திங்கள், 23 செப்டம்பர், 2013

விளங்கவில்லை ..!

மக்களின் தீர்ப்பை இனத்தின்
விதியை ஒருசிலர் கையில் எடுத்து
நாங்கள் சொல்வதை மட்டும் எழுத்து
என முனிவர் கணக்கா கதை சொல்ல
கொம்பு உடைத்து எழுதிய கணபதிகள்

சிங்க கொடிபிடித்து விட நீ இன துரோகி
சிங்களத்தின் அருவருடி மாமா வேலை என
தலைமை செய்த தெரிவை நாங்களே
மாற்றுவோம் என பொங்கினர் இங்கின
பல தலைமை விளங்கவில்லை ...

பலர் வெளிய போயினர் சிலர் உள்ளே வர
இவர்கள் சரிவறார் கொள்கையை விடுகிறார்
நாங்கள் தொடங்குவோம் புது கட்சி தேசியம்
பேசினோம் தேசியத்தை தூக்கலா பேசினோம்
எவரும் மதிக்கவில்லை காரணம் விளங்கவில்லை ..

காலம் நெருங்கி வர ஈழம் விடை சொல்லும்
நேரம் காத்திருந்த மக்கள் பழைய பாடம் மறவாது.
மேல்குடி மகன் வடக்கு தெரியாதவர் இவர் வேணாம்
புலம் பெயர்த்த புலிகள் என சொல்லிக்கொள்வோர்
வசைகளை கையில் எடுத்தனர் சிங்கள் உறவுக்காரன்
சம்மந்தி வேற கணவன் மனைவி எங்கிறான் ..


என்ன தெரியும் இவருக்கு புலி அல்ல பூனை
இது நேற்று வந்தவர் எமக்கு வகுப்பு வேற
இதுக்கும் ஈழத்து சில ஜால்ரா மணிகள் பாராட்டு
என்ன இது அவர் என்ன ஈழத்தை விக்கவா வந்தார்
மொத்தமா வாங்கா வந்தார் எதுக்கு இவ்வளவு குதியல்
யோசிச்சேன் விளங்கவில்லை ..

மையை கையில் எடுத்த என் உறவு ஈழ மக்கள்
பூசினர் வீடுக்கு மிகுதியை பூசினர் எதிரி முகத்தில்
அடித்து போட்டு நெற்றியில் துப்பாக்கி வைத்தாலும்
உன்னை சுட்டு எரிப்பேன் என அச்சுறுத்தல் இட்டாலும்
என் வாழ்வும் சாவும் மண்ணுக்கும் மக்களுக்கும் போனால்
என் வாழ்க்கை வரலாறு ஆகும் ...

அரியணை ஏற்றினர் எடுத்த முடிவை சரியாக்கி
சினிமா கூத்தாடியை நம்பி பிழைக்க நாங்கள் என்ன
முட்டாள்கள் அல்ல தலைவன் நிழலில் வளர்த்த மக்கள்
சிலர் மதில்மேல் பூனையை போல விழி பிதுங்கி நிக்க
துரோகி என கூவியோர் கூட்டமைப்பின் வெற்றியை
தங்களின் வெற்றி என்கிறார் இப்பொழுது

முன்னம் அதிகாரம் இல்லை பொம்மை வேணாம் என்றார்
இப்பொழுது அவர் அதை செய்ய வேணும் இதை செய்ய வேணும்
தலைவனை மறக்காமல் மாவீரரை மறக்காமல் நடக்க வேணும்
வேண்டுகோள் போடுகிறார் விமர்சனம் சொல்கிறார் அதுதான்
அதிகாரம் இல்லா பதவி எப்படி முடியும் அவர் இவளவும் செய்ய
அதுதான் எனக்கு விளங்கவில்லை .....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக