
வேர்  இருக்கு மீண்டும் துளிர்க்கும் 
கிளை என் பக்கம் வரட்டும் 
பிள்ளைக்கு ஊச்சல் கட்டனும் 
இது அவன் 
சேர்த்து இருத்து கதை  பேசலாம்
இனி  
இது நான் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக