ஞாயிறு, 5 அக்டோபர், 2014

பலம் ..!

அமர்த்து இருக்கிறார் நடுவில்.. 
ஆலாவட்டங்கள் ..சாமரங்கள் ..
கன்னியர்கள் கூட்டமாக விசியபடி ..
நீதியை காக்கும் சபையாம் அது ..
அன்றில் இருந்து இன்றுவரை உலகில் ..
ஓலம் இட்டார் எல்லாம் ஒடுவரும் இடம் ..
ஒப்பனைகள் கலையாமல் பார்த்தபடி ..
தளங்கள் பல போட்டு தலையாட்டி பொம்மைகள் ...
இன்னும் ஒரே பாட்டுக்கு ஆடுகிறது ..
இசையும் மாற்றம் இல்லை அவர்கள் ..
இயல்பும் மாறவில்லை குணங்கள் எப்படியோ ..
கூடியிருத்து பேசுகிற நேரம் மட்டும் ..
அவர்களுக்கு உலகம் வெளிப்பா தெரியும் ..
அப்பொழுது கூட ஒருபகுதி ஒளிப்பாக ..
அங்குதான் கனியம் இருக்கும் வளம் இருக்கும் ..
தங்களுக்குள் கைகுலுக்கி பங்கு பிரிப்பர் ..
வெளியில் வந்து போட்டோக்கு போஸ் கொடுத்து ..
பொங்கி எழுந்து உரையாற்றி கண்ணில் ..
சினம் காட்டி மீறல் என்பர் குற்றம் என்பர் ..
துரித செயல் என்பர் நடவடிக்கை வேகம் என்பர் ..
பாவம் ஏழைகள் எல்லாவற்றுக்கும் ஏமாந்து ..
பெருசா வருது பெரியவர்கள் பேசுவர் ..
நம்பிக்கை இருக்கு என்போர் நாவை அடக்குவர் ..
சுண்ணாம்பும் இல்லா இடத்தில் ...
சுகந்திரம் எதுக்கு என்று சபை முடிவு எடுக்கும் ..
நடுவில் அமர்த்து இருக்கும் அவருக்கு ..
இப்பொழுது மேலே மின்விசிறியும் ..
பக்கத்தில் ஏசியும் வேலைசெய்யும் ..
காட்சிகள் மாறி இருக்கும் ஆனால் அவர்கள் ..
உலக பார்வை மாறாது அப்படியே இருக்கும் ..
டாவின்ஸி கோட்ப்பாடு எங்களுக்கு .
படிக்கலாம் செயல்தான் கடினம் ..
சிறுபான்மை இனத்துக்கு .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக