வியாழன், 5 செப்டம்பர், 2013

ஒரு போராளியின் குறிப்பேடு ..!

ஊரை உறங்க செய்து
நாய்களுக்கு தெரியாமல் நடந்து
வெள்ளி பார்த்து திசை பிடித்து
அவன் எல்லையை தொடும்போது
ஆந்தைகள் முழித்து இருக்கும்

அவன் மட்டும் விடிகாலை பொழுதில்
குறக்கண்ணில் தூங்கி விழித்து இருக்க
அவன் கால் அருகில் அரவம்போல் நகர்த்து
அவனை கடந்து போகும்போது உள்ளம்
மகிழ்த்து இருக்கும் உள்ளுக்குள்

உள்ளே வந்துவிட்டம் என இறுமாந்து நிமிர்த்து
நடந்து போகையில் எதிரே ஒரு கேள்வி வரும்
யாரு நீ எங்க போற .....பதில் யோசிக்க முன்
சுடும் விசை கிழ நோக்கி போகும் அதன் டிக் ஒலி
அவன் காதிலும் விழும் இருவருக்குள்ளும்

ஒரு நொடி மவுனம் பேசும் அத்துடன் கலைக்கப்படும்
சொன்ன இடத்துக்கு வந்து சேர் என உரக்க கூறி விட்டு
வலம் இடமா பாய்த்து வேட்டுக்களை தீர்த்து எம்மை
காப்பற்றி விட்டு மறுநொடி மனது சொல்லும் இவன்
மாட்டிட்டனோ இல்லை இருக்காது போய் இருப்பன்

இல்லை எதுக்கும் ஒருமுறை பார்த்து வருவம்
என மீண்டும் அவன் நிலைக்கு மெதுவா  வந்து
உற்று நோக்கி ஓகே போயிட்டான் என மனது
ஒரு முடிவுக்கு வர முனகல் சத்தம் பக்கத்தில்
மச்சான் என இருளில் தடவி என்ன ஆச்சு என
சைகையில் கேட்டு அவன் கைகளை இறுக்க பற்றி

நீ போயிடு நான் முடிவு எடுத்துட்டன் என சொல்லு
எம்மை அனுப்ப அவன் தன்னை அழிக்க நினைத்து
நான் கவர் கொடுக்குறன் நீங்க வேலிய தாண்டுங்கோ
என்று பிடிவாதம் பிடிப்பவனை  இல்லை மச்சி அடிச்சு
பிரிச்சு போவம் வாறது வரட்டும் அது ஒண்டும்
பெரிய சிக்கல் இல்லை என சகதோழன் கூறி

இவனை நான் தோளில் போடுறன் நீ குண்டை கலட்டி
கையில வைச்சு இரு நிலைமை மோசம் எண்டா
அடி அல்லது போயிடுவம் விடிய முதல் ஓகே என
ரகசியம் பேசி அவன் கம்பி வேலியை வெட்டி கடந்து
வந்தவுடன் ஒரு துள்ளல் வரும் உலகில் அப்பொழுது
போல் ஒரு ஆனத்தம் இல்லை நட்பை மீட்டு வருவது

ஒரு போராளியின் குறிப்பேடு ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக