வியாழன், 30 அக்டோபர், 2014

கவிதை வருகிறது ...!

மழையை என்றால் குடையும் கூடவே ..
வானம் என்றால் முகிலும் கூடவே ...

மரம் என்றால் காற்றும் கூடவே ..
நிலா என்றால் நட்சத்திரம் கூடவே ..

ஒன்றை விட்டு இன்னொன்று தேடலில் ..
என்னை விட்டு உன்னை தேடலில் ..

உன் கண் கண்டபின் காதல் தேடலில் ..
இருவரும் சேர்கையில் காமம் தேடலில் ..

எல்லோரும் போல் உன்னை ரசிக்க ..
எல்லோரும் போல் உனக்கு பொய் சொல்ல ..

எல்லோரும் போல் உன்னை வர்ணிக்க ...
எல்லோரும் போல் நான் புலவன் இல்லை ..

என்னுள் மறைந்து இருந்து பார்க்கும் ..
என்னுள் என்னை தேடும் காதல் ..

உன்னில் மட்டும் வராமால் போகுமோ ..
எம்மை நாம் ஆக்கும் காலம் வரும் ..

அதுவரை நம் காதல் கவிதையில் ..
வாழட்டும் ரசனையில் இருக்கட்டும் ..

எம் குடில் நாம் அமைக்கும் வரை ..
என் இதய குடிலில் நீ உறங்கு ..
காதலே .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக