புதன், 30 ஏப்ரல், 2014

யார் இடுவர் குங்குமம் ..!

உவகை கொ(ல்)ள் மனம்
உன்னை நினைத்து ..
உயிரில் கலந்து நீரில்
கலந்த உப்புபோல் ..
என்னுள் என்றும் உறைத்து
இருக்கும் பனி நீ ..
என் வெப்பம் தாங்காமல் ..
விலக கூடாது பெண்ணே ..

யான் நேசிப்பது உன்
இதய அறையில் ஒரு இடம் ..
கிடைக்குமா என் கல்லறை
கட்ட அங்கு என்றே ..
இறுதிவரை உன்
மூச்சுப்பட்டவது சிலவேளை நான் ..
உயிர்தெழகூடும் உறங்கிய
ஒரு சிறு விதையாய் ..

நீ சிந்தும் கண்ணீரில்
இருந்து நான் மெதுவா வளர ...
உன்னுடன் வாழ்த்த
காலத்தை நிழலா உனக்கு தர ...
இருவரும் அடிக்கடி சந்தித்த
குளத்தடி ஆலமரம் போல் ..
நான் மட்டும் போரில்
மரணிக்காமல் இருந்திருந்தால் ..

காதல் வாழ்த்து
இருக்கும் மங்கலமா ..
நீனு ஏன் இப்பொழுது
வாழவேண்டும் அமங்கலமா ..
நல்லவர்கள் நாலுபேர்
வாழ்த்தா போதும் ..
நீயும் வாழலாம் இவ் உலகில்.
p1031351.jpg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக