சனி, 14 செப்டம்பர், 2013

வேதனை .!

கானகம் வயல் வெளி நடந்து
காரிருளில் கந்தகம் சுமந்து
இளமை துறந்து கல்வி துறந்து
வாழ்வின் வசந்தங்கள் தூக்கி தூரபோட்டு

என் மண் என் மக்கள் என சுவாசித்து
என் தலைவனை உயிரிலும் மேலாய்
விசுவாசித்து நேசித்து ஒரு இலக்குக்கு
தோழர்களுடன் சேர்ந்து பயணித்து
மீண்டு வரும்போது

அவர் உடல்கள் தூக்கிவந்து தாங்கி வந்து
வலி சுமந்து இளைப்பாறும் போது
விடுதலை தீக்கு ஒரு சுள்ளி ஏனும்
முறித்து போடாதவர் எம்மை நிக்க வைத்து
கேள்வி கேட்கிறார் நீ யார் எதுக்கு சாகவில்லை

எப்படி வந்ததாய் தாங்கள் கெட்டித்தனமா
முன்னமே வந்ததால் போராளிகள்
நாங்கள் முட்டாள் தனமா கடைசியா
வந்ததால் துரோகிகளாய் அனுப்பபட்டவர்கள்

தேசியம் குழப்ப செயல்வீரரை பிடிக்க
உண்மையை அறிய நிலைகளை கண்காணிக்க
கேட்காமல் சும்மா கிடைக்கும் துரோகிபட்டம்
நாம் நாலுபேர் இப்ப முடிவு எடுக்கும் வட்டம்
எதுக்கு இந்த ஆர்ப்பாட்டம் எதுக்கு இந்த கூப்பாடு

40ஆயிரம் போராளிகள் 2லட்சம் மக்களின் இழப்பை
விடுதலை கனவை அவர்களின் தியாகத்தை
எனது என சொல்ல எவர் கொடுத்தார் உங்களுக்கு அனுமதி
ஈழ தமிழன் என்கிற அடையாளம் போதும்
உங்களின் வேஷம்களை கலைக்க
உங்கள் ஆட்டைகளை உலகம் அறிய செய்ய

மீண்டும் வருவார்கள் புலிகள் அதுக்கு முன்
புலிகளை வைத்து பிழைப்பவரிடம் இருந்து
புலிகளை காப்பற்ற வேணும் ஒரு தமிழனா
என் நெஞ்ச்சு பிளந்து என் தலைவனை காட்ட
நான் ஒன்றும் அனுமான் இல்லை வலிகள் பட்ட
அகதி தமிழன் வேஷம் போடா ஈழ தமிழன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக