புதன், 30 ஏப்ரல், 2014

பொங்கியநாள் .!

நல்லெண்ணெய் வழிய வைத்து ..ஊரில்
நல்லதண்ணி கிணறு தேடி போய்..வயலில்
அள்ளி முழுக்காட்டி விட்டா என் ..அக்காள்
அறுகம் புல்லு பிடுங்க போகையில்...தரைவைக்கு
மணியத்தின் லாரி வரும் கொழும்பில் ...இருந்து
மாமாக்கள் வாங்கி அனுப்பிய சீனவெடி ..கொண்டு

சிங்காரமா புது சட்டை போட்டு ..தலைசீவி
பொங்கல் பொங்கும் அம்மாக்கு ...உதவி
கட்டித்தரும் பொங்கல் கொண்டு மாமி ..வீடு
போகும்போது மனதில் வரும் வெட்கம் ..மச்சாள்
இங்கேரு மாப்பிள்ளை வாறாரு என்று சொல்லும் ..மாமா

வீட்டுக்கு வந்த உறவுகள் எல்லாம் ..கூடி
முற்றத்தில் தொடங்குவர் விளையாட்டு ..கிளி
சின்னவர் எங்களை தங்கள் காலுக்குள் ..வைத்து
தள்ளி விடுகையில் விழும் அடி முதுகில் ...உறைக்க
நினைவுகள் மட்டும் இப்பொழுதும் ...மனதில்


மீண்டும் அதே சந்தோஷம் மீளவேணும் ...நாட்டில்
என் வீட்டு முற்றத்து கோலத்தில் பார்க்கவேணும் ..எறும்பு
மறுபடியும் அவைகள் உணர்த்தவேனும் ஒற்றுமை ...பலம்
உழைப்பின் உயர்வும் சேமிப்பின் தேவையும் ..எமக்கு
அதுவரை சூரியனை பாராமல் நான் மாடிகளுக்கு ..நடுவில் .

pongal009.jpg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக