புதன், 30 ஏப்ரல், 2014

எங்க அண்ணன் வரவேணும் .!

சாம்பல் மேட்டில் போட்ட ..
பூசணி விதை முளைத்து ...
கொடிவிட்டு அடர்த்து பரந்து..
நாலு திக்கும் அகல விரிந்து ..
தனக்கென ஒரு ராஜ்ஜியம் இட்டு ..
பச்சை பசேலென கண்குளிர இருந்த்தது ..
அதில் பூத்த பூக்களில் காய்யாகி வந்த ..
ஒரு பிஞ்ச்சு மண்ணுக்கு தன்னை கொடுக்க ..
மிகுதி இரண்டு எவனோ களவாடி போக ..
தேடிய தோட்டக்காரி கிடைக்காது ஏங்க..
கூட இருந்த இளம் பிஞ்ச்சும் சேர்த்து போக ..
பார்த்து இருந்த திருடர் தாம் பிடிபடுவம் ....
என்னும் பயத்தில் சூழ்ச்சி செய்தனர் ...
காணியும் தோட்டமும் உன்னது இல்லை ..
அதில் பூசணி கொடியே இருக்க வில்லை ..
என்று புரளி கிளப்பி பொய்யர் ஆக்கி ..
கொடியை மண்ணுடன் பிஞ்ச்சுடன் சேர்த்து ..
பிடிங்கி ஒளித்து வைக்கிறார்கள் அவர்கள் ..
அவர்களுக்கு தெரியாது முழு பூசணி ...
எங்கு வைத்தாலும் மறைக்க முடியாது என்று ..
ஒருநாள் நல்ல சேவகன் வருவான் ..
மீண்டும் சாம்பல் மேடு துளிர்க்கும் ...
மீண்டும் பூக்கும் .காய்க்கும் கொத்து கொத்தா ..
நம்பிக்கை எமக்கு இருக்கு கள்வரே ..
அன்று நீங்கள் அதே பூசணி விதைக்கு ..
உரமாக இருப்பிர்கள் சாம்பலாய் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக