புதன், 30 ஏப்ரல், 2014

பிரியம்.!

வாடிய பூ மீது ..விழுந்த இலையின் மீது .
தேடிய காதல் மீது ..பாடிய பாடல் மீது ..
கூடிய உறவுகள் மீது ..நாடிய சொந்தங்கள் மீது ..
மறையும் சூரியன் மீது ..கரையும் சந்திரன் மீது ..
துளிர் விடும் விதை மீது ..தூவும் மலர் மீது ..
அதிகாலை கனவு மீது ...கம்பனின் கவி மீது ..
முகம் மறைக்கும் கன்னி மீது ..முடியாத கடல் மீது ..
வராத பணம் மீது ..வாங்கிய முத்தம் மீது ..
பாட்டியின் கதை மீது ...பாட்டனின் கைதடி மீது ..
மழலை அழுகை மீது ..மடிந்தவர் புன்னகை மீது ..
அதீத ஆசைகள் மீது ...ஆர்ருயிர் நண்பி மீது ..
என்னுள் தொலைத்தவள் மீது ..எழுதா கவி மீது ..
கண்ணாடி பொட்டின் மீது ..மருதாணி கைகள் மீது ..
தேய்த்து போன செருப்பின் மீது ..சுவர் படங்கள் மீது ..
காய்த்த கருவாட்டின் மீது ..கடைசி வார்த்தை மீது ..
கோலம் போடும் கால்கள் மீது ...வெட்டி போட்ட நகங்கள் மீது ..
குட்டி சுவர் மீது ..குதித்து விழும் வயல் கிணறு மீது ..
எண்ணில் அடங்கா பிரியம் எனக்கு ..

என்  எண்ணம் எல்லாம் பிரியத்தின் மீது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக