புதன், 30 ஏப்ரல், 2014

விண்ணப்பம் ..!

மாசி வந்தால் மனசில் ஒரு படபடப்பு ..
மயங்காத மங்கை மனதை உடைக்க முன் ..
மறுபடியும் போட்டுருவம் ஒரு விண்ணப்பம் ...
கண்ணே என்று தொடங்கவா ;இல்லை பெண்ணே ...
என்று பழைய பல்லவி பாடவா ,என் செல்லமே ..

எல்லோரும் தாமரைக்கு ..ரோஜாக்கு ஆசைப்பட ...
நான் மட்டும் செந்தாமரைக்கு ஆசைப்பட்டது தப்பா ..
சேறு உன்னை சுற்றித்தானே இருக்கு உன்னில் இல்லையே ..
உன்னை பறிக்குவரை என்னிலும் ஒட்டி பிடிக்கும் ..
உன்னை கைப்பற்றி விட்டால் நான் கழுவி விடுவேன் ..

உள்ளம் அது என்னது மெய்யடி நீ எந்தன் கவியடி ..
காதலர் தினம் வேஷம் உன் அப்பன் மனது விஷம் ..
என் அப்பத்தா பார்ப்பா தோஷம் நானோ உன் பாசம் ..
என்னை கைகழுவி போகாதே மழை மேகமே ...நான்
நெருப்பை உண்ணும் கோழியே உனக்கு கட்டுவேன் தாலியே ..

ஜாதி வேலி கடந்து பூ பறிப்பேன் உன்னை என் ..
மன கோயிலில் மகாராணி ஆக்கி மல்லிகை சூட்டி ..
காலையில் நீ முற்றத்தில் கோலம் போடும் காலம் ..
வரும்வரை எமக்கு காதலர் தினம் வேணாம் என்னவளே ..
கவிதையும் ;கடைக்கண் பார்வையும் போதும் வாழ்த்திடலாம் .

532776_2795656590395_361176095_n.jpg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக