ஞாயிறு, 5 அக்டோபர், 2014

வெடிச்சத்தம் ..!

முதல்  வெடியோசையில் பிறக்கிறது காதல் ..
பக்கத்துக்கு கூடாரம் யாராக இருக்கும் ..

எண்ணிய வேளையத்தில் பிள்ளை வேகமா வா ..
என் அழைக்கும் அவள் அம்மாவின் சத்தம் ..

நிலா ஒளியில் அவள் நிலா முகம் பார்க்கிறேன் ..
ஓடி சென்று மாமர அருகில் இருந்தவாறு ..

ஒன்னை பெத்து வைத்திருக்கிறேன் ..
கட்டிகாக்க நான் படும் பாடு பெரும்பாடு .
.
என்னும் ஏக்க பெரும்மூச்சு விடும் அவள் அம்மா ..
கற்பூர வள்ளி போல வாடாமல் இருக்கிறாள் ..

கண்களில் மட்டும் சிறு நீர் நிரம்பி இருக்கு ..
அது ஒரு வயது பார்த்தவுடன் வாழ்க்கை கொடுக்கும் ..

கட்டினால் இப்படி ஒரு பிள்ளையைத்தான் ..
என்னும் மன ஓட்டத்தில் இயங்கும் நிலை ..

எம்மை பற்றி சிந்தித்ததை விட அவளை பற்றி அதிம் ..
அடிக்கடி பவுடர் போடும் முகம் ..

உள்ளம்கையில் எப்பொழுதும் இருக்கும் சீப்பு ..
வெளியில் அவள் முகம் காட்டும் போது ...

மெதுவா அவள் தடுக்கு படலையை விழி மேயும் ..
இருக்கிறோம் என்று தெரிந்தால் ஆமை போல் அவள் ..

எப்பொழுதுதான் பார்ப்பது என்று நினைக்கையில் ..
மீண்டும் ஒரு வெடி சத்தம் ....

என் காதல் வளராவது ஒவ்வெரு நாளும் ..
கேட்கட்டும் வெடிச்சத்தம் பெண்ணே .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக